50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பட்டைய கிளப்பிய பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது.

இப்படம் வெளியாவதற்கு முன்பே, இப்படத்தின் டீசர், பாடல்கள் பட்டைய கிளப்பியது.

தற்போது வரை 85 நாட்களை கடந்துள்ள நிலையில் இப்படம் ஒரு சாதனை படைத்துள்ளது.

அதாவது. இப்படம் தொடர்பான வீடியோ பாடல்கள், வரிகள் அடங்கிய பாடல் வீடியோ, எல்லா படங்களும் அடங்கிய ஜீக் பாக்ஸ் ஆகியவற்றை சேர்த்து இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாம்.

Vijays Bairavaa movie received 50 million views in You tube

‘நல்லது செய்ய மட்டுமே பதவிக்கு வந்தேன்..’ மண்டியிட்டு உருகிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கான பதவியேற்பு விழா, ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்றது.

தலைவராக பொறுப்பேற்றவுடன் விஷால் பேசியது…

“இது ஒரு மிகப்பெரிய குடும்பம். அதனால் தான் அனைத்து சங்கங்களும் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். மாற்றம் வேண்டும் என்ற நம்பிக்கையால் நாங்கள் வந்துள்ளோம்.

தாணு சார், கேயார் சார், எஸ்.ஏ.சி சார் உட்பட அனைவரும் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் பிறந்துவிட்டது.

யார் வந்தாலும் நல்லது செய்ய வேண்டும் என்று உழைக்கிறோம். இன்றைக்கு முதல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தயாரிப்பாளர்கள் என்ற முதலாளியை எப்படி காப்பாற்றுவது என்று பேசினோம். நலிந்த என்ற வார்த்தையே இருக்க கூடாது. எங்களுடைய அணி 24 மணி நேரம் உழைக்கப் போகிறது.

உறுப்பினர்களுக்கு பென்சன் தொகையை முதலில் செயல்படுத்தவுள்ளோம்.

தலைப்பு, சென்சார், வரிச்சலுக்கை உள்ளிட்ட அனைத்து விஷயங்களும், அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பொதுவானதாக செயல்படும். திருட்டு விசிடிக்கு எதிராக ஒரு நல்ல விஷயம் நடைபெறவுள்ளது.

அது குறித்த முறையான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த ஒற்றுமையை வைத்து நிறைய விஷயம் செய்யலாம். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. உங்களுக்காக உழைப்பேன்.

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து ஒரு பிரம்மாண்டமான விருது விழா நடத்தவுள்ளோம். இந்தாண்டே அவ்விழா நடத்தி 10 கோடி வரை தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டுவோம்.

ஒட்டு மொத்த இந்திய திரையுலகம் ஒன்றிணைந்து இளையராஜா சார் நிகழ்ச்சிக்கு ‘இசைவோம்’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தவுள்ளோம்.

இவ்விரண்டு நிகழ்ச்சிகள் மூலமாக சுமார் 15 கோடி வரை இந்தாண்டுக்குள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டுவோம்.

அனைத்து சங்கங்கள் இணைந்து செயல்பட்டால் ஆகஸ்ட் மாதத்துக்குள் திருட்டு விசிடி இருக்காது. படம் செய்ய எண்ணம் உள்ள தயாரிப்பாளர் அனைவருக்கும் படம் பூஜைப் போடப்பட்டதிலிருந்து படம் வெளியாகும் வரை என்ன பிரச்சினை என்றாலும் உடன் இருப்போம்.

மானியம் தொடர்பாக பேச தமிழக முதலமைச்சரிடம் நேரம் கேட்போம். 10 ஆண்டுகளாக மானியம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவர் நேரம் கொடுக்கும் போது நேரில் பேசி வலியுறுத்திவோம்.

விஷால் என்பவர் ஏன் போட்டியில் நிற்கவேண்டும். ஏன் 2 பதவிக்கு எனக் கேட்டார்கள். நானும் நிறைய தயாரிப்பாளரிடம் போய் தலைவருக்கு நில்லுங்கள் என்று கேட்டேன்.

