தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
1970 1980 1990 ஆகிய ஆண்டுகளில் இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ஜெயப்பிரதா.
‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற படத்தில் கமல் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.
மேலும் ‘சலங்கை ஒலி’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்திருந்தார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் இவர் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.
2008 ஆம் ஆண்டு வெளியான ‘தசாவதாரம்’ படத்திலும் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கேணி’ என்ற படத்திலும் ஜெயப்பிரதா நடித்திருந்தார்.
சினிமா புகழின் உச்சத்தில் இருந்த போதே 1990களில் திடீரென ஆந்திர அரசியலில் களம் இறங்கினார். அதன் பின்னர் தேசிய அரசியலிலும் பங்கேற்றார்.
தற்போது பாஜகவின் எம்பி யாக பதவி வகித்து வருகிறார் ஜெயப்பிரதா. அவருக்கு தற்போது 60 வயதாகிறது.
இந்த நிலையில் பிரபல நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயப்பிரதா நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான ESI தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என தொழிலாளர்கள் புகார் அளித்து இருந்தனர்.
எனவே அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பை கொடுத்துள்ளது எழும்பூர் நீதிமன்றம்.
HighCourt Sentences Actress JayaPrada to 6 Months in ESI Case