தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அசுரனை அடுத்து ஜிவி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையைமத்துள்ளார்.
இதில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.
அண்மையில் ஊர்க்குருவி பருந்தாகுது என்ற முதல் பாடல் வெளியானது.
‘மாஸ்டர்’ விஜய்யுடன் மோதும் ‘சூரரைப் போற்று’ சூர்யா
இரண்டாவது பாடலான வெய்யோன் சில்லி ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 விமானத்தில் இன்று சென்னை விமான நிலையத்தில் வெளியானது.
இப்பாடல் வெளியீட்டு விழாவில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்களை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்துள்ளனர்.
இதையடுத்து 45 நிமிடங்கள் வானில் பறந்த விமானத்தில் வெய்யோன் சில்லி பாடல் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங், நடிகர் சிவக்குமார், இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சக்தி பிலிம் பேக்டர் சக்திவேல், 2டி ராஜசேகரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டார்.
5 & 8ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து; தமிழக அரசுக்கு சூர்யா நன்றி
இந்த நிகழ்வில் சூர்யா பேசியதாவது…
இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 1% குறைவான மக்களே விமானத்தில் பறக்கும் வசதியை பெற்று இருந்தனர்.
இதனை கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் மாற்றியமைத்து கிட்டதட்ட ஒரு ரூபாய் செலவில் விமானத்தில் பறக்க வைத்தார். அவரின் கதையை தான் படமாக்கியிருக்கிறோம்.
இந்த படத்தில் நடித்துள்ள மோகன் பாபுக்கு நான் நிச்சயம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். அவரின் ஒத்துழைப்பு மறக்க முடியாது.
அதுபோல் எங்களுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்த ஸ்பைஸ் ஜெட் அஜய் சிங் அவர்களுக்கும் நன்றி.
இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். கிட்டதட்ட 10 வருட உழைப்பை இதற்காக அவர் செலவிட்டுள்ளார்.
அவரை தவிர யாராலும் இதுபோன்ற படத்தை எடுத்துவிட முடியாது.
ரஜினி-விஜய்யை அடுத்து சூர்யாவுடன் இணையும் மாளவிகா
என் 20 வருட சினிமா கேரியரில் இதுதான் பெஸ்ட் டைம் என்பேன்.
இந்த விமானத்தில் 70 குழந்தைகளை பறக்க (பயணிக்க) வைத்துள்ளோம். அவர்களுக்கு இதுதான் முதல் விமான பயணம். இதற்காக ஒரு சின்ன தேர்வு போல வைத்து அவர்களை தேர்வு செய்தோம்.
அவர்கள் எல்லாருக்கும் தங்களை விட தங்கள் குடும்பத்தில் உள்ள யாரையாவது ஒருவரை பயணிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
இந்த வெயிலும் இந்த செய்தியை பதிய வந்துள்ள பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி” என பேசினார் சூர்யா.
இந்நிகழ்வில் குறிப்பிட்ட முன்னணி பத்திரிகையாளர்கள் மற்றும் ட்விட்டர் குழுவினர் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.
Suriya emotional speech at Soorarai Pottru Veyyon Silli song launch