ரீமேக் படத்தில் விஜய் மகனை ஹீரோவாக்கும் விஜய்சேதுபதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிரஞ்சீவியின் சகோதரி மகன் வ்வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடித்துள்ள படம் உப்பெனா.

இதில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை புச்சி பாபு சனா என்பவர் இயக்கியுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ரங்கஸ்தலம் பட இயக்குநர் சுகுமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படம் இன்னும் தெலுங்கில் வெளியாகவில்ல்லை.

ஆனால் அதற்குள் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.

தமிழ் ரீமேக்கில் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக முயற்சித்து வருகிறாராம். இது தொடர்பாக விஜய்யிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

புச்சி பாபுவே தமிழிலும் இயக்கவிருக்கிறாராம்.

கனடா நாட்டில் ஃபிலிம் மேக்கிங் படித்து வருகிறார் விஜய் மகன் சஞ்சய்.

இவரே சில குறும்படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகக்து.

Vijay Sethupathi plans to produce Vijay son Sanjays debut movie

ஊரடங்கிலும் உலக நாயகனின் ‘அறிவும் அன்பும்’ ரிலீஸ்; சூட்டிங் எப்படி நடந்தது?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கமல்ஹாசன் எழுதி, இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடலை அவருடன் சேர்ந்து பிரபலங்கள் பலரும் பாடியுள்ளனர்.

“அறிவும், அன்பும்” என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்பாடலை கமல், ஸ்ருதி ஹாசன், அனிருத், சித்தார்த், தேவி ஸ்ரீ பிரசாத், சித் ஸ்ரீராம், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, யுவன் சங்கர் ராஜா, ஆண்ட்ரியா, லிடியன், முகேன் ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்பாடலை நாளை ஏப்ரல் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட உள்ளனர்.

இப்பாடலுக்கு மஹேஷ் நாராயணன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

திங்க் மியூசிக் நிறுவனத்தால் வெளியிடப்படவிருக்கின்றது.

முதல் முறையாக ஜூம் செயலியின் மூலமாக ஊடக நண்பர்கள் முன்னிலையில் கமலும் ஜிப்ரானும் இணைந்து இப்பாடலை வெளியிட உள்ளனர். மற்ற கலைஞர்கள் வீட்டில் இருந்தபடி இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்களாம்.

இந்த பாடல் குறித்து கமல் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

யாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க இயலாத சூழ்நிலையில் உள்ளோம்.

அவர் அவர் பாடும் பகுதிகளை தனியாக படம் பிடித்துள்ளனர்.

அவர்களாகவே வீட்டில் இருந்தபடி படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

அவரவர் எடுத்த வீடியோக்களை கமலுக்கு அனுப்ப அதை எடிட்டர் தொகுத்துள்ளார்.

நான் பாடல் எழுதினேன், ஜிப்ரான் இசையமைத்தார். மற்ற பாடகர்கள் அனைவரும் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் இந்த நோக்கத்தினைப் புரிந்து உடனே பங்குபெற்றனர்.

இந்த கூட்டமைப்பு, எனது இனத்தின் பெருமையை இங்கு மட்டுமல்லாமல் இந்த உலகம் முழுக்க பறைசாற்றும்.

என கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ulaganayagan Kamals Corona alert song Arivum Anbum Song making

முதன் முறையாக 5 மொழிகளில் அசத்த வரும் ‘மாஸ்டர்’ விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாநகரம், கைதி ஆகிய இரு வெற்றி படங்களை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

இந்த படத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் இப்பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறதாம்.

இதற்கான பணிகளை விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

விஜய் நடித்துள்ள ஒரு படம் 5 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆவது இதுதான் முதன்முறை எனவும் கூறப்படுகிறது.

Vijays Master movie will release in 5 languages

கொரோனாவினால் தன் திருமணத்தை தள்ளி வைத்த புஷ்பா பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பஞ்சதந்திரா, பர்ஜரி, கோடிகொப்பா-3’ உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நடித்துள்ளவர் கன்னட நடிகர் ராஜ் தீபக்.

அல்லு அர்ஜீன் நடிப்பில் உருவாகவுள்ள புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் இவர்.

ஏற்கெனவே சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவருக்கும், மங்களூருவைச் சேர்ந்த சோனியா ரோட்ரிக்ஸ் என்பவரும் மே மாதம் 17-ந் தேதி திருமணம் செய்யவிருந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தங்கள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.

Actor Raj Deepak postpones his wedding due to covid 19 lock down

ஊரடங்கிலும் ‘பூதாளம்’ படத்தை ரிலீஸ் செய்த மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டெரர் வில்லன், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்டவர் மன்சூரலிகான்.

சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் அடிக்கடி கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக பிரச்சினைகள் தொடர்பாக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.

இன்று ஏப்ரல் 22 சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு, பூமிக்கு வர இருக்கும் ஆபத்துகள் குறித்தும், அதில் இருந்து நாம் பூமியை காக்க வேண்டும், என்றால் என்ன செய்ய வேண்டும் என்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ‘பூதாளம்’ என்ற குறும்படத்தை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார் மன்சூரலிகான்.

தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியதோடு, வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் மன்சூரலிகானும் நடித்துள்ளார்.

‘பூதாளம்’ குறும்படம், பூமி எப்படி இயங்குகிறது என்பதை பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும்படி எளிய முறையில் விவரித்துள்ளார்.

விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பூமியில் தோண்டப்படும் சுரங்கங்கள் மூலம் ஏற்படும் விளைவுகளையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் மன்சூர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா பிரச்சினையில், எத்தனை கோடி பணம் வைத்திருந்தாலும் அவர்களின் முதல் தேவையான காய்கறிகளும், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் மட்டுமே இருக்க, அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், அதற்கான இடமும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெருகிறது, என்பதை நாட்டு மக்கள் தற்போது ஓரளவு புரிந்திருக்கும் நிலையில், மன்சூரலிகானின் ‘பூதாளம்’ குறும்படம் விவசாய நிலங்களை அழித்து அப்பார்மெண்ட்கள் கட்டும் வியாபாரிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக போகும் சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் சாட்டையடியையும் கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் உலகமே கொண்டாடும் பூமி தினமான இன்று வெறும் வாழ்த்துகள் சொல்வதோடு நின்றுவிடாமல், பூமிக்கு வர இருக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த ஒவ்வொரு மனிதரும் தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும், என்ற எண்ணத்தில் நடிகர் மன்சூரலிகான் தயாரித்து, இயக்கி நடித்து வெளியிட்டிருக்கும் இந்த ‘பூதாளம்’ குறும்படம் ஆபத்தை அறியா மக்களுக்கான எச்சரிக்கையாக இருக்கிறது.

Mansoor Ali khans new movie about politics in Agriculture

 

மே 3க்கு பிறகு ஊரடங்கு நீடிப்பு..? ஏப்ரல் 27ல் பிரதமர் பரிசீலனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா என்ற கொடிய வைரசால் உலகமே கடும் பாதிப்படைந்துள்ளது.

தினமும் உயிர் பலி பல ஆயிரங்களை தொட்டு வருகிறது.

உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 25 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த தொற்றுக்கு எப்போது முடிவு? என உலகமே காத்திருக்கிறது.

இந்த தொற்றை கட்டுப்படுத்த மேலும் பரவாமல் தடுக்க உலகின் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.

இந்தியாவிலும் 2வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும்
ஏப்ரல் 27-ம் தேதி வீடியோ கான்பரன்சில் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிய வந்துள்ளது.

அப்போது இந்த ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா என்பது குறித்து தெரிய வரும்.

Will Corona lock down extends after 3rd May 2020

More Articles
Follows