காலாவுக்கு டைனோசர்; சர்காருக்கு ரிக்‌ஷா… கலாய்க்கும் *தமிழ்ப்படம்2*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழ் படத்திற்கு காத்திருப்பது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் வெகுநாட்களுக்கு பிறகு தற்போது தமிழ்ப்படம்2 என்ற படத்திற்கு பெரும் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், ட்ரைலர் பாடல்கள் என அனைத்தும் பட்டி முதல் சிட்டி வரை பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் ஹிட்ட்டித்த எல்லா படங்களின் முக்கிய காட்சிகளையும் கலாய்த்து வருகின்றனர்.

முக்கியமாக ரஜினி, கமல், விஜய், அஜித், விஜயகாந்த், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் வரை அனைத்து ஹீரோக்களையும் ஏதாவது ஒரு காட்சியிலாவது கலாய்த்து உள்ளனர்.

அனைத்து தரப்பு ரசிகர்களும் அப்படி என்னதான் கலாய்த்து இருக்கிறார்கள் என பார்க்கவே, இந்த டீசர் ஹிட்டடிக்க இதுவே மிகப்பெரிய காரணமாகிவிட்டது.

அண்மையில் வெளியாக நடிகையர் திலகம் பட கீர்த்தி சுரேஷையும் கலாய்த்து ஒரு ஸ்டில் விட்டு இருந்தனர்.
மேலும் சின்ன கவுண்டர் விஜயகாந்த் போஸ்டரையும் கலாய்த்திருந்தனர்.

காலா பட போஸ்டரில் ரஜினி ஒரு நாய் மீது கை வைத்திருப்பார். அதனை கலாய்த்து சிவா ஒரு டைனோசர் மீது கை வைத்திருக்கிறார்.

சர்கார் பட 2வது போஸ்டரில் ஒரு காரில் அமர்ந்துக் கொண்டு விஜய் லேப்டாப் ஆப்ரேட் செய்வார். அதே ஸ்டைலில் மிர்ச்சி சிவா ஒரு ரிக்சாவில் அமர்ந்திருக்கிறார்.

இப்படம் வருகிற ஜீலை 12ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு பிறகு யாரையும் கலாய்க்க முடியாது என்பதால் அண்மைக்கால படங்களையும் அதன் போஸ்டர்களையும் முடிந்தவரை கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

சி.எஸ். அமுதன் இயக்கியுள்ள இப்படத்தில் சிவா நாயனாக நடிக்க, சதீஷ் வில்லனாக நடித்துள்ளார்.

Tamilpadam2 poster teasing Kaala Rajini and Sarkar Vijay

கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு பிறகு 3 படங்களை முடிவு செய்த ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இது ரஜினியின் நடிப்பில் உருவாகும் 165வது படம் என கூறப்படுகிறது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இதன்பின்னர் ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனையடுத்து முன்பே வாக்கு கொடுத்தப்படி கே.எஸ். ரவிக்குமார் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கிறாராம்.

இப்படத்தின் இணை தயாரிப்பாளராக சங்கிலி முருகன் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இப்படங்களுக்கு பின்னர் ராஜமௌலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் கதையமைப்பில் லிங்குசாமி இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் ரஜினி.

இவற்றையெல்லாம் 2020க்குள் முடித்துவிட்டு அதன் பின்னர் முழு மூச்சாக அரசியல் இறங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

2021ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது போர்களத்தில் சந்திப்போம் என காவலர்களுடன் காத்திருக்கிறாராம் இந்த மன்னன்.

After Karthik Subbaraj movie Rajini decided to act in 3 movies

இதையும் படிங்க – காலா திரை விமர்சனம்

சிவகார்த்திகேயனின் நியூ லுக்கால் ஒரு படம் பண்ண அனிருத் அழைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்ராம் இயக்கி வரும் சீமராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் இரண்டு வேடம் ஏற்பதால் ஒரு கெட் அப்புக்காக நீண்ட தாடி, அதிகமான தலை முடியை வைத்து பொது நிகழ்ச்சிகளில் காணப்பட்டார்.

