BREAKING போயி வேற வேலை இருந்தா பாருங்கடா; விஜய்சேதுபதி டென்ஷன் ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் வீடு, பிகில் பட தயாரிப்பாளர் அலுவலகம், பைனான்சியர் அன்புச் செழியன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர்.

விஜய்க்கு எதிராக பல வதந்திகளை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

அதுபோல விஜய் சேதுபதியும் மதம் மாற்றப்பட்டுவிட்டார் என்று சமூக வலைதளத்தில் பரப்பப்பட்ட கருத்துக்களையெல்லாம் பதிவிட்டனர்.

நடிகர் விஜய்யின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்யனும்.. – அர்ஜூன் சம்பத்

இதனால் டென்ஷன் ஆனார் விஜய் சேதுபதி.

எனவே ‘போயி வேற வெல இருந்தா பாருங்கடா’ என்று விஜய் சேதுபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

https://twitter.com/VijaySethuOffl/status/1227496726451257347

சந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் அனைவரும் நடிகர் ஆரி அருஜுனா விற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் அனைவரும் இன்று பிப்ரவரி 12ம் நாள் நடிகர் ஆரி அருஜுனா விற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

சந்திரா மீடியா விஷன்ஸ் எஸ் எஸ் திருமுருகன் தயாரிக்கும் இரண்டாவது படத்தில் நடிகர் ஆரி அருஜுனா உடன் லாஸ்லியா , ஸ்ருஷ்டி டாங்கேவை தொடர்ந்து பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடேசனும் தற்போது இணைந்துள்ளார்.

சந்திரா மீடியா விஷன் முதல் படைப்பாக யோகி பாபு நடிப்பில் பட்டிபுலம் என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தது, தற்போது இரண்டாவதாக தயாரிக்கவுள்ள பெயரிடப்படாத படத்தில் நடிகர் ஆரி அருஜுனா உடன் லாஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே, யோகிபாபு, செந்தில் ஆகியோரைத் தொடர்ந்து பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடேசனும் இணைந்துள்ளார் இவரைத் தொடர்ந்து இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு எல். கே. விஜய், இசை சி.சத்யா, கலை இயக்கம் வீரசமர், படத்தொகுப்பு தியாகராஜன்.m, சண்டைப்பயிற்சி ஹரி தினேஷ், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஆல்பர்ட் ராஜா.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

மனதில் இடம்பிடிக்கும் நம் வாழ்வின் காதல் பயணம் “ஓ மை கடவுளே” – இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளமை ததும்பும் காதல் கதைகள் தமிழ் சினிமாவில் அருகிவிட்டது. அந்த ஏக்கத்தை நீக்கி, தற்கால இளைஞர்கள் கொண்டாட, காதலை நவீன வடிவில் ஃபேண்டஸி கலந்து சொல்லும் படைப்பாக வருகிறது “ஓ மை கடவுளே”. டிரெய்லர், டீஸர் பெரும் வரவேற்பு பெற்று கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தே தீரவேண்டுமென, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை விதைத்திருக்கும் இப்படம் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகிறது.

இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அஷ்வத் மாரிமுத்து படம் குறித்து பகிர்ந்துகொண்டதாவது….

“ஓ மை கடவுளே” நம் வாழ்க்கையை சொல்லும் படைப்பு. நம் தினசரி வாழ்வில் நிகழ ஆசைப்படும் அதிசயங்களை, திருப்பங்களை, மற்றொரு வாய்ப்பை இப்படம் திரையில் காட்டும். இப்படத்தின் நாயகனுக்கு தன் வாழ்வை தானே வடிவமைக்கும் வாய்ப்பு ஒரு அதிசயமாக கிடைக்கிறது. அந்த பயணம் தான் படம்.

