முதன்முறையாக அப்பா சரத்குமாருடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதிஹாசன் இருவரும் பல படங்களில் நடித்திருந்தாலும், தற்போதுதான் சபாஷ் நாயுடு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இவர்களைப் போல் சரத்குமாரும் அவரது மகள் வரலட்சுமியும் இணைந்து நடிக்கின்றனர்.

வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் பாம்பன் படத்தில்தான் அவர்கள் முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

இத்தகவலை வரலட்சுமியே தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Varalakshmi teamsup with her dad Sarathkumar for Paamban movie

Happy to announce that I will be acting along side my father in directed by super excited to share screen space with u daddy.. all the best to the entire team..!!

ரஜினியை சந்தித்து அரசியல் மாநாட்டுக்கு அழைத்தார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவை தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொண்டிக்கும் இரு ஜாம்பவான்கள் கமல்-ரஜினி.

சினிமாவில் போட்டிகள் இருந்தாலும் இவர்களிடையேனான நட்பு அனைவரும் ஆச்சரியப்படும் ஒன்றுதான்.

தற்போது இருவரும் தனித்தனியாக அரசியல் களம் காணவிருக்கின்றனர்.

இந்நிலையில் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி தன் அரசியல் கட்சியை ஆரம்பித்து அன்றே மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்.

எனவே இதனை முன்னிட்டு இன்று சற்றுமுன் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார்.

இதுகுறித்து கமல் தெரிவித்ததாவது…

விரைவில் அரசியல் பயணத்துக்கு செல்வதால் எனக்கு பிடித்தவர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறேன்.

மதுரை கூட்டத்தில் பங்கேற்க ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளேன். அவர் வருவாரா? என்பதை அவர்தான் முடிவு செய்வார்.” என்று கமல் தெரிவித்தார்.

Kamal invited Rajini for his political party launch event

பேட்மிண்டன் லீக்; கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணி லோகோ வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

விழாவில் கோகுலம் குழும தலைவர் கோபாலன் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டார்.
விழாவில் எடிட்டர் ரூபன் உதவியாளர் சரத்குமார் எடிட்டிங்கில், ஏ ஆர் ரகுமான் பள்ளியில் இருந்து வந்த தேஜூ இசையில் உருவான கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் தீம் பாடல் ஒளிபரப்பப்பட்டது.

சென்னை ராக்கர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். வீரர்கள் அனைவருமே பயிற்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். கண்டிப்பாக சென்னை ராக்கர்ஸ் வெற்றி பெறும் என்றார் அணியின் பயிற்சியாளர் ஜெர்ரி.

கோகுலம் குழுமத்தின் 50வது ஆண்டில், அவர்களின் கால்பந்து அணியும் சிறப்பாக விளையஅடி கோப்பைகளையும் வென்று வருகிறது.

கைப்பந்து போட்டியை இந்திய அளவில் புரமோட் செய்து வருகிறது. பேட்மிண்டன் விளையாட்டில் சென்னை அணி எங்களுக்கு கிடைத்திருப்பது பெருமையான விஷயம் என்றார் பைஜு.

நான்கு மாநில அணிகளும் பங்கேற்கும் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கில் முதன் முறையாக விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் சென்னை அணியில் விளையாடுவது பெருமையாக இருக்கிறது என்றார் மிஷா கோசல்.

விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறையை ஒருங்கிணைக்க செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் துவங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா அணிகள் விளையாடி வருகின்றன.

பாலிவுட் அணியும் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறது. கோகுலம் கால்பந்து அணியை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இப்போது பேட்மிண்டன் அணியையும் வழி நடத்த இருக்கிறார்கள். வரும் 24ஆம் தேதி செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் துவக்க விழா நடக்கிறது. 25ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் போட்டி நடக்கின்றன.

இப்போது மக்களிடம் விளையாட்டில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. நாங்கள் சென்னை மதுரை கோவையில் 13 வயது, 15 வயது மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தி அதில் திறமையாளர்களை தேர்ந்தெடுக்க இருக்கிறோம் என்றார் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் ஹேமச்சந்திரன்.

1968ல் ஆரம்பித்த கோகுலம் குழுமம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த நேரத்தில் விளையாட்டு துறையில் எங்களால் முடிந்த ஆதரவை கொடுத்து, ஊக்கப்படுத்த முயற்சிக்கிறோம்.

