வருண் & சஜித் இணையும் ‘சங்கி’..; அட்லி ஆசையில் மண் போட்ட பாலிவுட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த பிகில் படத்தை அடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானை அட்லி இயக்கவுள்ளதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

இவர்கள் இணையும் படத்திற்கு சங்கி (Sanki) என்று பெயரிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

பாஜக கட்சியினரை கிண்டலாக சங்கி என அழைத்து வருகின்றனர் மக்கள்.

அப்படியிருக்கையில் இந்த தலைப்பை வைத்தால் நிச்சயம் அரசியல் சர்ச்சைகள் உருவாகும்.

அதுவே படத்திற்கு பப்ளிசிட்டியாக அமையும் எனவும் சிலர் நம்பினர்

ஆனால் பாலிவுட்டில் ‘சங்கி’ என்ற பெயரில் ஒரு படம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் பிரபல ஹீரோ வருண் தவான் நடிக்க சஜித் நதித்வாலா இயக்கி தயாரிக்கிறாராம்.

அட்லி ஆசையில் இப்படி மண் போட்டுடுச்சே பாலிவுட்..??

Varun Dhawan reunites with Sajid Nadiadwala for Sanki

எழுச்சிக்கு பின் வருபவன் தலைவனா?; புரட்சி ஏற்படுத்துபவனே தலைவன்..; ரஜினியை வம்பிழுக்கும் சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

அப்போது சினிமாவில் சூர்யாவின் முன்னேற்றம் குறித்து பேசினார். அவரின் நடிப்பை புகழ்ந்தார்.

மேலும் சூர்யாவின் கல்வி சேவை குறித்தும் பாராட்டினார். கல்விக்காக சூர்யா பேசினாலும் அது பிரதமர் மோடிக்கு கேட்கும் என்று பேசினார் ரஜினி.

இதனை சூர்யா ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினார்கள்.

ஆனால் தற்போது நீட் தேர்வு விவகாரத்தில் சூர்யாவின் அறிக்கையும் ரஜினியின் மௌனமும் உள்ளது.

இதனையடுத்து ரஜினியை மறைமுகமாக தாக்கி வால் போஸ்டர்கள் அடித்துள்ளனர்.

எழுச்சி வந்தபின் வருபவன் தலைவன் அல்ல; புரட்சி ஏற்படுத்துபவனே தலைவன் என திண்டுக்கல் சூர்யா ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 12 தேதி அன்று ரஜினி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது… தனக்கு முதல்வர் ஆகும் எண்ணமில்லை. ஆட்சியை விட கட்சிக்கு மட்டுமே தலைமை தாங்குவேன் என்றார்.

மேலும் அரசியல் மாற்றத்தை மக்கள் உணர வேண்டும். அவர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்ப வேண்டும். எழுச்சி உண்டாகட்டும்… புரட்சி உண்டாகட்டும். அப்போது அரசியலுக்கு வருகிறேன் என்றார்.

ரஜினியின் அன்றைய பேச்சை கிண்டலடித்து தான் தற்போது.. எழுச்சி வந்தபின் வருபவன் தலைவன் அல்ல; புரட்சி ஏற்படுத்துபவனே தலைவன்.. என போஸ்டர்கள் அடித்துள்ளனர்.

suriya fans criticise rajinikanth

மாஸ்டர் டைரக்டரின் அடுத்த பட அறிவிப்பு நாளை..; ஹீரோ கமல் கன்பார்ம்.; புரொடியூசர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கைதி பட வெற்றியை தொடர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

விஜய் & விஜய்சேதுபதி இணைந்துள்ள இந்த படம் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளி போய்விட்டது.

கொரோனா பிரச்சினை முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள படத்தை லோகேஷ் இயக்குவார் என கூறப்பட்டது.

ஆனால் அண்ணாத்த படத்தை முடிக்காமல் ரஜினி வேறு படங்களில் நடிக்க மாட்டார்.

மேலும் நவம்பர் முதல் அரசியலில் களம் காணவுள்ளார் ரஜினிகாந்த்.

