ராசு ரஞ்சித்தின் *தீதும் நன்றும்* படத்தை வெளியிடும் சிங்காரவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

N H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ள படம் ‘தீதும் நன்றும்’. அழகிய தமிழ் வார்த்தைகளில் தமிழ்ப்படங்களுக்கு பெயர் வைப்பது அரிதாகிவிட்ட சூழலில் ‘தீதும் நன்றும்’ என அழகு தமிழ் டைட்டிலுடன் இயக்குனராக அறிமுகமாகிறார் ராசு ரஞ்சித்.

இவர் நாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றாட தேவைகளுக்காக சின்னச்சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் மூன்று நண்பர்கள் பற்றிய கதை தான் இந்தப்படம். ஒருவருக்கு நல்லது நிகழ்வதும் பாதிப்பு ஏற்படுவதும் அவரவர் செய்யும் செயல்களால் தான்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிற தமிழ் பொன்மொழியில் இருந்துதான் இந்தப்படத்தின் டைட்டிலையே தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம். இந்தப்படம் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ளது.

தமிழ் கலாச்சாரம் சார்ந்த படம் தான் என்றாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை இந்தப்படம் கொடுக்கும் என்கிறார் இயக்குனர் ராசு ரஞ்சித்.

இந்தப்படத்தின் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார் ராசு ரஞ்சித், மற்ற இரண்டு ஹீரோக்களாக சந்தீப் ராஜ், ஈசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் சந்தீப் ராஜ் ஏற்கனவே தூங்காவனம் படத்தில் கமலுடன் நடித்தவர். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்..

இவர் ‘8 தோட்டாக்கள்’ வெற்றிப்படம் மூலமாக ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் மூன்று நண்பர்களில் ஒருவரின் மனைவியாக படத்தின் மைய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

இன்னொரு முக்கிய வேடத்தில் கேரளாவை சேர்ந்த லிஜிமோல் ஜோஸ் என்பவர் நடித்துள்ளார்.

அபர்ணாவை ஒப்பந்தம் செய்வதற்காக மலையாளத்தில் அவர் நடித்த படத்தை பார்த்தபோது அதில் இன்னொரு கேரக்டரில் நடித்திருந்த லிஜிமோலையும் இந்தப்படத்திற்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் இயக்குனர் ராசு ரஞ்சித்.

கவின்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சி.சத்யா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களாலும் பின்னணி இசையாலும் படத்திற்கு முதுகெலும்பாக அவர் இருப்பார் என்கிறார் இயக்குனர் ராசு ரஞ்சித்.

அதுமட்டுமல்ல இவர் அடையாறு திரைப்பட கல்லூரியில் எடிட்டிங் படித்தவர் என்பதால் இந்தப்படத்தின் படத்தொகுப்பையும் தானே கவனித்துள்ளார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தற்போது இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

படத்தை பார்த்து வியந்த விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.

Theethum Nandrum movie will be released by Distributor Singaravelan

பேரிடர் காலத்தில் அவசர உதவிக்கு ஆளில்லா விமானம்; அசத்திய அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில நடிகர்கள் சினிமாவில் நடிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்திருப்பார்கள்.

ஆனால் அஜித் சினிமாவில் நடிக்க மட்டுமே செய்வார். ஆனால் மற்ற நடிகர்கள் எவரும் செய்யாமதை நிஜத்தில் செய்து காட்டி வருபவர் அஜித்.

இவர் ஒரு கார் ரேசர், பைக் ரேசர் என்பது தெரிந்த விஷயம்தான்.

மேலும் இவர் பைலட் லைசன்சும் வைத்திருக்கிறார் என்பது தல ரசிகர்களுக்கு தெரிந்திருக்கலாம்.

அவரின் இந்த திறனை மாணவர்களுக்கு பயன்படுத்தும் விதமாக மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அவசரகாலங்களிலும், பேரிடர் நேரத்திலும் மருத்துவ உதவிசெய்வதற்கு பயன்படும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தை தயாரிக்க முடிவு செய்தது.

இதனை முன்னிட்டு தக்‌ஷா டீம் எனும் பெயரில் புதிய மாணவர் குழுவை உருவாக்கினார்கள் அதில் அஜித் முக்கிய ஆலோசகராக இருந்தார்.

இதற்கு முக்கிய காரணம் இதுபோன்ற குட்டி விமானங்களை அஜித் ஏற்கெனவே உருவாக்கி இருக்கிறார் என்பதுதான்.

அஜித்தின் ஆலோசனையோடு உருவாக்கப்பட்ட அந்த ட்ரோன் இந்தியா முழுவதும் உள்ள 111 பொறியியல் கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டியில் பல சாதனைகளை படைத்துள்ளது.

சமீபத்தில் நடந்த போட்டியில் இந்த தக்‌ஷா ட்ரோன் 6 மணி நேரம் 7 நிமிடம் வானத்தில் பறந்து உலகத்திலேயே அதிக நேரம் பறக்கக்கூடிய ட்ரோன் என சாதனை படைத்துள்ளது.

