மிரட்டலுக்கு பயமில்லை : டிராஃபிக் ராமசாமி விழாவில் விஜய் தந்தை எஸ்ஏசி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி.

இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி அவர்கள் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் படத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது

” இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார் .

ஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி நான் என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டேன்.

ஆனால் விக்கி போகாமல் எனக்கு உங்கள் கூட இருந்தால் போதும் சம்பளமே வேண்டாம் என்று கூடவே இருந்தார். ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது டிராஃபிக் ராமசாமியின் “ஒன் மேன் ஆர்மி “என்கிற வாழ்க்கைக் கதை.

படித்தேன். அதைப் படமாக எடுக்கலாம் என்று விக்கி கூறிய போது என்னால் மறுக்க முடியவில்லை.

கதையைப் படித்து முடித்த போது அவரும் என்னைப் போலவே சமூக அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருந்தது புரிந்தது.

தவறு நடந்தால் கோபப்படுவேன் என்ற அவரது குணம் எனக்குப் பிடித்தது.
அவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு அவர் பெரிய போராளியாகத் தெரிந்தார்.

அவர் வாழ்க்கையில்தான் எவ்வளவு போராட்ட அனுபவங்கள் என வியந்து போனேன்.

நான் 45 ஆண்டுகளில் 69 படங்கள் இயக்கி விட்டேன். நான் விட்டுச் செல்லும் பெருமையான அடையாளமாக என்ன செய்திருக்கிறோம்? என யோசித்த போது இப்படத்தை அப்படி ஒரு அடையாளமாக எடுக்க நினைத்தேன்.

நாங்களே எதிர்பாராத வகையில் பல நல்ல உள்ளங்கள் இதில் இணைந்தார்கள், எனக்கு ஜோடியாக ரோகிணி இணைந்தார்.

கதாநாயகன் போன்ற பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் வந்தார். ஒரே காட்சி என்றாலும் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனியை மறக்க முடியாது.

இப்படியே குஷ்பூ, சீமான் எல்லாம் படத்துக்குள் வந்தார்கள் .சில காட்சிகளுக்கு ஒப்புக் கொண்டார் பிரகாஷ்ராஜ். இப்படியே பலரும் படத்துக்குள் வந்து பலம் சேர்த்துள்ளனர்.

இப்படம் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டதாகும். சர்ச்சைகள் கொண்ட கதைதான் இது என்பது மறுப்பதற்கில்லை.

இது பற்றி எந்த மிரட்டல் வந்தாலும் பயமில்லை. ஏனென்றால் என் முதல் படம் ‘சட்டம் ஒரு இருட்டறை ‘படத்திலேயே மிரட்டல்களைப் பார்த்தவன் நான்.” இவ்வாறு எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசினார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் விக்கி, நடிகர் ஆர்.கே. சுரேஷ், நடிகைகள் ரோகிணி, உபாசனா, ஒளிப்பதிவாளர் குகன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

Vijay dad SA Chandrasekar speech at Traffic Ramasamy Motion poster launch

பிரகாஷ்ராஜ் படத்தை நேரிடையாக இணையத்தில் வெளியிட்டார் பிரியதர்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன்.

மோகன்லாலை வைத்து மட்டுமே 20 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார் இவர்.

2007ல் காஞ்சிவரம் என்ற படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனர் என்ற தேசிய விருதை பெற்றுள்ளார்.

அண்மையில் இவர் இயக்கிய படம் சில சமயங்களில்.

இதில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன், வருண் உள்ளிட்ட பலரும் நடிக்க, இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபுதேவா ஸ்டூடியோ மற்றும் இயக்குனர் விஜய்யின் திங்க் பிக் ஸ்டூடியோ இவற்றுடன் இணைந்து ஐசரி கணேசன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் பிரியதர்ஷன் இயக்கிய இந்த படம் முதன் முதலாக தியேட்டரில் வெளியாகாமல் ஆன்லைனில் வெளியானது.

இது வணிக நோக்கம் இல்லாமல் விருதுக்காக அவர் இயக்கிய படம்.

தனக்கு எய்ட்ஸ் நோய் வந்திருக்குமோ என்று சந்தேகம் கொள்கிற ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவனின் தவிப்புதான் இப்படத்தின் கதை.

அந்த கேரக்டரில்தான் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். சுமார் 90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் சிறப்பு திரைப்படம், பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றுள்ளது.

முதலில் தியேட்டரில் வெளியிட நினைத்திருந்த இயக்குனர் தற்போது சூழ்நிலை சாத்தியமில்லை என்பதால் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தை காண கட்டணம் செலுத்தி டவுண்ட்லோட் செய்து கொள்ளலாம்.

இதற்கு முன்பே ஒரு சில தமிழ் படங்கள் நெட்பிளிக்சில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

A story about HIV Aids Sila Samayangalil movie released on Netflix

மீண்டும் நெருக்கம் காட்டும் பிக்பாஸ் ஜோடி ஆரவ்-ஓவியா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா, நமீதா, ஆரவ், ஸ்நேகன், ஆர்த்தி, காயத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஆரவ் பிக் பாஸ் வின்னர் ஆனார்.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் நெருக்கம் காட்டினர்.

ஆரவ்வை காதலிப்பதாக ஓவியா ஒப்புக் கொண்டாலும் ஆரவ் ஆர்வம் காட்டவில்லை.