இந்நிலையில் அதே கெட் அப்புடன் தற்போது ஒரு போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அதை ட்விட்டரில் பதிவிட ரசிகர்கள் புதிய படத்துக்கான தோற்றமா என்று பலரும் கேட்டனர். ஆனால் திடீர் என்று நடத்திய போட்டோஷூட்’ என்று மட்டும் பதில் அளித்தார்.

இதற்கு இசையமைப்பாளரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பருமான அனிருத், இந்த கெட்-அப்பில் ஒரு படம் பண்ணுவோமா? தீம் மியூசிக் ரெடி என்று ரிப்ளை செய்துள்ளார்.

உடனே சிவகார்த்திகேயன், ‘சார் என்ன சார் கேட்கிறீங்க… நம்ம பண்றோம் சார். ஒரு ஹிட் ஆல்பம் கிடைக்க போகுது நான் ரெடி சார்…’ என பதிவு செய்துள்ளார்.

‘சீமராஜா’ படத்தில் சமந்தா உடன் கீர்த்தி சுரேஷ் அவர்களும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan new look photo shoot Anirudh ready with Theme music

நாளை STR ரசிகர்களுக்கு *அதிரடி* விருந்து தரும் VP & SK

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு (VP) இயக்கத்தில் விரைவில் சிம்பு (STR) நடிக்கவுள்ளார் என்ற செய்தியை பார்த்தோம்.

இப்படத்தை தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி (SK) தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகி யார்? என்பதை படக்குழுவினர் உறுதியாக கூறவில்லை.

ஆனால் கீர்த்தி சுரேஷ் அல்லது ஸ்ரீதேவி மகள் ஜான்வி நாயகியாக நடிக்கலாம் என தகவல்கள் வந்துள்ளன.

இந்நிலையில், நாளை ஜீலை 10ஆம் தேதி காலை 11 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதன் தலைப்பு “அதிரடி”யாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

விரைவில் மற்ற கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Venkat Prabu Simbu combo movie first look from 10th July 11am

பாலச்சந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு தடை விதித்த இலங்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலசந்திரன், இசைப்பிரியா இருவரின் படுகொலையை மையமாக வைத்து ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ (Witness In Heaven) திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட முழுநீள திரைப்படம் சாட்சிகள் சொர்க்கத்தில்.

இப்படத்தில் ஈழத்தில் நடந்த கொலை சம்பவங்களோ, சித்திரவதை காட்சிகளோ, இறுதிப்போரில் நடந்த சம்பவங்களோ சித்தரிக்கப்படவில்லை என்று ஏற்கெனவே கூறியிருந்தார்.

இப்படத்தின் இயக்குநர் ஈழன் இளங்கோ. இருப்பினும், இறுதிப்போரில் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் முகாம்களில் மற்றும் சமுதாயத்தில் வாழும் மக்களின் சோகக்கதைகள் மற்றும் சம்பவங்கள் இப்படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளது.

அதோடு Channel 4 -ல் சாட்சிகளோடு எடுக்கப்பட்டு காண்பிக்கப்பட்ட பல ஆவணங்களும் செய்திகளும் இப்படத்தில் தேவை அறிந்து சேர்க்கப்பட்டுள்ளதன. அதுமட்டுமின்றி, பாலசந்திரனும் இசைப்ரியாவும் திரையில் தோன்றும் காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து இத்திரைப்படம் மிகவும் உணர்ச்சிவசப்படும் வகையில் கதையமைக்கப்பட்டுள்ளது என்பது இப்படத்தின் சிறப்புக் காட்சி பார்த்த பலரது கருத்தும் ஆகும்.

சென்ற ஏப்ரல் 16 ஆம் தேதி, சென்னையில், பிரசாத் திரையரங்கில் இப்படத்தின் மாதிரிகாட்சி திரையிட ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.

இதற்கு பல திரைப்பட பிரபலங்களும், அரசியல்வாதிகளும் தமிழ் பற்றாளர்களும் வருவதாக இருந்தது, தமிழகத்தில் நடக்கும் காவேரி விவகாரம் மற்றும் பல போராட்டங்கள் காரணமாகவும், போராட்டங்களுக்கு ஆதரவுதெரிவிக்கும் முகமாகவும் இயக்குநர் இந்த மாதிரிகாட்சி நிகழ்வை ரத்துசெய்து, மறு அறிவிப்பு வரும்வரை தள்ளிவைத்தார்.

