கைவினை கலைஞர்களை சந்திக்கும் வருண்-அனுஷ்கா ஷர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் சுய் தாகா படத்தில் நடிகர் வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் மௌஜி மற்றும் மம்தா எனும் கதாபாத்திர பெயர்களில் நடித்துள்ளனர்.

வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார்.

மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.

‘இந்தப்படம் இளைஞர்கள் தன் திறமைகளை வைத்து யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற கருத்தினை கொண்டது.

எனவே இந்த விளம்பர பயணம் நம் இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு நல்ல ஊக்குவிப்பாக இருக்கும் ” என தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

‘நம் நாட்டிலுள்ள இளம் கைவினை கலைஞர்களை சந்திக்க வேண்டி ஆசைப்படுகிறேன். அவர்களின் திறமைகளும் , வித்யாசமான தொழில் நுட்பத்தையும் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன் “என நடிகர் வருண் தவான் கூறியுள்ளார்.

நாங்கள் இந்தியாவிலுள்ள கைத்தறி கலைஞர்களை சந்திக்க இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இன்னும் பல கைவினை கலைஞர்கள் திறமைகள் வெளிவரவேண்டும் என ஆசைப்படுகிறோம் ” என நடிகை அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.

‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள – ” சுய் தாகா – மேட் இன் இந்தியா ” என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே ரிலீஸ் ஆகிறது.

Varun Anushka Sharma to celebrate homegrown entrepreneurs for Sui Dhaaga Made In India

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் *கனா*-வில் அனிருத்தின் நாட்டுப்புற பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மரகத நாணயம் படத்தின் இசை மூலம் எல்லோருடைய இதயத்தையும் கவர்ந்த இளம் இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ்.

இவர் இசையமைப்பாளர் அனிருத்தின் குரலில் “கனா” படத்தில் ஒரு பாடலை பதிவு செய்து உள்ளார்.

“அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்த பாடலை பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது.

அந்த பாடல் பதிவின் முழு அமர்விலும் எங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தோன்றியது, அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் உதவியது “என்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கனா’ படத்திற்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை உருவாக்கியிருக்கிறார் திபு.

“நாங்கள் நாட்டுப்புற வகையில் புதிய பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க முயற்சித்தோம். வழக்கமாக, பியானோ மற்றும் ஸ்ட்ரிங்க்ஸ் போன்ற கருவிகள் மெல்லிய ரொமாண்டிக் பாடல்களில் தான் அதிகம் உபயோகப்படுத்தப்படும்.

ஆனால் நாங்கள் அதை பாரம்பரியமான தவில் மற்றும் நாதஸ்வரத்துடன் கலந்து இந்த பாடலை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் திபு.

மேலும், அனிருத் பல நாட்டுப்புற பாடல்களை பாடியிருந்தாலும் இது அவரது லிஸ்டில் புதியதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.

இந்த அழகான நாட்டுப்புற பாடல் வரிகளை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இது ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தர்ஷன் ஆகியோர் நடிக்க படமாக்கப்படுகிறது.

தர்ஷன் ஐஸ்வர்யாவை காதலிக்கிறார், அவர் தனது காதலி ஐஸ்வர்யாவை நேசிப்பதை சொல்லும் பாடலாக இது அமைந்திருக்கிறது.

புதிதாக துவங்கப்பட்டுள்ள சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் கனா படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி மிகப்பிரமாண்டமாக வெளியிடப்பட இருக்கிறது.

தனது சினிமா வாழ்க்கையின் மூன்று முக்கிய தூண்களான இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் டி இமான் ஆகியோர் இந்த படத்தின் இசையை வெளியிடுவார்கள் என அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இந்த விழாவிற்கு கௌரவ விருந்தாளியாக அழைக்கப்பட்டு இருக்கிறார்.அவரே இசையை வெளியிட போகிறார்.

இயக்குனர் அருண்ராஜா காமராஜின் கனா ஒரு உண்மைக்கதை அல்ல. ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக சாதிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் கனவை சொல்லும் ஒரு கற்பனையான படம்.

Anirudh to Enthrall Folk number for Sivakarthikeyans Kanaa

தேர்தல் தள்ளி வைப்பு; நடிகர் சங்க கட்டிடம் முடிந்த பிறகுதான் திருமணம்; விஷால் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பொதுக்குழுவில் விஷால் பேசியதாவது:-

‘நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 19 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த இடத்தை ரூ.26 ஆயிரத்துக்கு வாங்கினார்கள்.

இப்போது அதன் மதிப்பு ரூ.150 கோடியில் இருந்து ரூ.200 கோடி வரை இருக்கும். கட்டிடம் கட்டுவதை எதிர்த்து பல தடைகள் ஏற்படுத்தினார்கள்.

கோர்ட்டுக்கு சென்றார்கள். அதையெல்லாம் மீறி கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆத்மா நமக்கு துணையாக இருக்கிறது.

