அஜித் ரசிகர்களின் அலப்பறையால் தமிழ் படங்கள் ரிலீசுக்கு தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவாஜி, எந்திரன், கபாலி உள்ளிட்ட பல ரஜினி படங்களை தொடர்ந்து தமிழ் படங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

எனவே மற்ற நடிகர்களின் தமிழ் படங்களும் வெளிநாட்டில் திரையிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அஜித் நடிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை படத்தை பிரான்ஸ் நாட்டில் உள்ள லீ கிராண்ட் ரெக்ஸ் என்ற திரையரங்கில் ரிலீஸ் செய்தனர்.

அஜித் திரையில் வரும்போதெல்லாம் அவரது ரசிகர்கள் திரை அருகே சென்று நடனமாடியுள்ளனர்.

ஓவராக ஆட்டம் போட்டதால் ஒட்டு மொத்த ரசிகர்களும் திரையில் விழ அந்த ஸ்கிரீன் கிழிந்துள்ளது.

இதனையடுத்து தியேட்டர் நிர்வாகத்துக்கு விநியோகஸ்தர் சார்பில், நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது.

இதுபோன்ற பிரச்சினையால் தமிழ் படங்கள் எதையும் வெளியிடுவதில்லை என தியேட்டர் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Tamil movie release ban in France theatre because of Ajith fans fight

ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரை கதிருக்கு வில்லனாக்கிய ‘ஜடா’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் குமரன் இயக்கத்தில் கதிர் நடித்து வரும் படம் ‘ஜடா’.

நாயகியாக புதுமுக நடிகை ரோஷினி நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகிபாபு, கிஷோர் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில், பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் வில்லனாக நடித்திருக்கிறாராம்.

Artist AP Sridhar plays baddie for Kathir in Jadaa movie

‘புளு பிலிம்’ ஜானி சின்சுடன் நித்யானந்தாவா.?; சிவசேனா போர்க்கொடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருண், யோகி பாபு நடிக்க உருவாகி வருகிறது ‘பப்பி’. இப்படத்தினை ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார்.

அடல்ட் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் மாதம் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தினை தடை செய்ய வேண்டும் என்று சிவசேனா அமைப்பினர் காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அதில் இப்பட டிரைலரில் ஒரு பக்கம் புளு பிலிம் படங்களில் நடிக்கும் ஜானி சின்ஸ் என்பவரின் புகைப்படமும் மற்றொரு பக்கம் நித்யானந்தாவின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

எனவே இது இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாக புகார் மனு அளித்துள்ளனர்.

Blue film fame Johnny Sins and Nithyananda photos in Puppy movie

இதோ அந்த மனு….

தீபாவளிக்கு முன்பே விஜய் தரும் ’பிகில்’ விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியானது.

விரைவில் வெறித்தனம் என்ற பாடல் வெளியாக உள்ளது.

இப்படத்தை இந்தாண்டு தீபாவளி அதாவது அக்டோபர் 27ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

ஆனால் தீபாவளி தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முன்னதாக 24-ந்தேதியே (வியாழக்கிழமை) வெளியிடப் போகிறார்களாம்.

ஏஆர். ரஹ்மான் இசையைமத்து வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Vijays Bigil likely to be release before Diwali

முதற் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த அதர்வா , அனுபமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்சத்திர நடிகர் நடிகையரிடையே புதிதாக ஒரு ஜோடி இணையும்போது ரசிகர்களிடையே ஓர் எதிர்பார்ப்பு ஏற்படுவது இயல்புதானே! ரொமாண்டிக் காமெடி எனப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை ஒன்றில், அதர்வா முரளியுடன் ஜோடி சேர்ந்து அமர்க்களப்படுத்த இருக்கிறார் அனுபாமா பரமேஸ்வரன். ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற ரொமாண்டிக் காமெடிப் படங்களைக் கொடுத்து வெற்றிக் கொடி நாட்டிய இயக்குநர் ஆர்.கண்ணன் இந்த புதிய ஜோடியுடன் களம் இறங்கியிருக்கிறார் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது.
முதல் கட்ட படப்பிடிப்பை பூர்த்தி செய்திருக்கும் படக்குழு, இந்தக் குறுகிய காலத்திலேயே படத்தின் முக்கிய பகுதிகள் அடங்கிய ஐம்பது சதவீதக் காட்சிகளை படமாக்கியிருக்கிறது.

