கொரோனா தடுப்பு.: மக்கள் நிதியுதவி அளிக்க தமிழக அரசு வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தன் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இதனால் பல உயிர்கள் பலியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட போதிலும் மக்கள் கொரோனா பயம் அறியாது ஊர்களில் சுற்றித் திரிந்த வண்ணம் உள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுக்க போராடி வருகின்றன. இந்த திட்டத்திற்கு பல கோடிகளை ஒதுக்கியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்களின் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80 (g)-ன் கீழ் 100 சதவீத வரி விலக்கு உண்டு.

பொது நிவாரண தொகையை முதலமைச்சரிடம் மற்றும் அரசு அலுவலர்களிடம் நேரடியாக வழங்க வேண்டாம்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சத்திற்கும் மேல் உதவி செய்யும் நபர்கள், நிறுவனங்களின் பெயர்
பத்திரிகைகளில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்கொடையை செலுத்த வேண்டிய வங்கி எண் இதோ….

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமை செயலகம், சென்னை, 600009. சேமிப்பு கணக்கு எண்: 117201000000070, IFSC:IOBA0001172 என்ற கணக்கில் பணம் அளிக்கலாம்.

Tamil Nadu govt seeks public donation to combat Corona

நடிகர் சேது இறுதிச்சடங்கில் சந்தானம் செய்த காரியம்..; நண்பேன்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2013-ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் டாக்டர் சேதுராமன்.

இந்த படம் இல்லாமல் வாலிப ராஜா, 50/50 போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் நடிகராக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையில் ஒரு டாக்டராகவும் வலம் வருபவர். புகழ்பெற்ற தோல் மருத்துவர் ஆவார்.

இவர் உமையாள் என்ற பெண்ணை 2016ல் திருமணம் செய்தார். தற்போது இவருக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று மார்ச் 26 இரவு மாரடைப்பால் காலமானார் சேதுராமன்.

இதனையடுத்து அவரின் அவரின் இறுதிச்சடங்கில் குடும்பத்துடன் கலந்து கொண்டார் நடிகர் சந்தானம்.
சோகமும் கண்ணீருமாக காணப்பட்டார் சந்தானம்.

இறுதி சடங்கில் சேதுராமனின் உடலை சுமந்து சென்றார். இது அனைவரையும் அழ வைக்கும் தருணமாக இருந்தது.

ஒரு நண்பனை இழந்தவனுக்கு தான் அதன் வலி தெரியும். இவர் தான் உண்மையான நண்பன்…

Santhanam attends Actor Dr Sethus funeral despite

தனுஷை அடுத்து துருவ் விக்ரமுடன் இணையும் மாரி செல்வராஜ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படம் அனைத்து தரப்பினரின் பாராட்டைப் பெற்று வெற்றி பெற்றது.

மாரி செல்வராஜ் இப்போது தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என கூறப்படுகிறது.

ஆதித்ய வர்மா படத்தில் அறிமுகமான துருவ் விக்ரம் அவர்கள் வேறு எந்த படத்திலும் இதுவரை நடிக்கவில்லை.

அவரின் 2வது படமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கலாம்.

Mari Selvaraj to direct Dhruv Vikram next

கொரோனாவினால் உலகமே முடங்கி கிடக்க தியேட்டர்களை திறக்கும் சீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானோ வைரஸ் முதலில் சீனாவில் தான் ஆரம்பமானது.

அதன்பின்னர் இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி அங்கு பல பேரின் உயிரை வாங்கி தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

தற்போது இத்தாலி நாட்டை விட அமெரிக்காவில் உயிர் பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

ஆனால் சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இதுநாள் வரை கடைகள், தியேட்டர்கள், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

அரசு அலுவலங்கள் மூடப்பட்டு இருந்தன. பேருந்து, ரயில், விமானம் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருந்தன.

தற்போது தியேட்டர்களை திறக்க ஆரம்பித்துள்ளது சீனா.

இதுவரை 700 தியேட்டர்களை திறந்திருக்கிறார்களாம்.

சீனா நாட்டில் மட்டும் 70 ஆயிரம் தியேட்டர்கள் உள்ளது என கூறப்படுகிறது. தற்போது 1 சதவிகிதம் தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

இதுநாள் வரை தியேட்டர்கள் மூடப்பட்டதால் சுமார் 2 பில்லியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

China opens few cinema theatres after lock down

கொரோனாவுக்கு பிரபாஸ் கொடுத்த தொகை.; இனி இவரை மிஞ்ச முடியாது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய மாநில அரசுகள் போராடி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை போட்டுள்ளார் மோடி.

மேலும் பிரபலங்கள் நிவாரண நிதியை கொடுக்கலாம் என அறிவித்துள்ளார்.

எனவே தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் அரசுக்கு உதவ முன்வந்திருக்கின்றனர்.

நடிகர் மகேஷ் பாபு ஒரு கோடி ருபாய் கொடுத்துள்ளார்.

பவர் ஸ்டார் பவன் கல்யாண் இரண்டு கோடி ரூபாய் , ராம் சரண் 70 லட்சம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பாகுபலி நடிகர் பிரபாஸ் அவர்கள் 4 கோடி ரூபாயை தருவதாக அறிவித்துள்ளார்.

பிரதமரின் நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாயும், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், தெலுங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஆக மொத்தம் 4 கோடி ரூபாயை பிரபாஸ் கொடுத்துள்ளார்.

இனி எந்த நடிகரும் இவரை மிஞ்சி கொடுத்துவிட முடியாது என்றே நம்பலாம்.

Prabhas donates Rs 4 crore for fight against Corona

BREAKING நடிகரும் டாக்டருமான சேதுராமன் திடீர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் சந்தானத்துடன் இணைந்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தில் 3 நாயகர்களில் ஒருவராக நடித்தவர் டாக்டர் சேதுராமன்.

இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இப்படத்தை அடுத்து வாலிபராஜா’ என்ற படத்திலும் நடித்தார்.

இவர் எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர். இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார்.

கடந்த 2016 பிப்ரவரியில் காரைக்குடியை சேர்ந்த என்ஜினீயர் உமையாள் என்கிற உமாபதியை திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணம் ஆகி 4 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளது. இவருக்கு தற்போது வயது 36 ஆகிறது.

இந்த நிலையில் இன்று சற்றுமுன் இவர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார்.

இவரின் இல்லம் சென்னை பட்டினப்பாக்கம் லீலா பேலஸ் அருகில் உள்ள அபார்ட்மெண்டில் உள்ளது.

இதே அபார்ட்மெண்டில் தான் நடிகர் சதீஷ் வசித்து வருகிறார். இவரின் மறைவை சதீஷ் உறுதி செய்து பதிவிட்டுள்ளார்.

Just In Actor cum Doctor Sethuraman passed away

More Articles
Follows