கே.வி.ஆனந்த் படத்திற்காக லண்டன் பறக்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் இப்படப்பிடிப்பு நிறைவடையவுள்ளது.

இதன்பின்னர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து சூர்யா – கே.வி.ஆனந்த் இருவரும் இணைகின்றனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்பட வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இதன்படி வருகிற ஜூன் 25-ம் தேதி லண்டனில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர்.

அங்கு இரண்டு வாரங்கள் சூட்டிங் நடைபெறவுள்ளதாம்.

இளைஞர்களை புகை-மது பழக்கத்திற்கு அடிமையாக்கியவர் ரஜினி – வேல்முருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று சென்னை முதல் தூத்துக்குடி, தூத்துக்குடி முதல் சென்னை வரை சென்றார் ரஜினிகாந்த்.

அப்போது அவர் கொடுத்த 3 பேட்டிகள் இன்றுவரை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு சமூக விரோதிகளே காரணம் என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என ரஜினி எப்படி சொல்லலாம் என பல்வேறு கட்சியினரும் அவருக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட்டது போல விடிய விடிய ரஜினியை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களும் ரஜினி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது…

தான் நடிக்கும் படங்கள் ஓடுவதற்காக இளைஞர்களை புகை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாக்கிய நடிகர் ரஜினிகாந்த்.

அவர்தான் தமிழகத்தின் சமூக விரோதி என குற்றச்சாட்டியுள்ளார்.

பாட்ஷா இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் இணையும் ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை, தயாரிப்பாளர் என சினிமாவில் கலக்கிய ராதிகா தற்போது சின்னத்திரையின் மகா ராணிக்கு அளவுக்கு இல்லத்தரசிகளை கவர்ந்துள்ளார்.

அவர் ராடன் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்த, நடித்த சீரியல்கள் செம ஹிட்டாகியுள்ளன.

ஓர் அசைக்க முடியாத ஒரு இடத்தைப் பல வருடங்களாகப் பிடித்து வைத்திருக்கிறார் ராதிகா.

தற்போது அவர் ‘வாணி ராணி’ சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல், விரைவில் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது

இதனையடுத்து தான் தயாரித்து நடிக்கும் புதிய சீரியலுக்கு ‘சந்திரகுமாரி’ எனத் தலைப்பிட்டுள்ளார்.

ரஜினியின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான ‘பாட்ஷா’ படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாதான் இந்த சீரியலை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Baasha fame director Suresh Krishna going to direct Radhika

ஒரே நேரத்தில் ரஜினி-கமல் படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஜீன் 7ல் வெளியாகிறது.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.
இப்படத்திற்கு இளம் இசையைமப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து கமல் நடிக்கவுள்ள ஷங்கரின் இந்தியன் 2 படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் இரு துருவங்களின் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Anirudh going to compose music for Rajini and Kamal movies

தூத்துக்குடி மாசுக்கும் சமூக விரோதிகளே காரணம்.?; ரஜினியை தாக்கும் சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே 22ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில் 13 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல ரஜினிகாந்த் நேரில் சென்றபோது, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு சமுமூக விரோதிகளின் ஊடுறுவலே காரணம் என கூறியிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன.

இந்நிலையில் இத்தனை வருடங்களாக தூத்துக்குடி மாசடைந்ததற்கும் சமூக விரோதிகளே காரணம் என சொல்வார்கள் என ட்விட்டரில் நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட் ரஜினியை மறைமுகமாக தாக்குவதாக அமைந்துள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Siddharths recent tweet connect with Rajinis Tuticorin Police attack statement

Siddharth Verified account @Actor_Siddharth
Next they will tell us anti social elements polluted #Thoothukudi all these years.

ரஜினி மட்டுமா பேசினாரு; கமல்-சிம்பு நானும்தான் பேசினேன்…: விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாகவும், கன்னடர்களுக்கு எதிராகவும் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால், அவர் நடித்துள்ள ‘காலா’ படத்தைத் கர்நாடகாவில் திரையிடவிட மாட்டோம் என கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.