ஆனால், இறுதியில் நானே நிற்கவேண்டிய சூழல் வந்துவிட்டது. உங்கள் அனைவருக்கும்…. ” என்று கூறிவிட்டு மேடையில் முட்டிப் போட்டு வணங்கிவிட்டு “சத்தியமாக நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று வந்தேன்” என்று கண்கலங்கி தெரிவித்தார்.

Vishal speech at Tamilnadu Film Producer Council Ceremony

ஒரு சினிமா டிக்கெட்டில் ஒரு ரூபாய்; விவசாயிகளுக்கு உதவ விஷால் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது.

இதில் விஷால் தலைமையில் போட்டியிட்ட ‘நம்ம அணி’ பெருவாரியாக வெற்றி பெற்றதையடுத்து விஷால் சங்கத் தலைவர் ஆனார்.

இதனையடுத்து வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு உதவ விஷால் அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.

அதன்படி ஒரு சினிமா டிக்கெட் விலையில் தயாரிப்பாளர் பங்கில் இருந்து ஒரு ரூபாய் வழங்கப்பட உள்ளது.

அதாவது, ஒரு நாள், தமிழகத்தில் திரையிடப்படும் அனைத்து திரைப்படம், அனைத்து காட்சி, அனைத்து தியேட்டர் டிக்கெட் விலையில் ஒரு ரூபாய் பெற்று, அதை விவசாயிகளுக்கு கொடுக்க இருக்கிறார்களாம்.

இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் விவசாயிகளுக்கு பல கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From each cinema ticket 1 rupee will spend for Tamilnadu farmers says Vishal

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு ரஜினி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2017 – 2019-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகி களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் அதிகாரியாகப் பொறுப்பேற்று இந்தத் தேர்தலை நடத்தினார்.

விஷால் தலைமையில் போட்டியிட்ட ‘நம்ம அணி’ பெருவாரியாக வெற்றி பெற்றதையடுத்து, சங்கத் தலைவராக விஷால் வெற்றி பெற்றார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் ஆகியோர் பெற்றி பெற்றனர்.

கவுரவ செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா மற்றும் கதிரேசன் வெற்றி பெற்றனர்.

பொருளாளராக எஸ்.ஆர்.பிரபு பதவி ஏற்றார்.

புதிய நிர்வாகிகளின் பதிவேற்பு விழா சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவை ரோகிணி தொகுத்து வழங்கினார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட விஷாலுக்கு ரஜினிகாந்த் பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்…

“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

தயாரிப்பாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அந்த கடவுள் உங்களுக்கு துணை புரிவார். என்னுடைய வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Rajinikanth praises Vishal for Producer Council President post

தமிழுக்கு முருகன்; தெலுங்குக்கு விநாயகர்… ஆர்யா எடுத்த அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஞ்சப்பை இயக்குனர் ராகவ் தன் இரண்டாவது படமாக இயக்கியுள்ள படம் கடம்பன்.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யா, கேத்ரீன் தெரசா இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது.

இதே நாளில் தெலுங்கிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

தெலுங்கு பதிப்புக்கு கஜேந்திரடு என்று பெயரிட்டுள்ளனர்.

கடம்பன் என்றால் முருகப்பெருமானையும். கஜேந்திரடு என்றால் விநாயகப் பெருமானை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Aryas Kadamban movie release updates

தாணு தயாரிப்பில் விக்ரம்-தமன்னா நடிக்கும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த கபாலி, விஜய் நடித்த தெறி ஆகிய படங்களை தொடர்ந்து விக்ரம் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவிருக்கிறார் கலைப்புலி தாணு.

இப்படத்தை சிம்பு நடித்த வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கவிருக்கிறார்.

இதில் நாயகியாக தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விக்ரம் தமன்னா இணையும் முதல் படம் இது என்பதும், விக்ரமின் 53வது படம் இது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக இயக்குனர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.

Vikram Tamannah teams up for Kalaipuli Thanu project

More Articles
Follows