தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதன்பின்னர் தொழில் அதிபரும் நடிகருமான விசாகன் என்பவரை சவுந்தர்யாவுக்கு திருமணம் செய்து வைத்தார் ரஜினி.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சவுந்தர்யாவும் விசாகனும் லண்டன் நகரத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
லண்டன் ஹீப்ரு விமான நிலையத்தை அடைந்த போது அவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.
எமிரேட்ஸ் சேவை மையத்தில் பாஸ்போர்ட் அடங்கிய பையை விசாகன் எடுக்க முயன்றபோது, அதில் வைக்கப்பட்டு இருந்த பாஸ்போர்ட் மற்றும் பிரீப் கேஸ் காணாமல் போயிருந்தது.
இவர்களின் பாஸ்போர்ட்டுடன் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலரும் அந்தப் பையில் இருந்ததாம்.
எனவே உடனடியாக எமிரேட்ஸ் விமானத்தின் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
பாஸ்போர்ட் இல்லாமல் அவர்களால் விமான நிலையத்தை விட்டு வெளிய வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர்.
இத்தகவல் இந்திய தூதரகத்துக்கும் ரஜினிக்கும் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் சவுந்தர்யா – விசாகனுக்கு தற்காலிக பாஸ்போர்ட் அளிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சூட்கேஸை திருடிய நபர்கள் யார் என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்களாம்.