தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதனால் ஒரே வரி ஒரே நாடு என்ற அடிப்படையில் நாடு இயங்கி வருகிறது.
ஆனால் தமிழக சினிமா துறையில் இந்த வரியுடன் மாநில அரசின் 30% வரியும் இணைந்துள்ளது.
எனவே சினிமாத்துறைக்கு 58% வரி விதிப்பு ஏற்புடையதல்ல என்று திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் சென்னையில் இன்று பேட்டியளித்தார்.
அது குறித்து அவர் கூறியதாவது…
‘எல்லா துறையிலும் விலையை அவர்களே முடிவு செய்துக் கொள்ளலாம்.
ஆனால் சினிமா டிக்கெட் கட்டணத்தை அரசே முடிவு செய்கிறது.
இது சிறிய பெரிய படங்களுக்கும் பொருந்துகிறது.
நாங்கள் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை எதிர்க்கவில்லை. ஆனால் மாநில அரசின் வரியை (30%) எதிர்க்கிறோம்.
ஜீன் 30ஆம் தேதி மாலைதான் இந்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
அனைத்து வரிகளையும் சேர்த்து, கிட்டதட்ட 100 ரூபாயில் 68% வரியை செலுத்த வேண்டியுள்ளது.
இரட்டை வரியை நாங்கள் ஏற்கமாட்டோம். இதனால் பல சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம்.
நேற்று முதல் நடைமுறைக்கு வந்த வரியை தியேட்டர் உரிமையாளர்கள் கட்ட முடியவில்லை.
ஆகையால் நாளை முதல் திரையரங்கு மூடப்படுகிறது.
சில தியேட்டர்களில் நேற்றே சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.
திரைப்படத்துக்கு ஏற்ப சினிமா டிக்கெட் விலையை நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இவர்களின் முடிவை பரிசீலிக்க சொல்லி, நடிகர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilnadu Theatre Owners Association announced strike and closed all theatres