தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தை ஜெ.எஸ்.அபூர்வா புராடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ளார்.
இயக்குனர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆஞ்சி ஒளிப்பதிவு செய்ய, உத்தமராஜா என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் கதை தர்மபுரியில் நடந்த ஒரு (ஜாதி) காதல் கலப்பு திருமண உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே இப்படத்திற்கு சில அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து படத்தயாரிப்பாளரும் இப்பட வில்லன் நடிகருமான எம்.எஸ். குமார் கூறியதாவது…
ஒரு மாஸ் மீடியாவில் ஒரு உண்மைச் சம்பவத்தை சொல்ல வேண்டும் என நினைக்கிறோம்.
இதனால் எதிர்ப்புகள் வந்தாலும் சமாளிக்க தயார்.” என கூறினார்.