ஜூலை மாத இறுதியில் இந்த சிறப்புக் காட்சி நடக்க உள்ளது.

இதற்கிடையில், இலங்கையில் இப்படத்தை திரையிடும் முயற்சியில் சென்ற மார்ச் 19, 2018 அன்று தணிக்கை பெறுவதற்காக இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருக்கும் தணிக்கை குழுவிடம் விண்ணப்பம் கையளிக்கப்பட்டது, இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தை இலங்கையில் திரையிட தடை விதித்துள்ளனர். இயக்குநரின் பிரதிநிதிகள் எவ்வளவு முயன்றும், முயற்சி பயனளிக்கவில்லை.

“இறுதிப்போரில் நடந்த சம்பவங்கள் படத்தில் இல்லைதானே பின் எதற்கு தடை?” என்று கேட்டதற்கு, இப்படத்தில் வரும் செய்திகளும், துணைக்கதைகளும், பல இடங்களில் வரும் வசனங்களும், ஒரு பாடலும், மிகவும் உணர்ச்சிகரமாகவும் இலங்கை அரசாங்கத்திற்கும் அரச படையினருக்கும் எதிராகவும் உள்ளது. இத்திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதித்தால் பல சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன,” என்றும் கூறப்பட்டது.

இப்படத்திற்கு இலங்கையில் தடை என்ற செய்தி இயக்குநருக்கும் சக கலைஞர்களுக்கும், காத்திருந்த ரசிகர்களுக்கும், உணர்வாளர்களுக்கும் ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் தந்திருக்கின்றது.

இதுகுறித்து ஈழன் இளங்கோ கூறுகையில், “நாம் எப்படியாவது இந்தப்படத்தை உலகெங்கும் வாழும் மக்களை பார்க்க வைப்போம், தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழியினரும் புரிந்துகொள்ளக்கூடியவாறு இத்திரைப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, ஆகையால், தமிழர்கள் மட்டுமின்றி மாற்றுமொழி பேசும் மக்களைக்கூட இப்படத்தை பார்க்க வைக்க வேண்டும், அப்போதுதான், ஈழத்தமிழருக்கு நடந்த, நடக்கின்ற கொடுமைகளை அறியாதவர் கூட அறிந்துகொள்ள முடியும்,” என்றார்.

அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு மாதிரிக் காட்சி நிகழ்வில், இத்திரைப்படத்தில் நடித்த, தமிழ் தெரியாத ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்த நடிகை இந்திரா படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு, “இந்த திரைப்படம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆனால் இந்த அளவிற்கு உணர்ச்சிகரமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கைவில்லை,” என்று கூறி கண்கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை விரைவில் உலகெங்கும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

Srilank govt ban order for LTTE Prabakaran son murder story movie

கேன்சர் நிறுவனத்திற்கு சர்கார் டீம் 10 கோடி இழப்பீடு வழங்க கோரி வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்து வரும் படம் சர்கார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கு கடந்த ஜூன் 21-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதில் ஒரு போஸ்டரில் விஜய் புகைப்பிடித்த காட்சிகளும் இடம் பெற்று இருந்தன.

புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என கூறிய விஜய் தற்போது மீறிவிட்டார் என கண்டன குரல்களும் எழுந்தன. மேலும் சுகாதாரத்துறையும் இப்படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து இப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் பக்கத்தில் அந்த போஸ்டர் நீக்கப்பட்டது.

மேலும் படத்தில் அதுபோன்ற காட்சிகள் இருக்காது என கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், புகைப்பிடிக்கும் காட்சியை ஊக்கப்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்தியதற்கு விஜய், முருகதாஸ், தயாரிப்பாளர் ஆகியோர் தலா ரூ.10 கோடியை அடையாறு புற்று நோய் மருத்துவ மையத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என தமது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜூலை 9) விசாரணைக்கு வந்தது. வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளருக்கு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Sarkar team to donate Rs 10 Crores to Cancer Institute for encouraged smoking Court case

More Articles
Follows