ஒரே நாளில் ஒரு கோடி… இது சன்னி லியோன் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன்னுடைய ஹாட் படங்களால் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் சன்னி லியோன்.

இவர் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உடன் ராயிஸ் Raees படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இப்பாடல் இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்பாடல் இணையத்தில் வெளியான முதல் நாளிலேயே 1 கோடிக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.

இதன் மூலம் ஒரே நாளில் உலகிலேயே அதிகம் பேர் பார்த்த வீடியோவாக அப்பாடல் சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘சொன்னப்படி செய்வோம்…’ விக்ரமின் சாமி-2 பற்றிய தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இருமுகன் ஆடியோ விழாவின் போதே சாமி 2 பற்றி அதிகாரப்பூர்வாமாக அறிவித்தனர் விக்ரம்-ஹரி கூட்டணியினர்.

இதனிடையில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தை விஜய்சந்தர் இயக்க தமன் இசையைமைக்க உள்ளார் என்ற தகவல்கள் வந்தன.

இதனையடுத்து, கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பார் விக்ரம்.

இதனால் சாமி 2 படம் தள்ளிப்போகும் என அடுத்தடுத்து செய்திகள் வந்தன.

ஆனால் இதுகுறித்து, சாமி 2 படத்தை தயாரிக்கப்போகும் ஷிபு தமீன் கூறியதாவது…

‘தனது உதவியாளர்களுடன் ‘சாமி 2′ படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் விறுவிறுப்பாக உள்ளார் டைரக்டர் ஹரி.

2017ஆம் ஆண்டு ஏப்ரலில் அதன் சூட்டிங் நிச்சயம் தொடங்கும். சொன்னப்படி செய்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Vikram and Hari Combo Saamy 2 movie updates

ஈராஸ் தயாரிப்பில் பரத் கிருஷ்ணாமாச்சாரி உடன் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டோரா, அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என வரிசை கட்டி நிற்கிறார் நயன்தாரா.

இதில் ஒரு சில படங்களின் சூட்டிங் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இதனையடுத்து, மிஸ்கினின் உதவி இயக்குநர் பரத் கிருஷ்ணாமாச்சாரி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் நயன்தாரா.

இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜர்னலிஸ்ட்டாக நடிக்கிறார் நயன்தாரா.

ஈராஸ் தயாரிக்கவுள்ள இப்படம் அடுத்த மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.

Nayanthara’s next movie with Eros International and will be Directed by Bharath Krishnamachari

நேற்று சமுத்திரக்கனி; இன்று கமல்ஹாசன்… கவனிப்பது யாரோ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலம் என்றாலே அவர்களுக்கு பிராப்ளம்தான் போல.

சில விஷமிகள் பிரபலங்களின் பெயரில், போலியான அக்கவுண்ட்களை உருவாக்கி ஏதாவது ஒன்றை சொல்லி அவர்களை வம்பில் மாட்டி விடுவார்கள்.

சில நாட்களுக்கு முன்பு, சமுத்திரக்கனி தன்னுடைய பெயரில் ஒரு போலி அக்கௌண்ட் உள்ளது என காவல் துறையில் புகார் செய்தார்.

தற்போது கமல்ஹாசன் பெயரில் ஒரு போலி அக்கவுண்ட் மூலம் சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதை கமல் சொல்லிருப்பார் என்று நினைத்து சிலரும் பகிர்ந்து வருகின்றனர்.

கமல் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அமிதாப்பச்சனுடன் இணையும் சூர்யா-நயன்தாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியளவில் அமிதாப் பச்சனுக்கு மார்கெட் உள்ளது. ஆனால் இதுவரை அவர் நேரடி தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

ஆனால் தமிழ் படத்தில் நடிக்க ஆசை என்று பலமுறை தெரிவித்துள்ளார்.

இப்போது அவரை ஏக்கத்தை தீர்க்கும் வகையில் ஒரு கதையை எழுதி, இந்தி மொழியில் அவருக்கு அனுப்பி வைத்துள்ளார் இயக்குனர்

அவர் வேறு யாருமல்ல. கள்வனின் காதலி என்ற படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ்வாணன் தான்.

அவரது புதிய படத்திலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறார்களாம்.

