தனுஷை தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் கால்பதிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மைனே பியார் கியா’ என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமான பாக்யஸ்ரீ, பாலிவுட்டை கலக்கியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது அவரது மகன் அபிமன்யூ தசானி,  அனுராக் காஷ்யப் பிலிம்ஸ் சார்பில் உருவாகவுள்ள புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நாயகியாக புதுமுகம் ராதிகா மதன் நடிக்க, வாசன் பாலா இப்படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்திற்கு `மர்த் கோ தர்த் நகி ஹோத்தா’ என்று பெயரிட்டு உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஜய்சேதுபதி.

கோலிவுட்டில் கலக்கிய தனுஷ், பாலிவுட்டில் கலக்கி வருவது போல், தற்போது விஜய்சேதுபதியும் அங்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

இப்படம் ஆக்‌ஷன் கலந்த காமெடி பின்னணியில் உருவாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

Vijay Sethupathi teams up with Anurag Kashyap for Mard Ko Dard Nahi Hota movie

‘கோபக்கார கமலுக்கு 3 தந்தைகள்…’ – ரஜினி உருக்கமான பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் அண்மையில் காலமானார்.

அவருடைய நினைவேந்தல் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் சற்றுமுன் நடைபெற்றது.

இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

அப்போது ரஜினி பேசியதாவது…

என்னுடைய நண்பர் கமல் அவர்களுக்கு 3 தந்தைகள். முதல் தந்தை அவரை பெற்றவர். 2வது தந்தை அவரை வளர்த்த சாருஹாசன். 3வது தந்தை அவரது முன்னேற்றத்திற்கு காரணமான சந்திரஹாசன்.

சாருஹாசன் அவர்களுடன் நான் நெருக்கமாக பழகியுள்ளேன். ஆனால் சந்திரஹாசன் அவர்களுடன் அவ்வளவாக பழகவில்லை என்றாலும் அவரை பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறேன்.

சினிமாவில் இப்போதுள்ள இளம் தலைமுறை நடிகர்கள் வைத்துள்ள பணம் கூட கமலிடம் கிடையாது.
இதை நான் வருத்தத்துடன் கூற வேண்டிய நிலையில் உள்ளேன்.

ஆனால் இதுபற்றி எல்லாம் கமல் கவலைப்படமாட்டார். தற்போது அவரிடம் கொஞ்சமாவது பணம் இருக்கிறது என்றால் அதற்கு சந்திரஹாசன்தான் காரணம்.

அவர் இனிமேலாவது பணம் விஷயங்களில் எப்படி இருக்க வேண்டும் என்று அவரது அண்ணன் சாருஹாசன்தான் சொல்ல வேண்டும்.

நீங்களெல்லாம் கமலின் கோபத்தை 10 சதவிகிதம்தான் பார்த்து இருப்பீர்கள். ஆனால் நான் 100 சதவிகிதம் பார்த்துருக்கேன்.

எனவே நான் கமலிடன் மிகவும் ஜாக்கிரதையா இருப்பேன்.

கமலிடம் சாருஹாசன் அன்பாக பேசுவார். ஆனால் சந்திரஹாசன் கொஞ்சம் ஸ்ட்ரிட்டாக இருப்பார்.

இப்போது சந்திரஹாசன் இல்லாததால் இனி எல்லாம் பொறுப்புகளும் சாருஹாசன் மீது உள்ளது’ என்று தன் நண்பர் கமல்ஹாசன் பற்றி பேசினார் ரஜினிகாந்த்.

I Have seen angry Kamalhassan says Rajinikanth

விஜய் பிறந்த நாளில் தனுஷின் ரம்ஜான் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் இயக்கி, தயாரித்து நடித்துள்ள ‘பவர்பாண்டி’ வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

ரம்ஜான் ஸ்பெஷலாக ஜூன் 23ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜூன் 22ஆம் விஜய்யின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

3வது மனைவியா நந்தினி; கார்த்தி தற்கொலைக்கு காரணம் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி புகழ் நந்தினியின் கணவர் கார்த்தி குளிர்பானத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.

அவர் தற்கொலைக்கு முயலும் முன்னர் 3 கடிதங்களை எழுதி இருக்கிறாராம். தற்போது அந்த கடிதங்கள் போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ளது.

ஒரு கடிதத்தை தன் மனைவிக்கும், மற்றொரு கடிதத்தை தன் அம்மாவுக்கும், 3வது கடிதத்தை தன் தங்கைக்கு எழுதியுள்ளாராம்.

அதில் தன் தற்கொலைக்கு காரணம், நந்தினியின் அப்பாதான் காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக சில விவரங்களும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மிஸ்டர் சென்னை பட்டத்தை ஒரு முறை வென்றுள்ளவர் கார்த்தி.

தற்போது தி.நகரில் பெரிய ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார்.

நந்தினியை திருமணம் செய்வதற்கு முன்பே இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவி பெயர் வெண்ணிலா.

நந்தினி மணக்க, அவரின் வீட்டாரின் சம்மதத்தை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்துள்ளனர்.

பின்னர் நந்தினிதான் விருப்பப்பட்டு எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்டு தனிக்குடித்தனம் செய்துள்ளார்.

தனுஷ்-ரஞ்சித் இணையும் படத்தில் ‘கபாலி’ கெட்டப்பில் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கிய கபாலி மாபெரும் வெற்றிப் பெற்றதையடுத்து மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இப்படத்திலும் கபாலி பட கெட்டப் போல நரைத்த தாடியுடன் ரஜினி நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அதற்காக அண்மைக்காலமாக நரைத்த தாடியுடன் காணப்படுகிறாராம் ரஜினிகாந்த்.

மலேசிய பிரதமருடன் சந்திப்பு, நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழா, தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஆகிய நிகழ்ச்சிகளிலும் ரஜினிகாந்த் இதுபோன்ற தாடியுடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அஜித் பிறந்தநாளை தெறிக்க விட ரெடியாகும் தியேட்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி அஜித் தன் பிறந்தநாளை கொண்டாட்டுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை தற்போதே அஜித் ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

சில இடங்களில் இலவச நோட்டு புக்குகள், அன்னதானம் ஆகியவற்றை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் தியேட்டர்களும் தயாராகி வருகின்றன.

அன்றைய தினத்தில், அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களான வீரம், ஆரம்பம், மங்காத்தா, வேதாளம், தீனா ஆகிய படங்களை சிறப்பு காட்சிகளாக திரையிட முடிவு செய்திருக்கிறார்களாம்.

கடந்த ஆண்டும் பல திரையரங்குகளில் அஜித்தின் படங்கள் திரையிடப்பட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows