கமலின் ‘விஸ்வரூப’ நாயகிகளுடன் இணையும் விஜய்சேதுபதி & வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் ’தலைவன் இருக்கிறான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன்.

இந்த படம் ’தேவர் மகன்’ பட இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் முதல் பாகத்தில் இறந்த நாசரின் மகன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்பார் என சொல்லப்படுகிறது.

முக்கிய கேரக்டரில் வடிவேலு மற்றும் ரேவதி நடிப்பார்கள் எனத் தெரிகிறத.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக விஸ்வரூப நாயகிகள் ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் நடிக்கவுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

இவர்கள் ’விஸ்வரூபம்’ மற்றும் ’உத்தம வில்லன்’ ஆகிய படங்களில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தனர்.

கமலின் அண்மைக்கால படங்களில் இவர்கள் தவறாது இடம் பெற்று விடுகின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

தாமரை டாட்டூ உடன் ரீ எண்ட்ரீக்கு ரெடியான ‘கிளாமர்’ லட்சுமி மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை லட்சுமி மேனன்.

இதனை தொடர்ந்து ’பாண்டியநாடு’, ’ஜிகர்தண்டா’, ’மஞ்சப்பை’ வேதாளம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களிலும் தன் தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இறுதியாக இவரின் நடிப்பில் றெக்க படம் வெளியானது.

தற்போது பிரபுதேவாவுடன் ’ஜில் ஜங் ஜக்’, முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் உடன் ஒரு படம் இவரின் கை வசம் உள்ளது.

மேலும் விக்ரம் பிரபு உடன் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது படிப்பை முடித்து விட்டு சினிமாவில் அதிக கவனம் செலுத்தவிருக்கிறாராம்.

இதில் ஒரு படி மேலே சென்று கிளாமராக நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

அதன் முதற்கட்டமாக தாமரை பூ டிசைன் கொண்ட டாட்டூவை தன் பின்னங்கழுத்து பகுதியில் போட்டு அந்த படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த படம் இப்போது வைரலாகி வருகிறது.

ராணா – மிஹீகா பஜாஜ் நிச்சயதார்த்தம்; சிவகார்த்திகேயன் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே 12ம் தேதி தன் காதலி மிஹீகா பஜாஜுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் பாகுபலி வில்லன் நடிகர் ராணா.

தன்னை திருமணம் செய்து கொள்ள மிஹீகா சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றார்.

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று மே 21ஆம் தேதி மற்றொரு போட்டோவை பகிர்ந்துள்ளார் ராணா.

அதில் எந்த தகவலையும் பதிவிடவில்லை. And it’s official!! என்று மட்டுமே தெரிவித்துள்ளார். எனவே இது நிச்சயம்தார்த்தம் என்கின்றனர் நெட்டிசன்கள்.

அவர்கள் இருவரும் இருக்கும் உடையை பார்த்தால் நிச்சயதார்த்தம் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

ராணா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த சிவகார்த்திகேயன் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதை பார்த்த ராணா நன்றி ப்ரோ என்று கூறினார்.

திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Rana Dabbugati Engagement Confirmed with Miheeka Bajana Today

BREAKING டிவி சூட்டிங் நடத்த தமிழக அரசு அனுமதி.; விதிமுறைகள் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் பொது முடக்கம் மே 31ஆம் தேதி அமலில் இருக்கும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் கொரோனா பாதிப்பு குறைவான உள்ள பகுதிகளில் சில தளர்வுகளுடன் சில வணிக நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மே 11 முதல் சினிமா மற்றும் சீரியல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு அளித்துள்ளது.

அதாவது எடிட்டிங், டப்பிங், கிராபிக்ஸ், பின்னணி இசை, ஒலிக்கலவை போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையில் பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி, அமைச்சர் கடம்பூர் ராஜூவைச் சந்தித்து பேசினார்.

அப்போது சூட்டிங் அரங்குகள், வீடுகள் ஆகியவற்றின் உள்ளே நடைபெறும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரவேண்டும்.

