தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து இதில் விஜய்யை முருகதாஸ் இயக்கியுள்ளதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
எனவே சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஒரு சினிமா டிக்கெட்டின் விலை ரூ.1000-க்கும் மேல் விற்பனை செய்கிறார்கள்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:
நான் சரியான விலையில் தான் டிக்கெட் விற்கிறேன். மற்ற திரையரங்குகளில் விற்கிறார்கள் என்றால் விற்கும் திரையரங்கு உரிமையாளரைத் தான் கேட்க வேண்டும்.
அரசாங்கமும், நாங்களும் அதிக விலைக்கு டிக்கெட் விற்காதீர்கள் என்று சொல்கிறோம். இது தொடர்பாக பேசி பேசி டயர்ட்டாகி விட்டேன்.
அதிக விலைக்கு விற்றால் தான் சம்பளம் அதிகமாக கிடைக்கும் என்பதால் முன்னணி நடிகர்கள் யாரும் இதுபற்றி வாயே திறப்பதில்லை.
என் திரையரங்குகளில் ரூ.150-க்கு மேல் ஒரு டிக்கெட் கூட விற்கவில்லை. அனைத்துமே ஆன்லைனில் தான் விற்கிறோம்.
பெரிய விலைக் கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்குகிறார்கள். அவர்களைக் குறைச் சொல்ல முடியாது. இதில் திருந்த வேண்டியவர்கள் நடிகர்கள் தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்