சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா-கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம்.
இதில் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
தற்போது சூர்யா தன் குடும்பத்துடன் ஐரோப்பா நாடுகளில் கோடை விடுமுறையை கழித்து வருகிறார்.
சில நாட்கள் பின்னர் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும், அதுவே இறுதிக்கட்டப் படப்பிடிப்பு எனவும் கூறப்படுகிறது.

ஏஆர். ரஹ்மான் டைரக்டர் ஆவதற்கு ‘அவர்’தான் காரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று திரையுலகில் 25 ஆண்டுகளை கடந்து விட்டார் ஏ.ஆர். ரஹ்மான்.

ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஒரே படத்தின் மூலம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தவர்.

இந்நிலையில் முதன்முறையாக லே மஸ்க் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

இயக்குநர் ஆவதற்கு அவரது மனைவி சாயிரா பானுதான் காரணம் என்றும் படங்களை இயக்குவது மிகவும் கடினமான ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு கதை எனக்கு முழுமையாக பிடித்திருந்தால் மட்டுமே அந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொள்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

ARRahman directorial debut LeMusk movie updates

ஒரு வார கலெக்சன் ரிப்போர்டில் எந்த நடிகர் பர்ஸ்ட்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமா வரலாறையே திரும்பி பார்க்க வைத்து வசூலில் பட்டைய கிளப்பி வரும் படம் பாகுபலி2.

படம் வெளியாகி ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடியை வசூலித்து, இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் முதல் ஒரு வாரத்தில் எந்த படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை முன்னணி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்…

1. பாகுபலி2- ரூ 63 கோடி
2. கபாலி- ரூ 53 கோடி
3. பைரவா- ரூ 50.1 கோடி
4. வேதாளம்- ரூ 50 கோடி
5. தெறி- ரூ 48 கோடி
6. எந்திரன்- ரூ 47 கோடி
7. ஐ- ரூ 46 கோடி
8. கத்தி- ரூ 45 கோடி
9. புலி- ரூ 41 கோடி
10. துப்பாக்கி- ரூ 40 கோடி

Top 10 movies Opening Week Box office collection

30 புதுமுகங்களை ஒரே படத்தில் அறிமுகம் செய்யும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவை தன் நடிப்பால் கலக்கிய தனுஷ், தற்போது மலையாள சினிமாவிலும் கலக்கவிருக்கிறார்.

ஆனால் அங்கே ஒரு தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார் என்பதை பார்த்தோம்.

டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்க, சாந்தி பாலசந்திரன் நாயகியாக நடித்து வருகின்றனர்.

முக்கிய வேடத்தில் நேஹா ஐயர் நடிக்கிறார்.

இப்படத்தை டாமினிக் அருண் இயக்க, தன் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் 30 புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்யவிருக்கிறார்களாம்.

இப்படத்தில் தனுஷ் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush introducing 30 fresh faces in single movie

கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் வரிசையில் வாரிசு அரசியலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின்.

ஆனால் திரைப்படங்களை தயாரித்து, இன்று பிஸியான நடிகராகவும் மாறிவிட்டார்.

எழில் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள சரவணன் இருக்க பயமேன் படம் வருகிற மே 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த சமீபத்திய பேட்டியில் அவர் பேசும்போது…

தன் தாத்தா கலைஞரின் வசனத்தை பேசி, ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தாத்தா கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு ஆவணப்படமாக எடுக்கவிருக்கிறாராம்.

அதற்கான முயற்சியில் தற்போது இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin going to make Kalaignar Karunanidhi life history documentary film

‘கடின உழைப்பின் வெற்றிக்கு என் குடும்பமே உதாரணம்..’ எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் புரட்சி இயக்குனர் என்ற பெயரெடுத்தவர் எஸ்ஏ. சந்திரசேகர்.

அண்மையில் இவர், பிரபலமான ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது….

எத்தனை சோதனைகள் வந்தாலும் விடாது உழைத்தால் நிச்சயம் முன்னேற முடியும்.

அப்படி கடினமாக நாங்கள் உழைத்தோம். அந்த உழைப்பின் வெற்றியால்தான் என் குடும்பமே முன்னேறியுள்ளது. அதற்கு நாங்கள்தான் உதாரணம்.” என்றார்.

Hardwork will leads to Victory says Vijays father SA Chandrasekkar

More Articles
Follows