அதன்பின்னர் இருவரும் பிரியவே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் ஓவியா.

இந்த நிலையில் ஓவியா நேற்று தனது 27-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ஆரவ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பிறந்த நாள் வாழ்த்து’ தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஓவியா, ‘நன்றி டியர் ஆரவ்’ என்று பதிளிதிருந்தார்.

இதைப் பார்த்த ஒரு ரசிகர், ‘அப்போ நாங்கதான் முட்டாளா? எப்படியோ நல்லா இருந்தா சந்தோ‌ஷம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஓவியா, ‘ரொம்ப சந்தோ‌ஷம்’ என்று பதில் அளித்திருக்கிறார்.

இதன் மூலம் ஓவியா மற்றும் ஆரவ் இருவரும் நெருக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

Whether Aarav Oviya fall in love Again

நடிகர் அஜித்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் பிறந்தநாள் வாழ்த்து.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று மே 1ஆம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இரவு முதலே அவரை வாழ்த்த ரசிகர்கள் அவரது இல்லத்தின் அருகில் காத்திருக்கின்றனர்.

மேலும் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் ஹாப்பி பர்த் டே தல அஜித் என தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தன் ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பின்னர் அளித்த விளக்கத்தில்… என் ட்விட்டர் பக்கத்தில் நான் அந்த பிறந்தநாள் வாழ்த்தை பதிவிடவில்லை. என தெரிவித்துள்ளார்.

அதன்பின் அந்த பதிவு அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

TN Minister Sengottaiyan clarifies his Birthday wishes to actor Ajith

காவிரி பேச்சு எதிரொலி; கன்னட பிட்டு படத்தில் சிம்புக்கு வாய்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர் சங்கம் மௌன போராட்டம் நடத்தியது.

ஆனால் அதில் கலந்துக் கொள்ளாத நடிகர் சிம்பு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு கன்னட மக்கள் ஓர் பாட்டில் தண்ணீர் கொடுத்தால் போதும், அதுவே அந்த மக்களின் ஆர்வத்தை புரிந்துக் கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார்.

அரசியல்வாதிகள்தான் இந்த காவிரி பிரச்சினை வைத்து அரசியல் செய்கிறார்கள் என பேசியிருந்தார்.

அவரின் பேச்சுக்கு கர்நாடகாவில் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் தற்போது கன்னட படமொன்றில் பாடகராக அறிமுகமாகிறார் நடிகர் சிம்பு.

இருவுதெல்லவா பிட்டு என்ற கன்னட படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

STR aka Simbu makes his Kannnada debut as a singer

மய்யம் விசில் மந்திரக்கோல் அல்ல; அரசை விமர்சிக்கும் விசில் : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி, கமல் ஹாசன் நடத்தி வருகிறார்.

இந்த கட்சி சார்பில் மய்யம் விசில் மொபைல் அப்ளிகேஷனை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் பேசியதாவது..

உங்கள் பகுதியில் நடக்கும் தவறு, தொடர்ந்து நடக்கும் தவறுகள் அதை சொல்ல விரும்புபவர்கள், முதலில் பத்திரிகைக்கு எழுதுவார்கள். தற்போது முகநூலில் பதிவிடுகிறார்கள்.

அதைத்தொடர்ந்து வலியுறுத்தவோ, அது நடக்கிறதா, இல்லையா என்று பார்க்க யாரும் கிடையாது.

அந்த மையமாக மய்யம், மக்கள் நீதி மய்யம் செயல்படும். இது இருக்கும் குறைகளை ஒரே நொடியில் தீர்த்து விடும் மந்திரக்கோல் அல்ல.

இது இருக்கும் குறைகளை செவிசாய்த்து கேட்பதற்கும், கண்கொண்டு பார்ப்பதற்கும் உதவும் ஒருகருவி.

தற்போதைக்கு இந்த செயலி, மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களின் கையில் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

தற்காப்பு கருதியும், மய்ய உறுப்பினர்கள் பெரும் ஆர்வத்துடன் செயல்படுவார்கள் என்பதாலும் தற்போதைக்கு உறுப்பினர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.

இது தீர்வுக்கான முதல் அடி.

இந்த கருவி மூலம் எங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் எல்லாம், எங்களுக்கு வீட்டுப்பாடம் ஆகும். நாங்கள் பரீட்சை எழுதும் நேரம் வரும் போது, அதற்கான பதில்களெல்லாம் இந்த கருவியின் மூலம் எங்களுக்கு கிடைத்திருக்கும்.

இது போலீசுக்கோ, அதிகாரிகளுக்கோ, அரசுக்கோ மாற்று அல்ல. அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அல்லது அவர்களை விமர்சனம் செய்யும் கருவியாக இருக்கும்.

மய்யம் செயலி மே 1 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

கிராம பஞ்சாயத்துகள் நடக்கிறதா என்பதை கண்காணிக்கவும், நல்லபடி நடந்தால் அதை பாராட்டவும், நடக்கவேயில்லை என்றால் ஏன் என்பதை நீங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தவும் இது ஒரு உபயோகமுள்ள கருவியாக இருக்கும்.

நாங்கள் தத்தெடுத்துக் கொண்ட அதியத்தூர் கிராமத்திற்கு மே 1ல் (இன்று) செல்லவிருக்கிறோம்”

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Kamalhassan launched Maiam whistle Mobile app

More Articles
Follows