இது குறித்து பேசும்போது, முதல் கட்ட படப்பிடிப்பை நாங்கள் இருபது நாட்கள்தான் நடத்தினோம் என்றாலும், இதிலேயே கிட்டத்தட்ட பாதி படப்பிடிப்பை முடித்து விட்டோம். சென்னை புறநகர் பகுதியான நீலாங்கரையில் பிரத்யேகமாக ஒரு அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். மேலும் புதுப்பேட்டை பகுதியில் சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்கியிருக்கிறோம். ஏராளமான பொதுமக்கள் மத்தியில் நடைபெறும் இந்த சண்டைக் காட்சியை நான்கு நாட்களில் ஸ்டண்ட மாஸ்டர் செல்வா மிகச் சிறப்பாக படமாக்கிக் கொடுத்தார்.
நாயகன் அதர்வாவை டைரக்டர்ஸ் டிலைட் என்றால் மிகையாகாது. தன் நடிப்புத் திறனை அவர் மேம்படுத்தி வருவதை இந்தப் படப்பிடிப்பின்போது கண்கூடாகப் பார்த்தேன். இந்தப் படத்தின் கதையும் அவரது பாத்திரமும் இதற்கு முன் அவர் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நான் வடிவமைத்த பாத்திரம் அவரது சிறப்பான நடிப்பால் படத்தில் முழுமையடைந்திருப்பதை நான் ரஷ் பிரதிகளைப் பார்க்கும்போது உணர்ந்தேன்.
அனுபாமா பரமேஸ்வரன் பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிக்கக்கூடிய வலுவான பாத்திரத்தில் தோன்றுகிறார். கிட்டத்தட்ட 96 படத்தில் த்ரிஷா ஏற்ற வேடத்தைப் போன்றது இது. அனுபாமாவின் அப்பா வேடத்தில் ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார். நகைச்சுவையாகவும், உண்ர்வுபூர்வமாகவும் நடிக்க வேண்டிய இந்த பாத்திரத்தை தன் இயல்பான நடிப்பால் நியாயப்படுத்தியிருக்கிறார்.இதேபோல் காளி வெங்கட், ஜெகன், வித்யுத்லேகா ஆகியோரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து செவ்வனே செய்திருக்கின்றனர். காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் நடத்திய படப்படிப்புதான் சாவாலாக இருந்தது என்றாலும், அதையும் வெற்றிகரமாக முடித்து விட்டோம். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க இருக்கிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி சுமார் இருபது நாட்கள் இந்த படப்பிடிப்பு இருக்கும்.
96 படம் மூலம் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் கேமராவைக் கையாள, கபிலன் வைரமுத்து வசனங்களை தீட்டுகிறார். ராஜ் குமார் கலை இயக்குநர் பொறுப்பு ஏற்க, ஆர்.கே.செல்வா படத்தொகுப்பை கவனிக்கிறார். உடை வடிவமைப்பாளராக ஜே.கவிதாவும் நடன இயக்குநராக சதீஷும் பொறுப்பேற்றிருக்கின்றனர். ராஜ் ஸ்ரீதர் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்று உள்ளார்.

திரைக்கதை எழுதி இயக்கும் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில், எம்.கே.ஆர்.பி.புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகெங்கும் இப்படம் திரையிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

‘இது என் காதல் புத்தகம்’ பட கதை: குழந்தை பெத்துக்க எதுக்குடா படிப்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் “இது என் காதல் புத்தகம்“

அறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ இப்படத்தின் கதாநாயகியான “தேவயாணி“ கதாபாத்திரத்தை ஏற்க, ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – அருண்கிருஷ்ணா
இசை – ஸ்ரீமாதவ்
பாடல்கள் – விஷ்ணுவிகடன்
எடிட்டிங் – சாஜித் முகமது
கலை – லால் திரிகுளம்
ஸ்டன்ட் – மது பீட்டர்
நடனம் – தண்டபாணி
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – ஆண்டனி நிலம்பூர்.
தயாரிப்பு – ரோஸ்லேண்ட் சினிமாஸ்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மது G கமலம்.

இவர் மலையாளத்தில் நான்கு படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் உட்பிரதேசமான நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற கதைக்களம் இது. பெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்துகிற படம் இது.

கல்வியறிவை முழுமையாக எதிர்க்கிற ஊர் தலைவர் விவசாயம் செய்வதற்கும், திருமணம் முடித்து பிள்ளை பெறுவதற்கும் உங்களுக்கு எதற்கடா கல்வி என்று சொல்லுகிறார். ஆனால் அவரது ஒரே மகளான தேவயாணி (நாயகி)க்கு படிப்பின் மீது நாட்டம் ஏற்படுகிறது.

அதனால் தந்தையின் சிந்தனைக்கு எதிராக செயல்பட தொடங்குகிறாள் அதனால் அவள் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறாள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

இசைக்கு முக்கியத்துவம் நிறைந்த இந்த படத்தில் டாக்டர் வைக்கம் விஜயலெட்சுமி பாடிய பாடல் உட்பட நான்கு பாடல்கள் உள்ளன. விரைவில் வெள்ளித்திரையில் “இது என் காதல் புத்தகத்தை “ படிக்கலாம் என்கிறார் இயக்குனர் மது G கமலம்.

Idhu en Kaadhal Pudhagam movie news updates

More Articles
Follows