பாரிஸில் இருந்து தாய்லாந்து பறக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக விஜய் சேதுபதியை இயக்கவுள்ளார் எஸ்.யு.அருண் குமார்.

இதில் விஜய் சேதுபதிடக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.

‘சேதுபதி’ படத்துக்கு இசையமைத்த நிவாஸ் கே பிரசன்னாவே இப்படத்துக்கும் இசையமைக்கிறார்.

இதுவரை இப்படத்திற்கு பெயரிடப்படவில்லை.

தென்காசியில் தொடங்கிய சூட்டிங் விரைவில் தாய்லாந்து எல்லையில் தொடங்கவுள்ளது.

அண்மையில்தான் ‘ஜுங்கா’ படத்திற்காக பாரிஸ் சென்று நடித்து கொடுத்தார் விஜய்சேதுபதி.

Vijay Sethupathi going to Thailand for Arun Kumar project

சபாஷ் நாயுடு படத்தலைப்புக்கு எதிர்ப்பு; கமல் முடிவு என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஸ்வரூபம் 2 படத்தை அடுத்து கமல் தயாரித்து இயக்கி அவரது நடிப்பில் வெளியாகவுள்ள படம் சபாஷ் நாயுடு.

இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட போதே இந்த ஜாதி பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியது.

தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதால் அவர் நிச்சயம் ஜாதி பெயரை ஒரு படத்திற்கு தலைப்பாக வைக்க மாட்டார் என கூறப்பட்டது.

இதுகுறித்து கமல் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

சபாஷ் நாயுடு படத்தின் தலைப்பினை மாற்றும் எந்த திட்டமும் இல்லை. சபாஷ் நாயுடு தலைப்பில் ஜாதிப்பெயர் இருப்பது உண்மைதான்.

ஆனால் இது, சாதிப்பிரச்சாரம் செய்யும் கதை அல்ல என்று கூறியுள்ளார்.

Sabash Naidu title will not glorify caste says Kamal Haasan

*வெடிகுண்டு பசங்க* படத்திற்காக கணவனை நாயகியுடன் டூயட் பாடவிட்ட மனைவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீப காலமாக சென்னையில் அதிகரித்து வரும் செயின் திருட்டு, வழிப்பறிக் கொள்ளை ஆகியவற்றை மையமாக வைத்து ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே பாலு, “வீடு புரொடக்ஷன்ஸ்” சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”.

முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட இப்படத்தில் வழிப்பறிக் கும்பல்களின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

விமலா பெருமாள் என்ற பெண் இயக்குனர் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகனாக தினேஷ் குமார் (தேவா), நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி (வித்யா) நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் விமலாவின் கணவர்தான் பட நாயகன் தினேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

டோரா, குலேபகாவலி படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள்.

பி சிதம்பரம் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பு செய்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் விமலா பெருமாள் கூறும் போது, “நாயகன் தேவா தன் நண்பர்களுடன் மாமா நடத்தும் இசைக்குழுவில் வேலை செய்து வருகிறான்.

தன் காதலி வித்யாவின் ஆசையை நிறைவேற்ற அதிகம் சம்பாதிக்க வேண்டுமென்று வேறொரு இடத்தில் வேலைக்கு சேர்கிறான்.

ஆனால், அந்தக் கும்பல் தான் நகரத்தில் நடக்கிற பல முக்கியமான திருட்டுச் சம்பவங்களை செய்திருக்கிறது என்ற மறுபக்கத்தை அறியாமலேயே அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறான்.

ஒருகட்டத்தில் அந்தக் கும்பலைப் பற்றி தேவாவின் தந்தை ஆசிர்வாதம் எடுத்துக்கூறியும் நம்ப மறுக்கிறான்.

அதே நேரத்தில் தேவாவின் முதலாளியை கைது செய்வதற்காக காவல்துறை தனிப்படை அமைக்கிறது. இது எதையுமே அறியாத தேவாவை, போகப்போக தனது தவறான காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறான் அந்த முதலாளி.

வித்யாவின் பிறந்தநாள் அன்று, தேவாவிற்கு ஒரு முக்கியமான வேலை ஒப்படைக்கப்படுகிறது. ஆனாலும், எப்படியாவது வித்யாவை சந்தித்து விட வேண்டும் என ஆசைப்படுகிற தேவா, முதலாளியையும் அழைத்துக் கொண்டு போகிறான்.

