தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்திய அரசுக்கு உதவும் விதமாக இங்குள்ள பல்வேறு சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் நிவாரண நிதியுதவி அளித்து வருகின்றனர்.
நடிகர்களில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் அதிகபட்சமாக 25 கோடி ரூபாயை தருவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சன் டிவி குழுமம் 10 கோடி ரூபாயை கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் சன் டி.வி குழுத்தின் 6 ஆயிரம் பணியாளிரின் ஒருநாள் ஊதியமும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியாக தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிபுரிந்து வரும் தன்னார்வ அமைப்புகளுடன் சன் குழுமம் பணியாற்றும் என்றும் திரைத்துறை, தொலைக்காட்சியில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளருக்கும் சன் டிவி குழுமம் நிதியுதவி அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை தயாரித்து வருகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தினை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் 50 லட்சம் ரூபாயை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
மேலும் 15 லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது ஏஜிஎஸ்.
SUN network and AGS donation for Corona relief fund