எற்கனவே கால்பந்து விளையாட்டில் நல்ல பெயரை பெற்று வருகிறோம். பைஜு முயற்சியில் பேட்மிண்டன் விளையாட்டிலும் இறங்கியிருக்கிறோம். விளையாட்டில் ஆர்வம் இருக்கும் திறமையானவர்களுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் இருக்கிறது.

எங்கள் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் விளம்பர தூதராக நடிகை ஹன்சிகாவும், மோட்டிவேட்டராக நடிகை வரலட்சுமியும், அணியின் கேப்டனாக விஷ்ணு விஷால் மற்றும் துணை கேப்டனாக கிருஷ்ணாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை அணியில் விஷ்ணு விஷால், கிருஷ்ணா, விக்ராந்த், கலையரசன், ஹரீஷ் கல்யாண், காயத்ரி, சுஜா வாருணி, ஜனனி ஐயர், மிஷா கோஷல் ஆகியோர் விளையாடுகிறார்கள் என்றார் கோகுலம் குழும தலைவர் கோபாலன்.

விழாவில் பிரவீன், ரகு, இசையமைப்பாளர் தேஜு, எடிட்டர் சரத்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Badminton League Gokulam Chennai rockers Logo launched

மயில்சாமி ஒரு இளிச்சவாயன்; பிச்சைக்காரன்… விவேக் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மயில்சாமி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் “காசு மேலே காசு”.

கே.எஸ். பழனி இயக்கியுள்ள இப்படத்தில் ஷாரூக், காயத்ரி ஜோடியாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், P.வாசு, பாண்டியராஜன், தரணி, நடிகர் விவேக், மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் விவேக் பேசும்போது மயில்சாமியின் நட்பு மற்றும் அவரது நல்ல குணங்களை பற்றி வெகு நேரம் பேசினார்.

அவர் பேசியதாவது…

எம்ஜிஆர் காலத்தில் இருந்தே சினிமாவில் மயில்சாமி சினிமாவில் இருக்கிறான்.

அவர் என்னை விட மூத்தவராக இருந்தாலும் நான் அவனை வாடா போடா என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவன்.

அவனிடம் யாராவது உதவி என்று கேட்டு சென்றுவிட்டால், கையில் இருப்பதை கொடுத்து உதவுவார்.

ஒருவேளை இல்லையென்றாலும் சும்மா விட மாட்டார். எங்களை போன்ற யாருக்காவது போன் செய்து உதவி கேட்டு அந்த நபருக்கு உதவி செய்வார்.

ஒரு முறை ஒரு பார்ட்டிக்கு சென்று இருந்தோம். அங்கு ஒருவர் நன்றாக இந்திப் பாடல் பாடிக் கொண்டே இருந்தார். இவன் ஒவ்வொரு பாடலுக்கு பணம் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

டேய். போகும்போது மொத்தமா பணம் கொடுத்துடலாம் என்றேன். அது வேற.. இந்த பாட்டு நல்லாயிருக்கு. அதுக்குதான் இந்த பணம் என்றான்.

பார்ட்டி எல்லாம் முடிஞ்சி போகும்போது டேய்.. ஆட்டோவுக்கு 50 ரூபா இருந்தா கொடு என்றான். இப்படி ஒரு நேரம் பணக்காரனாகவும் சில நிமிடங்களில் பிச்சைக்காரனாகவும் மாறிவிடுவான்.

இதேபோல்தான் உதவுவதிலும். காசு இருக்கும் போது கொடுத்துவிட்டு பின்பு பிச்சைக்காரனாக மாறிவிடுவான். அவன் ஒரு இளிச்சவாயன்/

அவனின் நல்ல குணத்துக்காகத்தான் சினிமாவில் சாதித்த பல இயக்குனர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.” என்று அவரை பாராட்டி பேசினார் விவேக்.

Vivek praises Mayilsamy at Kasu Mela Kasu audio launch

 

டாக்டர்களை அசிங்கப்படுத்திட்டார்; மனுசனா நீ பட இயக்குநருக்கு மிரட்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கஸாலி இயக்கத்தில் ஹெச்-3 சினிமாஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் “மனுசனா நீ”.

