சிம்பு-ஓவியா மேரேஜ் போட்டோ; பெயரை கெடுக்கும் விஷமிகளால் டென்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது அதில் பங்கேற்ற ஆரவ்வை காதலிப்பதாக ஓவியா அறிவித்தார்.

ஆனால் அந்த காதல் முறிந்துபோனாலும், ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர்.

இந்நிலையில் இந்த புத்தாண்டு தொடக்கத்தின் போது சிம்பு இசையில் ஓவியா பாடிய மரண மட்டை என்ற ஆல்பம் வெளியானது.

இது ரசிகர்கள் மத்தியில் பாப்புலராகி வரும் நிலையில் திடீரென சிம்புவும் ஓவியாவும் திருமணம் செய்துக் கொண்டதுபோல ஒரு போட்டோ இணையத்தில் வெளியானது.

இது முற்றிலும் கிராபிக்ஸ் செய்த படம் என்பது தெளிவாகிவிட்டது.

ஆனால் வேலை வெட்டி இல்லாமல் இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடும் அந்த கிராபிக்ஸ் விஷமிகளால் இரு தரப்பும் டென்ஷனில் இருக்கிறதாம்.

Simbu Oviya marriage edited photo goes viral

ரஜினி அரசியல் டயலாக்கை பாடலாக்கிய கமல் அண்ணன் சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார் ரஜினி.
அப்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார்.
அந்த பேச்சின் போது… மீடியாக்களைப் பார்த்துதான் தனக்குப் பயம் என்றும், மைக்கை நீட்டி, ‘உங்க கொள்கைகள் என்ன?’னு ஒருத்தர் கேட்டார். என்னது கொள்கைகளா? எனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு…’ சின்ன பசங்க… என்று நகைக்சுவையாக பேசினார்.

ரஜினியின் இந்த வார்த்தையை பலரும் விமர்சித்து பேசியிருந்தனர்.

அப்போது ‘எனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ என்ற இந்த வார்த்தையும் இணையத்தில் டிரெண்டானது.

இந்நிலையில், இந்த டயலாக்கையும் திரையுலகினர் விட்டுவைக்கவில்லை.

இந்த வார்த்தையை வைத்து ஒரு பாடலையும் உருவாக்கிவிட்டனர்.

கமல் அண்ணன் சாருஹாசன் நடித்துள்ள தாதா 87 படத்தில் இந்த வார்த்தையை வைத்து ஒரு புரோமோ பாடலை உருவாக்கியுள்ளார் இப்பட இயக்குனர் விஜய் ஸ்ரீ.

இப்பாடலுக்கு லியாண்டர் லீ இசையமைக்க, ஜனகராஜ் மகன் நவீன் ஜனகராஜ் பாடியுள்ளார்.

பொங்கல் விருந்தாக இப்பாடல் வெளியாகவுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தில் ஜனகராஜ் நடிக்கிறார்.

நீயா? நானா? கோபிநாத்தின் மண்ட பத்தரம்; கைகொடுத்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் தனக்கான ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர்களில் முக்கியமானவர் நீயா நானா கோபிநாத்.

சின்னத்திரை நிகழ்ச்சிகள் தவிர இவர் புத்தகங்களும் எழுதி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார்.

வாங்காதீங்க சொன்னாலும் நாங்க வாங்குவோம்ல என பலரும் இந்த புத்தகத்தை வாங்க விற்பனையில் சாதனை படைத்தது.

அண்மையில் மற்றொரு புத்தகம் எழுதியுள்ளார்.

அந்த புத்தக தலைப்பை ரசிகர்களே தேர்வு செய்யலாம் என தெரிவித்திருந்தார்.

அதன்படி ரசிகர்கள் தேர்வு செய்த புத்தக பெயரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

அந்த புத்தகத்திற்கு மண்ட பத்திரம் என பெயரிட்டுள்ளார்.

