சிகரெட்டோடு உங்களை பார்ப்பது வெட்கம்; விஜய்க்கு அன்புமணி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு சர்கார் என பெயரிட்டுள்ளனர்.

இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

ஃப்ர்ஸ்ட் லுக்கில் மிகவும் இளமையாகவும், ஸ்டைலிஷ்யாகவும் வாயில் சிக்ரெட்டோடு காணப்படுகிறார்.

ஏற்கெனவே ஏஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தின் போஸ்டரிலும் சுருட்டு பிடிப்பது போல இருந்தார் விஜய்.

அப்போதே இதற்கு எதிர்ப்பு வந்தது.

தற்போது இந்த முறையும் விஜய்யின் தம் அடிக்கும் போஸ்டருக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

இதுகுறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், அந்த சிகரெட் மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் ஸ்டைலாக நீங்கள் காட்சி தருவீர்கள் என்று ஒரு பதிவில் பதிவிட்டுள்ளார்.

அதோடு, புகைப்பழக்கம் கொல்லும், புகைப்பழக்கம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற வாசகத்தையும் அவர் ஹேஷ்டேகாக பயன்படுத்தியுள்ளார்

மற்றொரு பதிவில் இந்த சிகரெட்டோடு உங்களை பார்ப்பது வெட்கமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

மேலும் அடுத்த பதிவில் இனி சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என விஜய் கூறிய பழைய செய்தியை பேப்பரை பதிவிட்டுள்ளார்.

Shame on Vijay for promoting Smoking in Sarkar says Anbumani Ramadoss

Dr ANBUMANI RAMADOSS‏ @draramadoss
Shame on Actor Vijay for promoting Smoking in this first look of his next movie. #ActResponsibly #DoNotPromoteSmoking

Dr ANBUMANI RAMADOSS‏ @draramadoss
You’ll look more stylish without that cigarette. #SmokingKills #SmokingCausesCancer

சர்கார் பட 3 போஸ்டர்கள்; விஜய் பிறந்தநாளில் நள்ளிரவு கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிக்க, ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று ஜீன் 21ஆம் தேதி மாலை வெளியானது.

இதனையடுத்து இன்று ஜீன் 22ஆம் தேதி பிறக்கும் சமயத்தில் இதன் செகன்ட் லுக் வெளியானது.

இதில் விஜய் ஸ்டைலிஷ் ஆக காஸ்ட்லியான காரில் லேப் டாப் ஆப்ரேட் செய்வது போல விஜய் அமர்ந்திருக்கிறார்.

மேலும் சில நிமிடங்களில் 3வது ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டது.

இன்று விஜய்யின் பிறந்தநாள் என்பதால் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த3 சர்கார் போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெரும்பாலோரின் வாட்ஸ் அப் பிக்சர்ஸ் கூட சர்கார் மையமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sarkar movie 3 posters goes viral Vijay fans in Birthday celebration

சர்கார் டைட்டில்.; அமிதாப் படத்தலைப்பை வைத்ததால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் 62வது படத்திற்கு *சர்கார்* எனத் தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக்கை சற்றுமுன் வெளியிட்டனர்.

இது சில விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

இதற்கு அவர்கள் கூறிய காரணங்கள்…

தமிழன் என்று பெருமையாக தளபதி விஜய் ரசிகர்கள் சொல்லி கொள்வோம்.

ஆனால் சர்கார் என்ற சொல் ஹிந்தி சொல்.

மேலும் இதே பெயரில் அமிதாப்பச்சன் & அபிஷேக் பச்சன் நடித்த படம் 2005ல் வந்து விட்டது.

புது தலைப்பாக அதுவும் தமிழில் வைத்திருந்தால் இன்னும் கெத்தாக இருந்திருக்கும் என்கிறார்கள்.

இருந்தாலும் நாளை தளபதி பிறந்தநாளை கெத்தாக கொண்டாடுவோம் என்றனர்.

பிலிமி ஸ்ட்ரீட் செய்தி எதிரொலி: விஜய் 62 தலைப்பு சர்கார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வரும் தளபதி 62.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார.
இந்நிலையில் இப்படத்திற்கு சர்கார் என பெயரிட்டு உள்ளனர்.