அங்கே எதிர்பாராத விதமாக திவ்யாவிற்கு பெரிய அசம்பாவிதம் ஒன்று நடக்கிறது. அதற்கு தேவா தான் காரணம் என காவல்துறை அவனை கைது செய்து சிறையில் அடைக்கிறது.

வித்யாவிற்கு என்ன ஆனது? அவளின் நிலைமைக்கு காரணம் யார்? தேவா முதலாளியை புரிந்து கொண்டானா? தான் குற்றவாளி இல்லை என எப்படி நிரூபித்தான்? போன்ற கேள்விகளுக்கான விடையை சுவாரஸ்யமான திரைக்கதையோடு சொல்லி இருக்கிறோம்.” என்றார்.

Vedigundu Pasangge movie news and release updates

*பால் அவுட்* வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டாம் குரூஸ் நடித்த மிஷன் இம்பாசிள் பட வரிசையில் ஆறாம் பாகமான ‘ஃபால்அவுட்’ இம்மாதம் ஜுலை 27 ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தியாவெங்கும் வெளியாகிறது.

இந்த படத்தைப் பற்றி நாயகன் டாம் குரூஸ் பேசுகையில்…

‘இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஹென்றி கேவீலின் கேரக்டர் தனித்துவமானது. பலம் வாய்ந்தது.

அவர் ஒரு தடகள வீரரும் கூட. கவர்ச்சியான தோற்றப் பொலிவைக் கொண்டிருப்பதால் திரையை தன்னுடைய கட்டுப்பாட்டில் அற்புதமாக வைத்திருக்கிறார்.

இயக்குநர் இவருடைய கேரக்டரை தனிப்பட்ட முறையில் வித்தியாசமான உருவாக்கியிருக்கிறார்.

இவர் திரையில் தோன்றும் போது ரசிகர்களின் மனநிலை முற்றிலும் வேறு வகையில் இருக்கும். அவர் ஒரு சூப்பர்மேன் போல் திரையில் அற்புதமாக நடித்திருக்கிறார். ’என்றார்.

அந்த குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தைப் பற்றி இயக்குநர் குவாரி குறிப்பிடுகையில்,‘ இந்த கேரக்டர் வைல்ட் கார்ட் போல் கதையில் அறிமுகமாகி, கதையின் போக்கை சுவராசியமானதாக்கி, ரசிகர்களை உற்சாகமடைய செய்யும் அமைந்துவிட்டது.’ என்றார்.

இந்த படத்தில் நடிகர் ஹென்நி கேவீல் சி ஐ ஏ வின் உளவாளி ஆகஸ்ட் வாக்கர் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை பாரவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதனை இந்தியாவெங்கும் வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது.

Tom Cruise is all praises for Superman

*ஜெஸி* படத்தில் ரசிகர்களை திகிலூட்ட வருகிறார் ஸ்ரீபிரியங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாய்ராஜ் ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பாக பி.பீ.எஸ். ஈசா குகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஜெஸி’.

கின்னஸ் சாதனைப் படம் ‘அகடம்’ மற்றும் ‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் இசாக்கின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு.

இது ஹாலிவுட் பாணியில் தயாராகியிருக்கும் திகில் திரைப்படம் .இதில் நகைச்சுவை கலக்கவில்லை.

பேய்கள் மீது நம்பிக்கையில்லாத ஒரு திரைப்பட இயக்குனர் பேய் படம் எடுக்க திட்டமிடுகிறார். இதற்காக ஒரு தனிமையான பங்களாவில் குடியேறுகிறார்.

அந்த பங்களாவில் ஏதோ ஒரு அமானுஷ்யம் உள்ளதால் டைரக்டர் பேனாவை திறந்து எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம் அவரை எழுத விடாமல் தடுக்கிறது .அவர் கதையை எழுதினாரா ?இல்லையா ? என்பது மீதி கதை .

அறிமுக நாயகன் ஜெமினி நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ரீபிரியங்கா, லட்சுமி கிரண் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் நெளஷாத் ஒளிப்பதிவில், எஸ்.தேவராஜ் படத்தொகுப்பில், பூங்கா கிருஷ்ணமூர்த்தி கலை வடிவில் மற்றும் சஜித் ஆண்டர்சன் ராஜ் இசையில் மிக திகிலாக உருவாகியிருக்கிறது.