இந்த புத்தகம் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

Actor Suriya launched Anchor Gopinaths Manda Patharam book

Suriya Sivakumar
‏Verified account @Suriya_offl

‘Some Books leave us free and some Books make us free’ -RalphEmerson. Glad to launch my good friend @Gobinath_C ‘s next book #MandaPatharam Life’s understandings in simple words, is your strength Gobi Congrats!! #ChennaiBookFair

விக்னேஷ்சிவன்-கீர்த்தி பாசமலர்களாக மாற நயன்தாரா காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நானும் ரௌடிதான் படத்தில் இணைந்த நயன்தாரா, விக்னேஷ்சிவன் இருவரும் இன்றுவரை நிஜத்திலும் இணைந்தே வலம் வருகின்றனர்.

இந்நிலையில் விக்னேஷ்சிவன் தற்போது இயக்கியுள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்தார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்னேஷ்சிவன் பிரதர் பிரதர் என அழுத்தமாக பல முறை அழைத்தார் கீர்த்தி.

அதன்பின்னர் பேசிய விக்னேஷ்சிவனோ… கீர்த்தி, நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் எனக்கு சிஸ்டர்தான். நீங்கள் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறீர்கள் என உறுதியளிக்கும் விதமாக பேசினார்.

இதனால் திரை பின்னணியில் ஏதோ நடந்துள்ளது என அங்கிருந்த அனைவரும் பேசிக் கொண்டனர்.

இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தி சுரேஷிடம் விக்னேஷ் சிவன் கொஞ்சம் ஓவராக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் கடுப்பான நயன்தாரா சம்பந்தபட்ட இருவரையும் கண்டித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுக்கிறது.

இதனால்தான் மேடையில் இருவரும் பாசமலர் அண்ணன் தங்கையாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

பிரபுதேவா, சிம்பு ஆகிய இருவரின் காதல் தோல்விக்கு பிறகு நயன்தாரா தற்போது விக்னேஷ்சிவனுடன் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

விக்ரம்-சூர்யா செய்த மாயத்தால் குடியரசு தினத்தில் குவிந்த படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட வருடங்களுக்கு பிறகு விக்ரம் மற்றும் சூர்யா நடித்த படங்கள் ஒன்றாக திரைக்கு வருகிறது.

விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் மற்றும் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படங்கள் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இத்துடன் பிரபுதேவா, ஹன்சிகா நடித்துள்ள குலேபகாவலி படமும் திரைக்கு வருகிறது.

இவை மட்டுமே தற்போதுவரை பொங்கல் ரேஸில் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

இந்த படங்களுடன் விமல் நடித்துள்ள மன்னர் வகையறா, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள மதுரவீரன் மற்றும் அரவிந்த்சாமி, அமலாபால் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படமும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சூர்யா மற்றும் விக்ரமின் படங்களே நிறைய தியேட்டர்களில் புக் ஆகிவிட்டதால் மேற்கூறிய படங்கள் தள்ளிப்போய் உள்ளன.

இந்த படங்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ல் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே ஜனவரி 26 குடியரசு தினத்தில்… விஷால் நடித்துள்ள இரும்புத்திரை, ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக், உதயநிதி நடித்துள்ள நிமிர் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

இத்துடன் அனுஷ்கா நடித்துள்ள தெலுங்கு டப்பிங் படமான ‘பாகமதி’ யும் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இத்துடன் ஒருவேளை கலகலப்பு-2 படமும் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே இந்த ஜனவரி மாதம் சினிமா ரசிகர்கள் கொண்டாட்டம்தான்.

Vikram and Suriya pushed many movies to release on Republic day

பொங்கல் திருநாளில் விசுவாசம் படத்தின் முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில வருடங்களாக V என்ற ஆங்கில எழுத்தில் தலைப்பை தொடங்கி M எழுத்தில் முடியும் சென்டிமெண்ட்டை அஜித், சிவா கூட்டணி செய்து வருகிறது.

வீரம், வேதாளம், விவேகம் தொடங்கி தற்போது புதிதாக உருவாகவுள்ள விசுவாசம் வரை இந்த சென்டிமெண்ட் தொடர்கிறது.

சத்யஜோதி தயாரிக்கவுள்ள இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யார்? என்பது கேள்விகுறியாகி இருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சாம் சி.எஸ் என கூறப்பட்டது. அவர் இதனை மறுக்கவே தற்போது அனிருத்தே இசையமைப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பொங்கல் தினத்தில் விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

An important announcement on Pongal 2018 about Viswasam movie

More Articles
Follows