அமிதாப்பச்சன் ஒப்புக் கொண்ட பிறகு இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

சிவாஜி கணேசன் நடிப்பில் உயர்ந்த மனிதன் என்ற படம் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

2016 ஆண்டு… முதல் படத்திலேயே கவர்ந்த சூப்பர் ஹீரோயின்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிப்பது ஒரு வகை.

ஆனால் தங்கள் முதல் படத்திலேயே முத்திரை பதிப்பது இரண்டாவது வகை.

பராசக்தியில் சிவாஜி, பருத்தி வீரனில் கார்த்தி என்று ஒரு சில நடிகர்கள் மட்டுமே தங்கள் முத்திரையை பதித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தாண்டு 2016ல் நிறைய புதிய முகங்கள் தமிழ் சினிமாவிற்று அறிமுகமாகி உள்ளனர். (சிலர் மற்ற மொழிகளில் நடித்தும் உள்ளனர்)

தமிழ் சினிமா தந்த அந்த திறமையான சூப்பர் ஹீரோயின்ஸ்களை இங்கே பார்ப்போம்…

ரித்திகா சிங் – இறுதிச்சுற்று

அடிப்படையில் பாக்ஸர் ஆன இவர் தன் முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார்.

மாதவன் தயாரித்த இப்படத்தை சுதா கொங்கரா என்ற பெண் இயக்குனர் உருவாக்கியிருந்தார்.

ரித்திகாவின் அடுத்த படமான ஆண்டவன் கட்டளையும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

நிகிலா விமல் – வெற்றிவேல்

வெற்றி வேல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கிடாரி படத்திலும் சசிகுமாருடன் நடித்தார்.

இரண்டிலும் அமைதியான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்தார்.

பூஜா தேவரியா – இறைவி

இறைவி படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை கைப்பற்றியிருந்தார். ஒரு சில காட்சிகளே வந்தாலும், யார்? இந்த பெண்? என்று கேட்கவைத்தார்.

இதனையடுத்து குற்றமே தண்டனையிலும் தனக்கான இடத்தை பிடித்தார்.

நிவேதா பெத்துராஜ் – ஒரு நாள் கூத்து

இவர் தமிழ்ப் பெண் என்றாலும் அயல்நாட்டில் செட்டிலாகிவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவுகளை பதிவிடுவார்.
ஒருநாள் ஒரு கூத்து படத்தில் இடம்பெற்ற அடியே அழகே பாடலிலும் படத்திலும் தனி கவனம் ஈர்த்தார்.

மஞ்சிமா மோகன் – அச்சம் என்பது மடமையடா

கெளதம் மேனன் படத்தில் மெயின் கேரக்டரா? அல்வா மாதிரி ஆச்சே. என்றுதான் ஹீரோ ஆனாலும் சரி ஹீரோயினாலும் சரி நினைப்பார்கள்.

அதுபோன்ற வாய்ப்பு மஞ்சிமா மோகனுக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பில் பாராட்டை பெற்றார்.

மடோனா செபாஸ்டியன் – காதலும் கடந்து போகும்

மலையாள பிரேமம் படத்தில் அறிமுகமானாலும், தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.

காதலும் கடந்து போகும் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்சேதுபதியுடன் கவண் படத்தில் நடித்து வருகிறார்.

அனுபமா பரமேஸ்வரன் – கொடி

இவரும் மலையாள பிரேமம் படத்தில் அறிமுகமானார்.

தனுஷின் கொடி படம் இவருக்கு முதல் தமிழ் படம். இவர் இதில் சொந்த குரலில் டப்பிங் பேசியது குறிப்பிடத்தக்கது.

ரம்யா பாண்டியன் – ஜோக்கர்

தன் முதல் படமே அருமையான சமூக நோக்கமுள்ள படத்தில் நடித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கூட இவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.
அந்த அளவு கிராமத்து பெண்ணாக மேக்கப் போட்டு இருந்தார்.

சாட்னா டைடஸ் – பிச்சைக்காரன்

விஜய் ஆண்டனியுடன் ஜோடி சேர்ந்திருந்தார். நெகட்டிவ் டைட்டில் என்று கூறப்பட்டாலும் சென்டிமெண்டுகளை உடைத்து வசூலில் பணக்காரன் என நிரூபித்தது.

திடீரென தன் காதலரை திருமணம் செய்துக் கொண்டார்.

அறிமுக நாயகிகள் அனைவரும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறோம்.

More Articles
Follows