சிம்பு பர்த் டே & ‘மாநாடு’ அப்டேட்..; சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு ‘மாஸ்’ ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஈஸ்வரன்’ படத்தை முடித்து விட்டு ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இதில் சிம்பு உடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன் பணி புரிய, இசையமைப்பாளராக யுவன் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 3ஆம் தேதி மதியம் 2.34 மணிக்கு ‘மாநாடு’ பட டீசரை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தன் பிறந்த நாளுக்கு தான் ஊரில் இருக்க மாட்டேன். ரசிகர்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என சிம்பு அறிக்கை வெளியிட்டார்.

இதனால் சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த டீசர் அறிவிப்பு உற்சாகத்தை அளிக்கும் என நம்பலாம்.

Str’s Maanaadu teaser date and time is here

எல்ஐசி பங்குகள் விற்பனை.. தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள்.. விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி கடன்..; பட்ஜெட் 2021-22 ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2021-22 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து, ரூ.2.10 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இதோ..:

ஐடிபிஐ வங்கி, பிபிசிஎல், ஷிப்பிங் கார்ப்பரேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன், நீலாச்சல் இஸ்பத் நிகம் உள்ளிட்ட நிறுவனங்கள் 2021-22-ஆம் நிதியாண்டு தொடக்கத்தில் விற்பனை செய்யப்பட்டு விடும்.

எல்ஐசி காப்பீடு நிறுவன பங்குகளை விற்பனை செய்ய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்.

நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 2020-25-ஆம் ஆண்டுவரை ரூ.111 லட்சம் கோடி தேவைப்படுகிறது.

இந்த நிதியை உருவாக்குவதற்காக ரூ.20,000 கோடியில் மேம்பாட்டு நிதிக் கழகம் (டிஎப்ஐ) உருவாக்கப்படும்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிப்பு.

பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரி 10% இருந்து 15 % வீதமாக அதிகரிப்பு.

75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு.

நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம்.

கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி.

வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இ-நாம் திட்டத்தின் கீழ் இணையவழியாக மேலும் 1,000 மண்டிகள் இணைப்பு.

வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு. இது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தவும் குறைந்த விலை உடைய வீட்டு வசதி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கும் என தகவல்.

புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு வருவாய் மீதான வரிக்கு வரிவிலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் மீது வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிப்பு.

அதன்படி பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 கூடுதல் வரி விதிப்பு என அறிவிக்கப்பட்டது.

இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என கூறப்பட்டது. ஆனால் இந்த புதிய வரியால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.

இத்துடன் சில பொருட்கள் மீதும் வேளாண் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆல்கஹால் 100%, தங்கம் மற்று வெள்ளி 2.5% , பாமாயில் 17.5% , சூரியகாந்தி எண்ணெய் 35%, ஆப்பிள் மற்றும் பட்டாணி 40% என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை – கொல்லம் இடையே பொருளாதார வழித்தடம் அமைக்கப்படும் என்றும் தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம்.

Most important things you need to know about budget 2021-2022

‘தளபதி’ விஜய்யுடன் 2 காமெடியன்களை இணைக்க நெல்சன் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி-65’ல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய்.

அனிருத் இசையமைக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும், அருண் விஜய் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மாஸ்டர் பட குட்டி ஸ்டார் பூவையார் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறாராம்.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு & விடிவி கணேஷ் ஆகிய இருவரும் தளபதி 65-ல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெர்சல், சர்கார், பிகில் திரைப்படத்தை அடுத்து நான்காவது முறையாக விஜய் – யோகி பாபு கூட்டணி இணையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Top comedian to reunite with Thalapathy Vijay

‘கடமையை செய்’-ய ஜோடியாக இணையும் SJ சூர்யா & யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘கடமையை செய்’.

பல வெற்றிப்படங்களை இயக்கியதோடு தற்போது பிரபல நடிகராகவும் உள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் சுந்தர்.C தயாரித்து, நாயகனாக நடித்த “முத்தின கத்திரிக்கா” என்ற வெற்றிப்படத்தை இயக்கிய வேங்கட் ராகவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தை இயகுகிறார்.