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் எனது திருமணம் நடைபெறும். வேங்கட மங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை விற்றது தொடர்பாக முந்தையை நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.” இவ்வாறு விஷால் பேசினார்.

கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

‘நடிகர் சங்க பொறுப்பில் 3 வருடங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளோம். உறுப்பினர்களுக்கு பல நலப்பணிகள் செய்துள்ளோம். வாக்குறுதி அளித்தபடி சங்க கட்டிடத்தையும் கட்டி வருகிறோம்.

உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்வதற்காக நடிகர் சங்க தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சங்கத்துக்கு கடிதம் கொடுத்துள்ளனர். எனவே தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளிவைத்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

அனைத்து உறுப்பினர்களுமே தேர்தலை தள்ளி வைக்க ஆதரவு தெரிவித்தனர். அடுத்த மார்ச் மாதம் கட்டிட வேலைகளை முடித்து திறப்பு விழா நடத்த முடிவு செய்துள்ளோம்.

நடிகர் சங்க தேர்தலும் புதிய கட்டிடத்திலேயே நடைபெறும். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க மேலும் ரூ.20 கோடி தேவைப்படுகிறது.

எனவே நட்சத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். சர்வதேச தரத்தில் இந்த கட்டிடமும் அரங்குகளும் கட்டப்பட்டு வருகிறது என்றார்கள்.

பொதுக்குழுவில் நடிகர்கள் விஜயகுமார், பாக்யராஜ், எஸ்.வி.சேகர், விஜய்சேதுபதி, ஜீவா, ஐசரி கணேஷ், பூச்சி முருகன், நந்தா, ஸ்ரீமன், கே.ராஜன், சரவணன், உதயா, ஆனந்தராஜ், நடிகைகள் லதா, சரோஜா தேவி, பூர்ணிமா, சச்சு, காஞ்சனா, சோனியா, சங்கீதா, குட்டி பத்மினி, ஷீலா, ரோகிணி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Nadigar Sangam election will be postponed for 6 months says Nassar

*அக்னிதேவ்* படத்தில் பாபி சிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் ஒரு நாள்-2’ படத்தை இயக்கிய JPR என்ற ஜான்பால் ராஜ் மற்றும் அறிமுகம் ஷாம் சூர்யாவும் இணைந்து ‘அக்னிதேவ்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகின்றனர்.

இப்படத்தில் பாபி சிம்ஹா, சதீஷ் இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர்.

தற்போது பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலை தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

‘சியாண்டோ ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ஜெய் ஃபிலிம்ஸ்’ இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Ramya Nambessan to romance with Bobby Simha in Agni Dev

கோலமாவு கோகிலா-வை சிரிச்சு சிரிச்சு ரசித்த ரஜினி-ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா, ஜாக்குலின், முதலானோர் நடித்திருந்த படம் ‘கோலமாவு கோகிலா’.

இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

திரையுலக பிரபலங்களி பலரும் இதை பாராட்டி வருகின்றனர்.

‘கோலமாவு கோகிலா’வை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கிய நெல்சனை ஃபோனில் அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து, ‘கோலமாவு கோகிலாவை சிரிச்சு சிரிச்சு ரசித்து பார்த்தேன்’ என்று கூறியுள்ளார்.

அதைப் போல இயக்குனர் ஷங்கரும் ‘கோலமாவு கோகிலா’வுக்கு பாராட்டியுள்ளார்.

காமெடி கலந்த கிரைம் டிராமா கோலமாவு கோகிலா, நயன்தாராவின் கேரக்டர், நடிப்பு சூப்பர்! நெல்சனின் புதிய முயற்சி மற்றும் அனிருத்தின் இசை ஆகியவற்றை மிகவும் ரசித்தேன் என ட்வீட் செய்துள்ளர் இயக்குனர் ஷங்கர்.

Rajini and Shankar praises Kolamaavu Kokila movie and team

பெண்கள் கபடி-யை படமாக்கும் சுசீந்திரன்; சசிகுமார் நடிக்கிறாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரே சமயத்தில் 3 படங்களை இயக்கி வைத்துள்ளார் சுசீந்திரன்.

‘ஜீனியஸ்’, ‘ஏஞ்சலினா’ மற்றும் ‘சாம்பியன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவை மூன்றும் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தனது அடுத்த படத்தையும் ஆரம்பிக்கவுள்ளார்.

பொதுவாக இவரது படங்கள் ஏதாவது ஒரு விளையாட்டை மையப்படுத்தி இருக்கும்.

தற்போது இயக்கவுள்ள படத்தில் பெண்கள் கபடியை பின்னணியாக வைத்துள்ளாராம்.

இதில் சசிகுமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் எனவும் மற்ற நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடக்கிறது என கூறப்படுகிறது.

இப்படத்தின் சூட்டிங் வருகிற அக்டோபரில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

Suseenthiran teams up with Sasikumar for Womens Kabadi based movie

More Articles
Follows