பூஜைக்கு முன்பே சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய சன்டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலைக்காரன் படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்திற்கு ‘சீமராஜா’ என்று பெயரிடப்படலாம் எனத் தெரிகிறது.

இதனையடுத்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்தையும் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான நிறுவனம் 24ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் சன் டி.வி இதன் சாட்லைட் உரிமையை கைபற்றியுள்ளது.

சூட்டிங் தொடங்குவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் படத்தை சன் டிவி கைப்பற்றியிருப்பதால் இந்த செய்தி கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஒரு கோடியை நெருங்கும் பிரியா வாரியரின் க்யூட் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வருடம் சினிமாவை தாண்டி மிகவும் வைரலான வீடியோ ‘ஜிமிக்கி கம்மல்…’ என்ற ஆடல் பாடல் வீடியோதான்.

தற்போது மீண்டும் கேரளாவில் இருந்து மற்றொரு வீடியோ வைரலாகியுள்ளது.

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்க மலராய பூவே…’ என்ற பாடலில் பிரியா வாரியர் காட்டிய க்யூட் முக பாவனைகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

அவர் தன் இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் பார்வைதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ யு-டியூபில் வெளியாகிய நான்கு நாட்களில் 90 லட்சத்தை கடந்துள்ளது.

மேலும் இன்ஸ்டாகிராமில் அதிகமாக தேடப்பட்டவர் என்ற பெருமையும் பிரியா வாரியருக்கு கிடைத்துள்ளது.

ஓமர் லுலு இயக்கியுள்ள ‘தி அடார் லவ்’ படத்திற்காக இந்த பாடலை பாடியிருப்பது நடிகரும் இயக்குனருமான வினீத் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் சிம்பு-விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு மணிரத்னம் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து 4 ஹீரோக்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார் மணிரத்னம்.

செக்கச் சிவந்த வானம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிட்டனர்.

இப்படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ், மன்சூரலிகான், ஜெயசுதா, தியாகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பாடல்களை வைரமுத்து எழுத, படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார்.

‘லைகா’ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

இதன் சூட்டிங்கை தொடங்கியுள்ள மணிரத்னம் மொத்த சூட்டிங்கையும் சுமார் 60 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

எனவே படத்தை ஜூலையில் ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளாராம்.

காலாவை தொடர்ந்து மீண்டும் லைகாவுடன் இணைந்த ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்டக்கத்தி மற்றும் மெட்ராஸ் என் இரு வெற்றிப் படங்களை இயக்கிய ரஞ்சித்துக்கு எவருமே எதிர்பாராத வகையில் ரஜினியின் கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனையடுத்து தற்போது ரஜினியின் காலா படத்தை இயக்கியுள்ளார்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார் ரஞ்சித்.

இப்படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வேலன் மற்றும் ராகேஷ் ஆகியோரும் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.

தற்போது சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

மார்ச் மாதம் வெளியாகவுள்ள இப்டத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

காலா படத்தின் வெளியிட்டு உரிமையையும் லைகா நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ranjith production Pariyerum Perumal first look launch

காலா வந்தாதான் நல்ல காலம்; சவரக்கத்தி சக்ஸஸ் மீட்டில் ராம் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிஆர். ஆதித்யா இயக்கத்தில் மிஷ்கின் தயாரித்து பாடல் எழுதி நடித்த படம் சவரக்கத்தி.

அரோல் கரோலி இசையமைத்திருந்த இப்படத்தில் டைரக்டர் ராம், பூர்ணா ஜோடியாக நடித்திருந்தனர்.

இப்படம் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது.

அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்ற இப்படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பட நாயகன் ராம் பேசியதாவது…

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரி விதிப்புக்கு பிறகு தியேட்டர்களில் கூட்டம் குறைந்துள்ளது.

பாகுபலி2 படத்திற்கு பிறகு குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு மக்கள் வருவதில்லை என தியேட்டர்கள் அதிபர்கள் சொல்கின்றனர்.

பெரிய படம் வரவேண்டும் என்கின்றனர். காலா போன்ற படம் வந்தால் மக்கள் குடும்பத்துடன் வருவார்கள் என்கிறார்கள்.

தற்போது சவரக்கத்தி படத்திற்கும் மக்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த படத்திற்கு யு சர்ட்டிபிகேட் கிடைத்திருந்தாலும் சவரக்கத்தி என்ற தலைப்பால் இது வன்முறை நிறைந்த படமாக இருக்குமோ? என்று சிலர் நினைக்கின்றனர்.

இந்த சவரக்கத்தி திருத்தும் கத்தி. அழகு பூர்வமான கத்தி” என்று பேசினார்.

Director cum Actor Ram speech about Kaala arrival at Savarakathi success meet

கமல்-ரஜினியின் குரு கே.பாலசந்தரின் வீடு ஏலம்; கவிதாலயா நிறுவனம் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக திகழும் கமல் மற்றும் ரஜினியின் புகழ் உச்சத்திற்கு மிக முக்கிய காரணமானவர் இயக்குனர் கே. பாலசந்தர்.

இயக்கம் தவிர ரஜினியின் ‘சிவா’, ‘அண்ணாமலை’, கமல்ஹாசனின் ‘உன்னால் முடியும் தம்பி’, விக்ரமின் ‘சாமி’ உள்ளிட்ட பல படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.

‘இயக்குநர் சிகரம்’ எனக் கொண்டாடப்பட்டவர் இவர் சில வருடங்களுக்கு முன் காலமானார்.

அவரது மறைவுக்குப் பிறகு அவரின் மகள் புஷ்பா கந்தசாமி கவிதாலயா நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.

இந்நிலையில், மயிலாப்பூர் வாரன் சாலையில் இருக்கும் கே.பாலசந்தரின் வீடும், அதேபகுதியில் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே இருக்கும் கவிதாலயா அலுவலகமும் ஏலத்துக்கு வருகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் இது தொடர்பான அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

யூகோ வங்கியில் ஒரு கோடியே 36 லட்சம் கடன் பணம் செலுத்த முடியாமல் போனதால் கே.பாலசந்தரின் கவிதாலயா புரொடக்சன்ஸ் மற்றும் அவரது வீடு உள்ளிட்டவை ஏலத்துக்கு வர உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரஜினி கமலை உருவாக்கியவருக்கே இந்த நிலைமையா? என சினிமாவுலகில் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் அந்த செய்தியை நம்ப வேண்டாம் என மறுப்பு தெரிவித்து கவிதாலயா நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Kavithalaya clarifies KBalachanders house office auction

இதோ அந்த அறிக்கை…

More Articles
Follows