அத்துடன், கர்நாடக வர்த்தக சபையும் ‘காலா’ படத்தைத் திரையிட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான விஷால் கூறியதாவது…

“ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது, தடைசெய்ய வேண்டும் என சில அமைப்புகள் கூறுகின்றன.

கர்நாடக வர்த்தக சபையைச் சேர்ந்தவர்களிடம் பேசியிருக்கிறோம். நேற்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இன்று முடிவு எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்கள். சினிமா வேறு, அரசியல் வேறு. ‘காலா’ படம் ஒருவரால் தயாரிக்கப்பட்டு, அதில் ரஜினி நடித்திருக்கிறார்.

இது திரைப்படம். அவர் அரசியலுக்கு வருவது வேறு. இன்று கர்நாடக வர்த்த சபை என்ன முடிவு எடுக்கப் போகிறது எனத் தெரியவில்லை.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை, இதுதொடர்பாக நிச்சயம் சந்திப்போம். ‘காலா’ படம் எல்லா இடங்களிலும் நல்லபடியாக வெளியாக வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்.

காவிரிப் பிரச்சினை பற்றி ரஜினி சார், கமல் சார், சிம்பு மற்றும் நான் கூடப் பேசியிருக்கிறேன். அது தனிப்பட்ட கருத்து. அது ஒரு படத்தைப் பாதிக்கக்கூடாது.

சினிமாவையும் அரசியலையும் ஒன்று சேர்க்கக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருத்து இருக்கும்.

ரஜினி அரசியலுக்கு வருவதில் தவறு கிடையாது. புதுமுகங்கள் அரசியலுக்கு வரவேண்டும். அந்த அடிப்படையில்தான் ரஜினி சார் வருகிறார்.

படம் வெளிவரும்போது, அதையும் அரசியலையும் ஒன்று சேர்ப்பது தவறு. நாம் அனைவரும் இந்தியர்களே… மாநிலங்கள் ஒரு எல்லைக்கோடு, அவ்வளவுதான்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அதில், 13 பேர் இறந்துள்ளனர். கணக்கில் வராதவர்கள் எத்தனை பேர் இறந்துள்ளனர் என எனக்குத் தெரியும். நானும் ஓட்டு போட்டவன்தான். யார் சுடச் சொன்னது? என்று கேட்டதற்கு, துணை வட்டாட்சியர் என்று சொல்கிறார்கள்.

எஸ்.பி, கலெக்டரையும் இடமாற்றம் செய்துவிட்டார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கணக்கில் வந்த 13 பேர் இறந்ததற்கு அந்த ஆலை மூடப்பட்டுவிட்டது. இறந்தவர்கள் பெயர் வரலாற்றில் எழுதப்பட வேண்டும்.

144 தடை போட்டால் முட்டிக்கு கீழேதான் சுட வேண்டும். அது எல்லாருக்குமே தெரிந்தது. ஜல்லிக்கட்டு பிரச்சினையாக இருக்கட்டும், நெடுவாசல், ஸ்டெர்லைட் பிரச்சினையா இருக்கட்டும்.

அவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பதே உணர்வுபூர்வமான விஷயமாக இருக்கும். இரவு நேரத்தில் 4 பேர் கூடினாலே போலீஸ் வந்து கேட்பார்கள்.

இங்கு லட்சக்கணக்கானோர் கூடியும் தெரியவில்லை என்று கூறுவது முட்டாள்தனம். பிரதமர் வெளிநாடு போகாமல், உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தாலே சந்தோஷம்தான்.

தமிழ் சினிமாவுக்காகவும் நாங்கள் போராடிக்கொண்டு தான் இருக்கிறோம். பிரதமரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கவனியுங்கள். நல்லது செய்தால், நான் அவருக்குத்தானே ஓட்டு போடுவேன், நல்லது செய்யாமல் எப்படி ஓட்டு போட முடியும்.

13 பேர் குடும்பத்திற்கும், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு தொகையை நாங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம்.

13 போராளிகளின் குடும்பத்திற்கும் பெரிய இழப்புதான். அவர்களை மறக்கக்கூடாது. வாக்களித்தவனாக பாரதப் பிரதமரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன், நம் நாட்டுப் பிரச்சினையைக் கவனியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Vishal statement on Rajinikanths Kaala release in Karnataka state

More Articles
Follows