எனவே கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை முடிவு செய்துவிட்டாராம் லோகேஷ்.

இந்த படத்தை கமல் தயாரிக்கவில்லையாம். உலக பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளதாம்.

இந்த அறிவிப்பை தான் நாளை செப்டம்பர் 16 மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசனின் தீவிர ரசிகர் லோகேஷ் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Master Director Lokesh Kanagaraj next film update tomorrow

வாரிசு அரசியல் இல்லை.. BJP க்கு வாங்க.. லீடர் ஆகலாம்..; சூர்யாவை அழைக்கும் பாபு கணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு, இசை, இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் பாபு கணேஷ்.

இவர் தேசியப் பறவை, நாகலிங்கம், நானே வருவேன், கடல் புறா ஆகிய படங்களை இயக்கி நடித்திருக்கிறார்.

மேலும் திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் வாசனை படம் படைத்துப பரபரப்பையும் ஏற்படுத்தினர் பாபு கணேஷ்.

இவர் அண்மையில் பாஜக கட்சியில் இணைந்து முக்கியமான பொறுப்பில் இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யாவுக்கென ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில்.. கல்விக்காக சேவை செய்யும் நீங்கள் பாஜக கட்சியில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். மோடியின் சாதனைகளை மக்களிடம் கூற வேண்டும் ” என அழைப்பு விடுத்துள்ளார்.

Director Babu Ganesh invites Actor Suriya to join BJP

பஜாஜ் பல்சர்.. தங்க காசு.. மாஸ்டர் பட டிக்கெட்..; உலகின் மிகப்பெரிய விஜய் ரசிகர் என நிரூபிக்க நீங்க ரெடியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை, செப். 15, 2020: ‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ போன்ற மெகா பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனல் இணைந்து நடத்தும் உலகின் மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகரை தேர்வு செய்யும் ஒரு மிகப்பெரிய ஆன்லைன் கேம் ஷோ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த கேம் ஷோ வரும் செப். 19, 2020 அன்று மாலை 6 மணிக்கு நேரலையில் நடைபெற உள்ளது. இந்த கேம் ஷோ தளபதி அவர்களின் திரைப்படங்கள், அவரது விருப்பங்கள், பார்வைகள் மற்றும் பேச்சுக்கள் பற்றியது. விஜய்யை விரும்பும், அவரை பற்றிய எல்லா செய்திகளையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்காக இந்த கேம் ஷோ நடத்தப்படுகிறது.

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனலுக்காக இந்த கேம் ஷோவை
ஜி. தனஞ்ஜெயன் தலைமையிலான CEAD ஃபிலிம் கன்சல்டன்ஸி குழு உருவாக்கியுள்ளது.

இந்த நிகழ்வின் மூலம் லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களை ஒன்றிணைத்து, மகிழ்விக்கவும், தளபதி விஜய்யை பற்றி அனைத்தும் தெரிந்த உலகின் மிகப்பெரிய ஒரு விஜய் ரசிகரை தேர்வு செய்வதுமே இந்த கேம் ஷோவின் நோக்கம்.

இந்த கேம் ஷோ வரும் செப். 19 முதல் பத்து வாரங்களுக்கு (மொத்தம் 20 எபிசோட்கள்) ஒவ்வொரு வார இறுதியிலும் (சனி, ஞாயிறு) மாலை 6 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்.

இதன் தொடர்ச்சியாக வெற்றியாளரை தேர்ந்தெடுக்க கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிச் சுற்றும் நடத்தப்படும்.

அனைவரும் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து பங்கேற்கும் விதமாக பிரபல யூடியூப் சேனல்களான வலைப் பேச்சு மற்றும் சினிமா சென்ட்ரல் ஆகியவற்றில் இந்த கேம் ஷோ நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கூடுதலாக தனஞ்சயன் மற்றும் சினிமா சென்ட்ரல் ஆகியோரது ட்விட்டர் ஐடிக்களிலும் அதே நேரத்தில் (மாலை 6 மணிக்கு) ஒளிபரப்பாகும்.