டிரெய்லர், டீஸர் வீடியோக்கள் சில திருப்பங்களை சொல்லிவிட்டது. விஜய்சேதுபதி பாத்திரம் வீடியோவில் வெளிப்படுத்தியது படத்தின் மையத்தை சொல்லியது போன்று இருக்கும் நிலையில், நீங்கள் கூறுவது கதையின் சுவாரஸ்யத்தை உடைத்து விடாதா என வினவியபோது …

படகுழுவாக நாங்கள் ரசிகர்களை இப்படத்தின் வித்தியாசமான பயணம் நோக்கி தயார் செய்யவே விரும்புகிறோம். அது ரசிகர்கள் படத்தை ரசிப்பதற்கு ஏதுவாகவே இருக்கும். மேலும் படத்தில் இன்னும் நிறைய திருப்பங்களும் ஆச்சர்யங்களும் காத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெறும் திருப்பங்கள் மட்டுமே இதன் கதை அல்ல. இது காதல் உணர்வுகளை, உறவின் சிக்கல்களை, நட்பின் வலிமையை சொல்லும் படைப்பு. ரசிகர்கள் படம் பார்க்கும்போது தங்கள் வாழ்வோடு இப்படத்தை தொடர்புபடுத்தி கொள்வார்கள். அவர்கள் வாழ்வின் பிரதிபலிப்பாக படம் இருக்கும். திருப்பங்களை சொல்லிவிடுவதால் படத்தின் ஆச்சர்யங்கள் தீராது. இது எல்லோர் மனதிற்கும் நெருக்கமான படைப்பாக இருக்கும்.

படக்குழு பற்றி பேசும்போது …

அசோக் செல்வனுடன் எனது நட்பு நீண்ட கால நினைவுகள் கொண்டது. படம் செய்ய வேண்டுமென்கிற எங்களது நெடுநாள் கனவு இப்படம் மூலம் நனவாகியிருக்கிறது. அசோக் செல்வனின் திறமைக்கு சரியான தீனி அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவரை பெரும் உயரங்களில் காண விரும்புகிறேன். இப்படத்திற்கு பிறகு அவர் வெகு பிஸியான நடிகராக மாறிவிடுவார். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு பேசும்படி இருக்கும். ரித்திகா சிங் தான் இப்படத்தின் ஆத்மா அவர் இல்லையெனில் அனு கதாப்பாத்திரம் முழுமை பெற்றிருக்காது. தனது கடும் அர்ப்பணிப்பால் அனு கதாப்பாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார் ரித்திகா சிங். வாணி போஜன் எங்கள் படத்திற்கு மற்றுமொரு பலம். பலர் நிராகரித்த நிலையில் அந்த கதாப்பத்திரத்தை புரிந்து மிக அழகாக செய்துள்ளார். விஜய் சேதுபதி எங்கள் படத்திற்கு கிடைத்த சிறப்பு. அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்படும். இப்படம் நம் வாழ்வை நாமே நெருங்கி பார்க்கும் பயணம். அனைவர் மனதிற்கு நெருக்கமான ஒரு படைப்பாக இப்படம் இருக்கும் என்றார்.

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து

இசை – லியான் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – விது அயன்னா

படத்தொகுப்பு – பூபதி செல்வராஜ்

கலை இயக்கம் – இராமலிங்கம்

உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்

உடைகள் – முகம்மது சுபையர்

சண்டைப் பயிற்சி – ராம்குமார்

பாடல்கள் – கோ சேஷா

புகைப்படம் – ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்

நிர்வாக தயாரிப்பு – நோவா.

மூவி ட்ராக்கர்ஸ்களை கட்டுப்படுத்த புரொடியூசர்ஸ் நியூ ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு திரைப்படம் வெளியானால் அதன் வசூல் நிலவரம் சரியாக தெரிய குறைந்த பட்சம் ஒரு வார காலம் ஆகும்.

ஆனால் ரிலீசான முதல் நாள் இரவு காட்சி தொடங்கிய உடனே ட்ராக்கர்ஸ் என்ற பெயரில் சிலர் முதல் நாள் வசூல் இத்தனை கோடிகள் என டன் கணக்கில் பொய்யை சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.

இவர்கள் திரைத்துறையை சார்ந்து இருக்கிறார்கள் என்பதால் இதை எல்லாம் நிஜம் என்றே நம்பி மற்றவர்களும் அந்த வசூல் தொகையை ட்ரெண்ட் செய்கின்றனர்.

சிலர் கொடுக்கும் கூலிக்காக இதை எல்லாம் செய்கின்றனர் என்பதை அறியாதவர்கள் தான் இதனை ட்ரெண்டாக்குகின்றனர்.

