தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதனால் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் எந்த படங்களும் வெளியாகவில்லை.
ஏற்கெனவே திரையரங்குகள் வெறிச்சோடிக் காணக் கிடக்கின்றன.
புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் ஹிட்டான பழைய படங்களை சில தியேட்டர்களில் திரையிட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலத்தில் திரையரங்குகளுக்கு சுமார் 12 முதல்15 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்ற வகையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல் பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நடந்தது.
இதில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்கள்.
இந்நிலையில், வரும் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.
இதன்படி அனைத்து படங்களின் படப்பிடிப்பும் வருகிற 16-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட உள்ளது.
இப்படி அடுத்தடுத்து வந்த அறிவிப்புகளால் திரையுலகம் முழுவதும் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.