சின்னத்திரை படப்பிடிப்புகள் தொழிற்சாலைகள் போல அரங்குகளின் உள்ளே பணிகள் நடைபெறக்கூடியவை. இதனால் எவ்வித பாதிப்பும் நேராது.

இதற்கு ஏதாவது நிபந்தனைகளை அரசு விதித்தாலும் ஏற்றுக்கொள்கிறோம்.

சின்னத்திரைப் படப்பிடிப்புகள் தொடர்ந்தால் 5000 தொழிலாளர்கள் பணிபுரியக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

டிவி நிகழ்ச்சிகளும் புத்துயிர் பெறும். வீட்டில் இருக்கும் பொதுமக்களுக்கும் உற்சாகம் ஏற்படும் என அமைச்சரிடம் பெப்சி அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று மே 21ஆம் சின்னத்திரை சூட்டிங்க்கு அனுமதியளித்துள்ளது தமிழக அரசு.

இது தொடர்பான விதிமுறைகள் இதோ…

  • சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களை படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்க கூடாது.
  • தடை செய்யப்பட்ட பகுதி மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது
  • பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது
  • படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முக கவசம் அணிய வேண்டும்
  • படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், சாதனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.
  • சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிறமாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் முன்அனுமதி பெறவேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சின்னத்திரை சூட்டிங் தொடர்பாக தமிழக அரசின் அனுமதிக்கு நடிகை குஷ்பூ தமிழக முதல்வருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜீக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

TN Govt grants permission to resume TV shooting at indoor

தமிழக மதுபிரியர்களை மிரட்டி சரக்கு வாங்கிய புதுச்சேரி போலீசார் 3 பேர் கைது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ள போதும் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் மதுவுக்கு பெயர் பெற்ற புதுச்சேரியில் மதுக்கடைகள் இதுவரை திறக்கப்படவில்லை..

எனவே தமிழக மதுபாட்டில்கள் புதுச்சேரி பகுதிக்குள் வராமல் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் திருக்கனூர், விழுப்புரம் பகுதி சித்தலம்பட்டில் மதுபிரியர்கள் சிலர் மது குடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அங்கு சென்ற புதுச்சேரி மாநில காவலர்கள் மணிகண்டன், செல்வம், கோகுல், பிரசன்னா ஆகியோர் மதுகுடித்தவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்த மதுவை பறித்துள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி மாநில போலீஸ் தலைமையகத்திற்கு புகார் சென்றது.

இதன் பேரில் திருக்கனூர் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்..

இதில் காவலர்கள் நால்வரும் மதுபாட்டில்களை தங்களது சொந்த தேவைக்கு எடுத்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து 4 காவலர்களையும் சஸ்பெண்டு செய்து சீனியர் காவல் கண்காணிப்பாளர் ராகுல் ஆல்வா உத்தரவிட்டார்.

மேலும் 4 பேர்கள் மீது திருக்கனூர் போலீசார் 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்களாம்.

இதில் செல்வம், கோகுல், மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டனர்.

தலைமறைவாக இருக்கும் காவலர் பிரசன்னாவை போலீசார் தேடி வருகின்றனர்.

பிடிப்பட்டவர்களிடம் கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன் ரசிகர்களே ‘டாக்டர்’ ரிலீஸ் தேதியை முடிவு செஞ்ச்சிட்டாங்க…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படத்தை ‘கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸுடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் இசையமைக்க யோகி பாபு மற்றும் வினய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

‘கேங் லீடர்’ பட புகழ் பிரியங்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.

இப்பட சூட்டிங் கடந்த பிப்ரவரியில் கோவாவில் தொடங்கி நடைபெற்று வந்தது.

ஆனால் தற்போது கொரோனா பொது முடக்கம் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் “டாக்டர்” பட ரிலீஸ் தகவல் ஒன்றை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இணையத்தில் உலவவிட்டுள்ளனர்.

அதாவது நவம்பரில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டால் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று “டாக்டர்” படம் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

More Articles
Follows