கமல்-ரஜினி-விக்ரம்-அஜித்-சூர்யா வரிசையில் முயற்சிக்கும் விஜய்சேதுபதி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரே படத்தில் விதவிதமான தோற்றங்களில் நம் அபிமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்தார் கமல். அதுபோல் அந்நியன், ஐ படத்தில் வித்தியாசமான தோற்றங்களில் விக்ரம் நடித்திருந்தார்.

மூன்றுமுகம், சிவாஜி, எந்திரன் படங்களில் ரஜினியும், வில்லன், வரலாறு படங்களில் அஜித்தும் இதுபோல் விதவிதமான தோற்றங்களில் நடித்தனர்.

பேரழகன், வாரணம் ஆயிரம், 24 படங்களில் சூர்யாவும் வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருந்தார்.

தற்போது விஜய்சேதுபதியும் இந்த வரிசையில் இணைந்து விட்டார்.

இவர் பெரும்பாலும் தாடியுடன் நடிப்பார் அல்லது சேவிங் செய்த முகத்துடன் நடிப்பார்.

ஆனால் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தர்மதுரை’ படத்தில் வழக்கமான தாடி கேரக்டர், மருத்துவ கல்லூரி மாணவர், முழுக்க சேவிங் செய்த ஒரு கேரக்டர் என மூன்று வேடங்களில் நடித்து இருக்கிறாராம்.

‘இறைவி’யில் முக்கிய கேரக்டரில் நடிக்க மறுத்த மைக் மோகன்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே. சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்ட நாயகர்கள் நடித்துள்ள படம் ‘இறைவி’.

ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள இப்படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் வரும் ஒரு கேரக்டரில் தயாரிப்பாளராக நடிகர் விஜய்முருகன் நடித்திருந்தார்.

இதனிடையில் இந்த கேரக்டரில் நடிக்க நடிகர் மோகனைதான் கார்த்திக் சுப்புராஜ் அணுகியிருந்தாராம்.

ஆனால் மோகன் அந்த கேரக்டரில் நடிக்க மறுத்துவிட்டதால்தான் விஜய்முருகன் நடித்தாராம்.

இறைவி படம் குறித்து தெறி இயக்குனர் இப்படியா சொன்னார்…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்ளுக்கு முன், பெரும் எதிர்பார்ப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படம் வெளியானது.

தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பெண்களை போற்றுவதற்காக ஆண்களை இழிவுப்படுத்தியதாகவும், தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தெறி இயக்குனர் அட்லி இப்படத்தை பார்த்துள்ளார்.

அதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது…

“நான் பார்த்த படங்களிலேயே இறைவி பெஸ்ட். உணர்வுப்பூர்வமான படம். எல்லா நடிகர்களும் அருமையாக நடித்திருந்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி, கமல், விஜய் வரிசையில் இணைகிறாரா சூர்யா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100 படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படம் சுந்தர்.சி இயக்கத்தில் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் ஒரு சரித்திரப் படமாக உருவாகவுள்ளது.

கமலக்கண்ணன், சாபு சிரில், திரு என முன்னணி கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.

முன்னணி இசையமைப்பாளருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

இது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருப்பதால், முன்னணி நடிகர்களை நடித்தால் சரியா இருக்கும் என விரும்புகிறாராம் சுந்தர் சி.

எனவே தமிழ் மற்றும் தெலுங்கில் மார்கெட் உள்ள சூர்யா, மகேஷ்பாபு போன்றவர்கள் நடித்தால் சரியாக இருக்கும் என தயாரிப்பு தரப்பில் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஒருவேளை சூர்யா நடித்தால் இதுதான் அவரது கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும்.

ரஜினி, கமல், விஜய் ஆகியோர் இதற்கு முன்பே ரூ. 100 கோடி பட்ஜெட்டில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போ ஃபீல் பண்ணி என்ற பண்றது லட்சுமி மேனன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குடும்ப பாங்கான கேரக்டர் தேவையா? கூப்பிடுங்கள் அவரை என்கிற அளவுக்கு பிஸியாக இருக்கிறார் லட்சுமி மேனன்.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றும் வரும் நிலையில், இவருக்கு வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

தற்போது ரத்னசிவா இயக்கும் றெக்க படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

படப்பிடிப்புக்கு செல்வதால் சரியாக கல்லூரிக்கு செல்ல முடியவில்லையாம்.

எனவே, கல்லூரிப் படிப்பை நிறுத்தி, விட்டு அஞ்சல் வழியில் தொடரவிருக்கிறாராம்.

இருந்தாலும் காலேஜ் லைஃபை மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார்.

நிவின்பாலியுடன் இணையும் அட்லி…. தெறிக்க விடுவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா ராணி, தெறி ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய அட்லி தற்போது தயாரிப்பாளராக அவதாரமெடுத்துள்ளார்.

தனது ‘A for Apple’ என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ‘சங்கிலி பிங்கிலி கதவ தொற’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இதில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை கமலின் உதவியாளர் ஹரி இயக்குகிறார்.

இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறாராம் அட்லி.

இவரின் உதவி இயக்குனர் இயக்கவுள்ள இப்படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கிறார்.

More Articles
Follows