மேலும் ஹாலிவுட் தர படத்திற்கு இணையாக திரைக்கதை அமைக்கப்பட்டு ஒரு வித்தியாசமான கதை களத்தோடு உருவாகியுள்ளது. பயத்தின் தன்மை நீங்கா வண்ணம் சில காட்சிகள் ‘லோ லைட் கேப்ச்சர் மெத்தெட்’ -இல் எடுக்கப்பட்டுள்ளது.

இரவு பகல் பாராமல் ரசிகர்களை புது விதமாக திகிலூட்ட, சில சிறப்பு அம்சங்களை நுணுக்கமாக இயக்குநர் கையாண்டுள்ளார்.

நம் நாட்டில் நடக்கும் தடுக்க முடியாத கிரைம்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே இப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிக விரைவில் திரைக்கு வருகின்றது. இத்திரைப்படத்தில் பாடல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sri Priyanka in Hollywood style Thriller movie Jesi


தொழில்நுட்ப கலைஞர்கள் :

எழுத்து -இயக்கம் : இசாக், ஒளிப்பதிவு : நெளஷாத், இசை : சஜித் ஆண்டர்சன் ராஜ்,படத்தொகுப்பு : எஸ்.தேவராஜ், கலை : பூங்கா கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பு : செல்வரகு , தயாரிப்பாளர் : பி.பீ.எஸ். ஈசா குகா.

கடைக்குட்டி சிங்கத்தில் ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ-தேஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடைக்குட்டி சிங்கம் குடும்பத்தை சேர்ந்த இக்குழந்தைகள் நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல.

உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த இக்குழந்தைகளை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். தனுஸ்ரீ தமிழ் குடும்பங்களின் செல்லபிள்ளை என்பதில் மாற்று கருத்து இல்லை.

அதே போல் அவருடைய தம்பி தேஜ் தன் அக்காவுக்கு நிகரான திறமை கொண்ட வல்லவர் என்றே சொல்ல வேண்டும்.

இவர்கள் விரைவில் வெளியாகவுள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ளனர்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

சூப்பர் சிங்கர் குடும்பத்தை சேர்ந்த பாடகியான தனுஸ்ரீயிடம் “கடைகுட்டி சிங்கம்” படத்தில் நடித்து பற்றி கேட்ட போது, கடைக்குட்டி சிங்கம் படத்தின் படபிடிப்பு தளம் ஜாலியாகவே இருந்தது .எல்லோரும் என்னை அன்பாக பார்த்துக் கொண்டார்கள்.

சத்யராஜ் அங்கிள்,கார்த்தி அங்கிள்,சாயிஷா ஆண்டி மற்றும் பிரியா ஆண்டி எல்லோரும் அவங்க குடும்பத்து குழந்தைகளாக பார்த்துக் கொண்டார்கள்.

படபிடிப்பு தளத்தில் நான் சில நேரங்களில் பாடினேன், அதை பார்த்து எல்லோரும் எனக்கு முத்தம் குடுத்தார்கள். ஆனால் இப்போதைக்கு நடிப்பு தான் எனக்கு முதலில் முக்கியமானது.

நடிப்பில் தான் இப்போது எனது முழு கவனமும் இருக்கிறது .கடைக்குட்டி சிங்கம் படபிடிப்பு காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடக்கும்.சில நேரங்களில் இரவு தாமதமாக முடியும், மீண்டும் காலை சீக்கிரமாக படபிடிப்பு துவங்கும்.

படபிடிப்பு தளத்தில் யார் அதிகமாக குறும்பு பண்ணுவார்கள்? என்று கேட்டபோது நம்மை இடைமறித்து தன்னுடைய தம்பிதான் அதிக குறும்பு செய்வான் என்றும், நான் எப்போதும் அமைதியாக தான் இருப்பேன் என்றும் கூறினார்.

இசையமைப்பாளர் D.இமான் தனுஸ்ரீயை வருங்காலங்களில் தன்னுடைய இசையில் பாடவைப்பதாக கூறியுள்ளதாகவும்.இந்த படத்தில் பாடாதது பற்றி தனக்கு வருத்தமில்லை என்றும் கூறினார் தனுஸ்ரீ.

கடைசியாக நமக்கு “வா ஜிக்கி வா ஜிக்கி” பாடலை பாடி காண்பித்து கை தட்டல் வாங்கிய தனுஸ்ரீ தன்னை நன்றாக பாசத்தோடு கவனித்த சூர்யா , கார்த்தி மற்றும் பாண்டிராஜ் அங்கிளுக்கு நன்றி கூறினார்.

Super Singer Tanushri and Tej joins with Kadaikutty Singam team

More Articles
Follows