இதை பயன்படுத்தி மருத்துவ உதவிகளை மேற்கொள்ள முடியுமா என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.

அஜித்தின் இந்த அறிவாற்றலை கண்டு அந்த மாணவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Tamil Actor Ajith drone made world record

ரஜினியுடன் நடிக்க விறுவிறுப்பாக படங்களை முடிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தலைவர் 165 என்று தற்காலிமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கவுள்ளார் விஜய்சேதுபதி.

இவர் முன்னணி ஹீரோவாக வலம் வந்தாலும் இப்படத்தில் இவர் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் முதல் கட்ட சூட்டிங்கை அண்மையில் டார்ஜிலிங்கில் முடித்தார் கார்த்திக் சுப்பராஜ்.

விரைவில் இதன் 2ஆம் கட்ட சூட்டிங்கை துவங்கவுள்ளார். இதுவும் பட இந்தியாவில் இருக்கும் எனத் தெரிகிறது.
அதில் விஜய்சேதுபதி கலந்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

ரஜினியுடன் முதன் முறையாக நடிக்கவுள்ளதால் அதில் எந்த வித பிரச்சினையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தன் கை வசம் உள்ள ஜீங்கா, 96, சீதக்காதி ஆகிய படங்களின் புரோமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு விறுவிறுப்பாக முடித்து வருகிறாராம்.

கடந்த இரண்டு நாட்களில் இந்த 3 பட செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

நேற்று ஜுங்கா பட பிரஸ் மீட் நடைபெற்றது. அத்துடன் 96 படத்தின் டீசரும் மாலை வெளியானது.
தற்போது சீதக்காதி படத்தின் மேக்கிங் வீடியோ ஜுலை 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் 165 பட 3ஆம் கட்ட சூட்டிங்கை மதுரையில் நடத்தவுள்ளாராம் கார்த்திக் சுப்பராஜ்.

Vijay Sethupathi completing his movie promotion in hurry because of Rajini

வித்தியாச விஜய்சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படும் *காலா* நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் காலா படத்தில் தாராவி பகுதி ஒரு மையக் கருவாக பயன்படுத்தப்பட்டு இருந்தது.

அதில் புயல் சாருமதி என்னும் போராளி வேடத்தில் நடித்தவர் இந்தி நடிகை அஞ்சலி பாட்டீல்.

இவரது அண்மை பேட்டியில்…

‘தமிழில் எந்த நடிகர்களோடு நடிக்க விரும்புகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டதற்கு… எல்லாருடன் நடிக்க ஆசைத்தான். முக்கியமாக விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும்.

அவருடைய படங்களை நான் இதுவரை பாக்கல. ஆனால், நண்பர்கள் பலரும் அவரைப் பற்றி அவருடைய வித்தியாசமான படத்தேர்வுகள் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள்.

எனவே அவருடன் நடிக்க விருப்பம்” என்று கூறி இருக்கிறார். எனத் தெரிவித்துள்ளார்.

அஞ்சலி பாட்டீல் இரண்டு தமிழ்ப்படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

தனது ஆசைகளை துறந்துவிட்டு மக்களுக்காக போராடும் தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஆர். முருகதாஸ் இயக்கி வரும் சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் டூயட் பாடி வருகிறார் விஜய்.

அரசியலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய் வெளிநாட்டில் வேலை செய்வாராம்.

கூகுளின் தலைமை இயக்குனர் சுந்தர் பிச்சை அவர்கள் போல் தானும் உலக அளவில் பேசப்படும் ஒரு நபராக வேண்டும் என ஆசைப்பட்டு உழைப்பாராம்.

இதனிடையில் தமிழகம் வரும் விஜய், இங்குள்ள மக்கள், விவசாயிகள் படும் கஷ்டத்தைப்பார்த்து தனது ஆசைகள் துறந்துவிடுவார்.

அதன் பின்னர் ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்காக அரசியல்வாதிகளை எதிர்த்து போராடுவாராம்.

இதுதான் சர்கார் கதை எனவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திக்கேயன்-நயன்தாரா இணையும் படத்தை தொடங்கினார் ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீமராஜா படம் முடிவடையும் முன்பே ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

‘ஸ்டுடியோ கிரீன்’ சார்பாக கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த மே மாதம் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

தற்போது ‘சீமராஜா’வின் வேலைகளை முடித்துவிட்டு ராஜேஷ் இயக்கவுள்ள தனது 13-வது படத்தின் படப்பிடிப்பை துவங்கி விட்டார் சிவா.

‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுடன் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

முக்கிய கேரக்டர் சதீஷ் நடிக்கிறார்.

இவையில்லாமல் 24ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ள சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்திலும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை ஆர்.ரவிகுமார் இயக்க ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, ரகுல் பிரித்தி சிங் நாயகியாக நடிக்கிறார்.

More Articles
Follows