இப்படி அதிகப்படியான பொய்களை முக்கியமாக விஜய், அஜித் படங்களுக்கு சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் இந்த ட்ராக்கர்ஸ்.

சமீபத்தில் இவர்களின் பொய்யான தகவல்களால் மாட்டிக் கொண்டவர் நடிகர் விஜய்.

இதனால் பிகில் பட தயாரிப்பாளர், பைனான்சியர் வீடுகளில் வருமான வரி சோதனைகள் நடைபெற்றது.

இதை தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் விரைவில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

இதுபோல் தெலுங்கு திரையுலகிலும் பிரச்சினைகள் தொடரவே அங்குள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் (கில்டு) புதிய நடவடிக்கையை எடுக்கவுள்ளனர்.

அண்மையில் வெளியான ‘சரிலேரு நீக்கெவரு, அலா வைகுந்தபுரம்லோ’ ஆகிய படங்கள் வசூல் விவரங்களை அங்குள்ள ட்ராக்கர்ஸ்களும் இங்குள்ள ஒரு சிலரும் பொய்த் தகவல்களை போட்டி போட்டுக் கொண்டு அளித்தார்கள்.

வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள படங்களின் வசூல் விவரங்களை தயாரிப்பாளர் கில்டு சங்கமே வெளியிடப் போகிறதாம்.

இதனால் சரியான வசூல் விவரங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் சினிமாவிலும் இது நடைபெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏனென்றால் தங்களுக்கு பிடித்த நடிகர்களையும், லட்சணக்கணக்கில் பணம் கொடுக்கும் தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்த இது போன்ற வேலைகளில் ஈடுபடும் ட்ராக்கர்ஸை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பலரின் ஆவலாக உள்ளது.

Producers plans to control fake movie trackers

காதலன் ரிட்டன்ஸ்..; பிரபுதேவாவை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனராக தன் சினிமா பயணத்தை ஆரம்பித்த பிரபுதேவாவுக்கு நடிகராக ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் காதலன்.

இதன் பின்னர் பல படங்களில் நாயகனாக நடித்து விஜய், சல்மான் கான் உள்ளிட்ட பல நடிகர்களின் ஆஸ்தான இயக்குனராகிவிட்டார்.

தற்போது காதலன் ரிட்டர்ன்ஸ் ஆகிறார். ஆம். மீண்டும் நடிகராக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் படத்தலைப்பில் பிரபுதேவா நடிக்கும் படம்

பரதன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

முற்றிலும் புதிய வகையான கதை களத்தில் இந்த திரைப்படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Prabhu Deva teams up with Adhik Ravichandran

பெண்கள் பாதுகாப்பு குறித்த போலீஸ் மீம்ஸ்க்கு உதவிய அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்படத்தில் வரும் காட்சிகளை மீம்ஸ்களாக உருவாக்கி வருவதே பலரின் வேலையாக உள்ளது. இதற்காக நிறைய மொபைல் ஆப்கள் வந்துள்ளன.

அதிலும் வடிவேலுவின் மீம்ஸ்களுக்கு தான் தமிழகத்தில் நல்ல மவுசு.

தற்போது தேனி மாவட்ட காவல்துறையும் பொதுமக்களிடம் காவலன் ஆப் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மீம்ஸ்களை உருவாக்கியுள்ளது.

ஏ.எம். ரத்னத்துடன் இணைய மறுத்தாரா நடிகர் அஜித்.?

விஸ்வாசம் படத்தில் வில்லன் ஆட்கள் நயன்தாரா மகளை துரத்துவார்கள்.

அப்போது அவர் தன் அம்மா நயன்தாராவிடம் தெரிவிக்க, அதற்கு நயன்தாரா, ‘நீ கவலைப்படாத அவர் பார்த்துக்குவார்’ என்பது போன்ற வசனம் இருக்கும்.

அப்போது அஜித் வந்து காப்பாற்றுவார்.

அந்த காட்சியை மீம்ஸ் ஆக மாற்றியுள்ளனர்.

Kavalan SOS App பட்டனை அழுத்து என்பதாக அந்த மீம்ஸ் உள்ளது.

Ajith Viswasam movie scenes as memes for Theni Police dept

More Articles
Follows