தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மாணவர்களின் தற்கொலையால் நடிகர் சூர்யா சூடான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில்…
கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்.. அனல் பறக்க விவாதிப்பார்கள்.
மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்விமுறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்கவேண்டும்.
நமது பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது.
மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கக் கூடாது. சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்.
என்று வேதனையுடன் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் கர்நாடக சிங்கம் என வர்ணிக்கப்பட்ட முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலை சூர்யா பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது…
நீட் ரிசல்ட்டுக்கு பின் சூர்யா நீட் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்.
நடிகர் சூர்யாவின் கேள்விகளுக்கு நீட் தேர்வு ரிசல்ட் பதில் தரும் என பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இவர் அண்மையில்தான் பாஜக. கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Suriya will change his stance on NEET after results says BJP leader annamalai