தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சுந்தர்.சி இயக்கவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கலை பணியை சாபுசிரில் கவனிக்கிறார்.
எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் இயக்குநர் பத்ரி ஆகியோர் சுந்தர் சியுடன் இணைந்து கதையை மெறுகேற்றி வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராக உள்ளதால் நீண்ட நாட்கள் கால்ஷீட் தேவைப்பட்டதால், முன்னணி ஹீரோக்கள் மறுத்து வந்தனர்.
இந்நிலையில் இக்கதையில் ஜெயம் ரவி நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரியவந்துள்ளது.
ஒப்பந்தம் கையெழுத்து ஆனவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
இப்படத்தை 2018ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வரத்திட்டமிட்டுள்ளனர்.
இப்படம் இரண்டு ஹீரோக்கள் கதையாக இருக்கும்பட்சத்தில் மகேஷ் பாபு நடிப்பார் எனவும் சொல்லப்பட்டு வருகிறது.