தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கூடுதல் கேளிக்கை வரி காரணமாக, திரைக்கு வர இருந்த புதிய படங்களை பட அதிபர்கள் சங்கம் வெளியிடாமல் நிறுத்தி வைத்தது.
இதற்கிடையே கூடுதலாக விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் திரைப்பட உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்நிலையில் இன்று முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் பேசியதாவது…
* நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தை விட பொதுமக்கள் அதிகமாக கொடுக்க வேண்டாம்.
* அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம்
* திரையரங்குகள் அரசு சார்பில் கண்காணிக்கப்படும்
* கேளிக்கை வரி விதிப்பு 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைப்பு
* திரையரங்குகளில் திண்பண்டங்கள், குளிர்பானங்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது.
குறைந்தபட்ச சில்லறை விலைக்கு மட்டுமே விற்க வேண்டும்.
* தீபாவளிக்கு விஜய்யின் மெர்சல் படம் ரிலீசாவது உறுதியாகி உள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகள் ஒரு புறம் இருந்தாலும், மெர்சல் படத்திற்கு டிக்கெட்டுகள் முன் பதிவுகள் முன்பே தொடங்கிவிட்டது.
இன்று முதல்வரை சந்திக்கும் முன்பு சில விதிமுறைகளை தியேட்டர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவித்து இருந்தார் விஷால் என்பதை பார்த்தோம்.
இதற்கு பின்னணியில் மெர்சல் உள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.