ஸ்ரீதேவி மரணத்தையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமை… கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு துபாயில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர் ஈபிஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

“மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது.

இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான்.

இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Sridevis stardom was well deserved says KamalHaasan

அன்பான தோழி ஸ்ரீதேவியை இழந்துவிட்டேன்… ரஜினி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவை தன் நடிப்பால் கட்டிப்போட்ட பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்தார்.

குழந்தை நட்சத்திரமாக துணைவன் என்ற படத்தில் நடித்தார்.

அதன்பின்னர் பல படங்களை தொடர்ந்து இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

’16 வயதினிலே’ மயிலாக பாரதிராஜாவால் உச்சம் பெற்றுத் தமிழ் ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்தவர்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது..

“நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். எனது அன்பான தோழியை இழந்துவிட்டேன். திரைத்துறை ஒரு உண்மையான நடிகையை இழந்துவிட்டது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினரின் வலியை நான் உணர்கிறேன். உங்களை இழந்துவிட்டோம் ஸ்ரீதேவி” என்று வேதனையோடு ட்வீட் செய்துள்ளார்.

மேலும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Sridevi passes away Rajinikanth condolences

I’m shocked and very disturbed. I’ve lost a dear friend and the industry has lost a true legend. My heart goes out to her family and friends. I feel the pain with them #RIPSridev … you will be missed.
— Rajinikanth (@superstarrajini) 25 February 2018

நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் அறிமுகமாகி இந்தியில் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார்.

நேற்று இரவு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்றார்.

இரவு 11.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிவகாசியை சொந்த ஊராக கொண்டவர் ஸ்ரீதேவி (54). இவர் 4 வயதிலேயே திரைப்படத்துறையில் நுழைந்தவர்.

தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழில் 16 வயதினிலே, மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், தமிழ் திரைப்பட உலகில் கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.

அண்மையில் அஜித்துடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்திலும் விஜய்யுடன் புலி என்ற படத்திலும் இணைந்து நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடித்த மாம் திரைப்படம் வெளியானது.

இவர் 2013-ம் ஆண்டில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

மேலும், இவர் பிலிம்பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்துக்காக தமிழக அரசின் விருது என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்..

இவருக்கு போனி கபூர் என்ற கணவரும், ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர்.

Lady SuperStar Actress Sridevi passed away

அஜித் பிறந்தநாளில் ஆர்.கே.சுரேஷ் வைக்கும் அதிரடி விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித்துக்கு சினிமாவுலகிலும் பல நடிகர்கள் ரசிகர்களாக உள்ளனர்.

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அவர்கள் ஒரு படத்தில் அஜித் ரசிகராக நடித்து வருகிறார்.

பில்லா பாண்டி என்று இப்படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.

இந்லையில் எங்க குல தங்கம், எங்க தல சிங்கம் என்று தொடங்கும் ஒரு பாடலை மட்டும் அஜித் பிறந்தநாளில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கல்யாண் மாஸ்டர் நடனம் அமைக்கும் இந்த பாடலுக்காக சுமார் 300 அஜித் பேனர்கள், கட் அவுட்டுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த பாடலின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது

ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சரவணஷக்தி இயக்கி வருகிறார்.

இளையவன் இசையில் ஜீவன் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

கீர்த்தி சுரேஷ்-சமந்தா உடன் கைகோர்க்கும் அனுஷ்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்திற்கு தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்றும் தெலுங்கில் ‘மகாநதி’ என்றும் தலைப்பிட்டுள்ளனர்.

இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க சாவித்திரியின் வாழ்க்கையை எடுத்துக்கூறும் பத்திரிகை நிருபராக சமந்தா நடித்து வருகிறார்.

இந்நிலையில் மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி கேரக்டரில் நடிகை அனுஷ்காக நடிக்கவுள்ளாராம்.

ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். விஜய் தேவரகொண்டா நாகேஸ்வரராவ் கேரக்டரில் நடிக்கிறார். மோகன்பாபு எஸ்.வி.ரங்காராவ் கேரக்டரில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேற்று கிரக வாசிகளை தடுக்கும் விஞ்ஞானியாக சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்ராம் இயக்கும் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை 24ஏஎம். ஸ்டூடீயோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தை அதே நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

இதற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதில் ரகுல் பிரித்தி சிங் நாயகியாக நடிக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

சயின்ஸ் பிக்சனாக உருவாகவுள்ள இப்படத்தில் வேற்று கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானியாக சிவகார்த்திகேயன் நடிக்கிறாராம்.

More Articles
Follows