இப்படம் பரவலான விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதற்கிடையில் இந்த படத்தில் டாக்டர்களை கேவலமாக சித்தரித்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ள டாக்டர்கள் சிலர் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“மனுசனா நீ” படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸாலி இதுபற்றி கூறுகையில்…

“சமீபகாலமாக திரைப்படங்களுக்கு சிலர் வேண்டுமென்றே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மெர்சல், பத்மாவதி என நீள்கிறது பட்டியல்.

அந்த வகையில் மனுசனா நீ படத்தில் டாக்டர்களை கேவலப்படுத்தியுள்ளார்கள், எனவே படத்தை வெளியிடக்கூடாது என்று சில டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.

இது சம்பந்தமாக எனக்கு மிரட்டலும் வந்திருக்கிறது.

எல்லா துறையிலும் பணத்தாசை பிடித்தவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் நீதி, நியாயம் எல்லாம் மறந்து கேவலமாக நடந்து கொள்கிறார்கள்.

அவர்களைப் பற்றிய உண்மையை சொன்னால் ஒட்டு மொத்தமாக அந்த துறை சார்ந்தவர்களை கேவலமாக சித்தரிப்பதாக அர்த்தமல்ல. அப்படி மருத்துவத்துறையிலுள்ள ஒரு கேவலமான பணத்தாசை பிடித்த டாக்டர் கதாபாத்திரம் மனுசனா நீ படத்திலும் வருகிறது.

ஆனால் அது ஒட்டுமொத்த டாக்டர்களையோ, மருத்துவத்துறையையோ கேவலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு எனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள்.

உண்மையை சொன்னால் மிரட்டல் வருவது நம் ஊரில் இயல்பான ஒன்று தான். இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்.

படத்தை தியேட்டரில் பாருங்கள். அதன் பிறகு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். அப்போது எது சரி, எது தவறு என்று விவாதிக்கலாம்.

ஆனால், பொத்தாம் பொதுவாக விமர்சிப்பது, மிரட்டல் விடுவது எல்லாம், கலையை கலைஞர்களை அவமானப்படுத்தும் செயல்.

எனவே எங்கள் திரைத்துறைக்கு விடுக்கப்படும் மிரட்டலாக இதை நான் பார்க்கிறேன். இனிமேலும் மிரட்டல் தொடர்ந்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி யோசித்து களத்தில் குதிப்பேன்’ என்கிறார் இயக்குநர் கஸாலி.

Manusanaa Nee director Ghazali insulted Doctors profession Issue

செக்ஸியா டிரெஸ் போட முடியாது; ஆதியுடன் கவர்ச்சி சண்டை போட்ட மாளவிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் எழுதி இயக்கி வரும் “ அருவா சண்ட “ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி, அனுராதா பட் பாடிய “ ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக…“ என்ற பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கப்பட்டது.

கதாநாயகியின் அறிமுகப் பாடலான இந்தப் பாடல் காட்சியில் கதாநாயகி மாளவிகா மேனன், இயக்குநர் கொடுத்த உடைகளை அணிய முடியாது என்று மறுப்பு தெரிவித்தார்.

இந்தப் பாடலில் கொஞ்சம் கவர்ச்சியாக தெரிய வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் அப்புறம் என்ன என்று இயக்குநர் ஆதி கேட்க நீங்க சொன்னதை விட எடுத்த டிரஸ் ரொம்ப சிறியதாக இருக்கிறது. இதுவரை இப்படிப்பட்ட டிரஸ் அணிந்து ஆடியதில்லை என்று மாளவிகா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

இதனால் சுமார் ஒருமணி நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நடன இயக்குநர் ராதிகாவும் மாளவிகாவுக்கு புரியவைக்க முயற்சி செய்தார். கடைசியில் வேறு சில உடைகளை வெட்டி தைத்துக் கொடுத்தார் இயக்குநர்.

பின்னர் ஓரளவு சமாதானம் அடைந்த மாளவிகா, கொட்டும் அருவியில் நனைந்தபடி நடனக் குழுவினருடன் செமத்தியாக ஆட்டம் போட்டார். ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் ஏ.ராஜா தயாரித்து வரும் அருவா சண்ட திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

Malavika menon fight with her director Adhirajan at Aruva Sandai shooting spot

More Articles
Follows