ஒளிப்பதிவு – வினோத் ரத்னசாமி

இசை – அருண்ராஜ்

கலை – M.G.முருகன்

எடிட்டிங் – N.B.ஸ்ரீகாந்த்

ஸ்டண்ட் – பிரதீப் தினேஷ்

நடனம் – தீனா, சாய் பாரதி

தயாரிப்பு மேற்பார்வை – R.P.வெங்கட்

மக்கள் தொடர்பு – மதுரை செல்வம், மணவை புவன்.

தயாரிப்பு – T.R.ரமேஷ், ஜாகிர் உசைன்

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்கள் குத்துவிளக்கேற்றி துவைக்கி வைத்தார். படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

SJ Suryah and Yashika Aanand joins for a new film

பவர் ஸ்டாருக்கு ஜோடியாகும் சிம்பு – ஜெயம் ரவி பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘முன்னா மைக்கேல்’ என்ற ஹிந்தி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால்.

பின்னர் சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு படங்களில் நடித்தாலும்
பிரபலமாகவில்லை.

இதனை அடுத்து பூரி ஜெகநாத் இயக்கிய ‘ஐஸ்மார்ட் சங்கர்’ என்ற படத்தில் நடித்தார்.

இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் நிதிக்கு வாய்ப்புகள் வந்தன.

பொங்கலுக்கு ரிலீசான சிம்புவின் ’ஈஸ்வரன்’ & ஜெயம் ரவியின் ‘பூமி’ ஆகிய 2 படங்களிலும் ஹீரோயினாக நிதி அகர்வால் நடித்திருந்தார்.

இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாணின் 27-வது படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் நிதி அகர்வால்.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகும் இப்படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிறது.

கிரிஷ் இயக்கும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகவுள்ளது.

Actress Nidhhi Agerwal to play female lead in Power Star’s next film

‘ராஜலிங்கா’ படம் பார்த்துட்டு வாட்ஸ் அப் திறந்தால் எச்சரிக்கை வரும்.. – ஷிவபாரதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் ஷிவபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ராஜலிங்கா’. இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்துள்ளார்.

இவரோடு டி.குமரேசன், மாறன் பாண்டியன் ஆகியோரும், நாயகியாக ஜாய் ப்ரியா என்பவரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை இயக்கியிருக்கும்
ஷிவபாரதி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர். இயக்குநர் ராதாபாரதி உள்ளிட்ட பலரிடம் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டவர்.

இவர் எழுதிய திரைக்கதையும் அதையொட்டி இவர் செய்திருந்த வடிவமைப்பையும் பார்த்த
திருச்சி விநியோகஸ்தர்
மாரிமுத்து படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் ஷிவபாரதி கூறியதாவது….

இப்படம் தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறேன். பார்த்தவுடன் காதல் பழகியவுடன் அத்துமீறல் என்று போகும் ஜோடிகளுக்கு இப்படம் ஒரு பாடமாக இருக்கும்.

அன்றாடம் தவிர்க்க முடியாத அத்தியாவசியமாகிவிட்ட வாட்சப்பை நாம் மிக அலட்சியமாகக் கையாள்கிறோம். இப்படம் பார்த்துவிட்டு போனை எடுத்து வாட்சப்பை திறந்தால் ஒரு எச்சரிக்கை உணர்வு வரும்.

இப்படத்தில் நான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன். மாறன் பாண்டியன் காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் நடித்திருக்கிறார். அந்த வேடம் மிகவும் பேசப்படும்.

இந்தப்படத்தின் நாயகி வேடத்துக்கு இருபதுக்கும் மேற்பட்டோரைப் பார்த்தோம். கதையைக் கேட்டுவிட்டு பயந்து போய் நடிக்கமுடியாது என்று போய்விட்டார்கள்.

இப்போது நாயகியாக நடித்திருக்கும் ஜாய் ப்ரியா, கதையைக் கேட்டதும் இதுபோன்ற பவர்ஃபுல்லான வேடத்தில் நடிக்கவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன் என்று சொல்லி நடிக்க வந்தார். மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

பல கோடி ரூபாய் செலவில் தயராகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கின்றன.

திருச்சி ஏரியாவில்கடந்த 30 ஆண்டுகளை கடந்து விநியோகத்துறையில் இருக்கும்
#திருச்சிமாரிமுத்துராஜலிங்காபடத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Shiva Bharathi talks about his upcoming film Raja Linga

More Articles
Follows