இந்த கேம் ஷோ தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களுக்காக நடத்தப்படுகிறது.

இதில் அனைவரும் பங்கேற்கலாம். ஒவ்வொரு எபிசோடிலும் தொகுப்பாளர் பத்து கேள்விகளை கேட்பார்.

போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் முடிவில் அந்த கேள்விகளுக்கான பதிலை திரையில் தோன்றும் ஒரு வாட்ஸ்-அப் நம்பருக்கு ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் அனுப்ப வேண்டும். நிகழ்ச்சியின் முடிவில் 10 கேள்விகளுக்கு பதிலளிக்க போட்டியாளர்களுக்கு 5 நிமிடம் வழங்கப்படும், அதன் பிறகு அந்த நம்பருக்கு பதிலை அனுப்ப முடியாது.

ஒவ்வொரு எபிசோடிலும் வெற்றி பெறுபவர்கள் காலிறுதி, அரையிறுதியை தொடர்ந்து இறுதிச் சுற்றுக்கு செல்வார்கள். மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை பற்றிய தகவல்கள் கீழே:

இந்த கேம் ஷோவில் கலந்து கொள்ள எந்தவித நுழைவுக் கட்டணமோ அல்லது நிபந்தனைகளோ கிடையாது. தளபதி விஜயை நேசிக்கும் யார் வேண்டுமானாலும் இந்த கேம் ஷோவில் பங்கேற்கலாம்.

அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு நபர் ஒரே ஒரு பதில் பதிவு மட்டுமே அனுப்ப இயலும்.

ஒரே நபர் பல பதிவுகளை அனுப்பினால் அனைத்து பதில்களும் நிராகரிக்கப்படும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கேம் ஷோவின் நேரலையை பார்த்து எபிசோடின் முடிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கும் திரையில் தோன்றும் வாட்ஸ்-அப் நம்பருக்கு பதில் அனுப்புவது மட்டுமே.

ஒவ்வொரு எபிசோட் வெற்றியாளர்களுக்கு கொடுக்கவிருக்கும் பரிசுகள்:

முதல் 3 வெற்றியாளர்களுக்கு – 1 கிராம் தங்க காசு + ஒவ்வொருவருக்கும் தலா 5 ‘மாஸ்டர்’ படத்தின் டிக்கெட்கள்.
அடுத்த 7 வெற்றியாளர்களுக்கு – ஒவ்வொருவருக்கும் தலா 5 ‘மாஸ்டர்’ படத்தின் டிக்கெட்கள்.

இறுதிச் சுற்று வெற்றியாளர்களுக்கு:

முதல் பரிசு – பஜாஜ் பல்சர் 150 பைக் + உலகின் மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகர் ட்ரோஃபி
இரண்டாவது பரிசு – 8 கிராம் தங்க காசு + ‘மாஸ்டர்’ படத்துக்கான டிக்கெட்கள் 5
மூன்றாவது பரிசு – 4 கிராம் தங்க காசு + ஒவ்வொருவருக்கும் தலா 5 ‘மாஸ்டர்’ படத்தின் டிக்கெட்கள்

கேம் ஷோவை பற்றிய அதிக தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஓர் அறியப்
அறிமுக நிகழ்ச்சி வரும் செப். 16 (புதன்கிழமை) அன்று மாலை 6 மணிக்கு இரண்டு யூ டியூப் சேனல்கள் (வலைப்பேச்சு மற்றும் சினிமா சென்ட்ரல்) மற்றும் ட்விட்டர் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

தளபதி விஜய் ரசிகர்களுக்கு இந்த கேம் ஷோ மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும், ஈடுபாடு கொண்டதாகவும் இருக்கும். வெவ்வேறு சுற்றுகளில் 10 கேள்விகள் (திரைப்படங்களை பற்றிய கேள்விகள், பாடல்கள், வசனங்கள், ஆடியோ வெளியீட்டு பேச்சுகள் உள்ளிட்டவை) கேட்கப்படும்.

லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களை கொண்டாடவும், அவர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கவும் நேரலையில் நடத்தப்படும் முதல் நிகழ்ச்சி இது.

நீங்கள் உலகின் மிகப்பெரிய விஜய் ரசிகராக இருந்தால், இது உங்களுக்காக கேம் ஷோ. தவற விடாதீர்கள். கலந்து கொண்டு விஜய்யை பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் அவர் மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும் காட்டுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

தொடக்க நிகழ்ச்சியை செப். 16 (புதன்கிழமை) அன்று மாலை 6 மணிக்கு வலைபேச்சு மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேன்ல்களில் பார்க்கவும்.

முதல் எபிசோட்: செப் 19 அன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு மேற்கண்ட சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பாகும்.
தவறவிடாதீர்!

SEVEN SCREEN STUDIO & CINEMA CENTRAL Presents A Game Show to Select the WORLD’S BIGGEST FAN OF THALAPATHY VIJAY

அரசியல்வாதிகள் செய்ய வேண்டியதை சூர்யா செய்திருக்கிறார்.. – தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டனர். இதனையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா கண்டனம் தெரிவித்தார்.

தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குனர் தங்கர் பச்சான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

மாணவர்களுக்கு நீட் தகுதித் தேர்வு கட்டாயம் வேண்டும் எனக்கூறும் அரசியல் பிழைப்பு வாதிகளுக்கு இவ்வாறு கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?
இவர்களுக்கான தகுதித்தேர்வை யார் நடத்துவது?

கிராமப்புறங்களிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்களின் பிள்ளைகள்தான் முதல் தலைமுறையாக கல்வி பெற்று மருத்துவர்களாக உயர்ந்தார்கள். அத்தகையவர்களால்தான் தான் இன்று மருத்துவ சேவை அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

இதனை ஒழிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நீட் தேர்வு எனும் அநீதி தேர்வு முறையை தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் நின்று போராடி தீர்வை கண்டிருக்க முடியும்! ஆனால் அதை செய்யத் தவறிவிட்டார்கள்.

எதிர்வரும் தேர்தல் கூட்டணியை மனதில் கொண்டு தனித்தனியாக எதிர்ப்புகளை தெரிவித்து ஆழ்ந்த இரங்கல் செய்திகளை தெரிவிப்பதாலும், பண உதவியும் அளிப்பதாலும் மாணவர்களை இந்த சதியில் இருந்து காப்பாற்ற முடியாது.

ஏழைப் பிள்ளைகள் 12 பேர்களை இதுவரை நீட் தேர்வு பலி கொண்டிருக்கிறது! உள்ளக்குமுறலில்,வேதனையில், கோபத்தின் உச்சத்தில் உள்ள தமிழக மக்களின் மனங்களுக்கு திரைப்பட நடிகர் சூர்யா அவர்களின் அறிக்கை ஆறுதலையும் நம்பிக்கையும் அளித்திருக்கின்றது.

தமிழகத்தின் அரசியல்வாதிகள் செய்யவேண்டிய வேலையை ஒரே அறிக்கையில் சூர்யா செய்திருக்கிறார் என மக்கள் நினைக்கிறார்கள்.

இக்கருத்து சூர்யாவின் கருத்தாக மட்டும் இருந்திருந்தால் தமிழகம் இந்த கொதிநிலையை அடைந்திருக்காது. அதில் உள்ள அனைத்து கருத்துகளும் மக்களின் மனதில் இருப்பவை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை! இந்நேரத்தில் நம் அரசியல் கட்சிகள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்.

அனைத்துக் கட்சியினரும் எதிர்வரும் தேர்தல் கூட்டணி கணக்கை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னலம் மறந்து தங்கள் பகை மறந்து மக்களுக்காக ஒன்றிணைந்து இதில் உடனடியாக வெற்றி காண வேண்டும்.

Director Thangar Bachchan supports Actor Suriya

More Articles
Follows