பூமராங் படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசிய மேகா ஆகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு கதாபாத்திரத்தின் அழகிய சாரம் அதன் குரலுடன் சேர்த்தால் தான் முழுமையடைகிறது. உண்மையில், அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பது அந்த குரல் தான். இதை ஒரு நடிகர் நிறைவேற்றும்போது தான் ​​ செயற்கையாக இல்லாமல் அந்த கதாபாத்திரங்களின் உண்மைத்தன்மை வெளிப்படுகிறது.

மேகா ஆகாஷ் தன் சொந்த குரலில் டப்பிங் பேச எடுத்த முயற்சியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் அவரின் ‘பூமராங்’ படத்தில் அவரின் அசத்தலான நடிப்பு மற்றும் மயக்கும் அழகுடன் அவரது குரலும் உங்களை வசீகரிக்கும்.

இயக்குனர் கண்ணன் திரைக்கதை எழுதும்போது, கதாபாத்திரங்களை உருவாக்குவதில் மிகவும் ‘பர்ஃபெக்‌ஷனை’ விரும்புபவர். மேலும், வேறு ஒருவரை டப்பிங் பேசவைத்து கதாபாத்திரம் முழுமையடையாமல் இருப்பதை அவர் விரும்புவதில்லை.

அதனால் படத்தில் நடித்த நடிகர்களையே டப்பிங் பேச சொல்லி வலியுறுத்துவார்.

அவரது முதல் படமான ‘ஜெயம் கொண்டான்’ படத்தில் பாவனாவை டப்பிங் பேச வைத்ததில் இருந்தே தெளிவாக தெரிந்தது. மேகா ஆகாஷும் இதில் சேர்வார்.

இது பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, “மேகா ஆகாஷை சொந்த குரலில் டப் செய்ய வலியுறுத்துவதற்கு முக்கிய காரணமே நடிகை மேகா ஆகாஷ் தான்.

பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரத்தில் அவருடைய சிறப்பான நடிப்பு அப்படி. மிக சிறப்பாக நடித்திருக்கிறார், படத்தை பார்த்து நாங்கள் வியந்தோம்.

அவருடைய திறமைகள் அவளுக்கு டப்பிங் செய்யும் வேறு சில கலைஞர்களால் மறைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை.

ஆரம்பத்தில், மேகா ஆகாஷ் தயக்கத்தோடு தான் இருந்தார். ஆனால் அவர் அதை செய்தபோது, ​​எங்களுக்கு நிறைவாக அமைந்தது” என்றார்.

மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்து, இயக்கியிருக்கிறார். அதர்வா முரளி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் இந்துஜா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் உபென் படேல் வில்லனாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி காமெடியில் கலக்க, காமெடி நடிகர் சதீஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

2017 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பான இந்துஜா பார்வையாளர்களைக் கவரக்கூடிய ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

ஏராளமான திறமையாளர்களின் சங்கமமான இந்த “பூமராங்” நிச்சயம் பேசப்படும் படமாக அமையும்” என பெருமையுடன் கூறுகிறார் இயக்குனர் ஆர் கண்ணன்.

ரஜினி குடித்த தேநீருக்கும் பெயர் வைத்த டார்ஜிலிங் ரிசார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங் மற்றும் அதை சுற்றி உள்ள மலை பிரதேசங்களில் நடந்து வருகிறது.

30 நாட்கள் இந்த படத்துக்காக தனது தேதிகளை கொடுத்து இருக்கிறார் ரஜினி.

இந்த படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் கடந்த 10 நாட்களாக குர்சியாங்கில் உள்ள அலிதா என்ற தனியார் விடுதியில் தங்கி இருக்கிறார்.

இந்த விடுதியில் உள்ள டைரக்டர்ஸ் பங்களா என்னும் இல்லத்தில் தங்கினார்.

ரஜினி தங்கியதால் இந்த விடுதி பிரபலமாக மாறிவிட்டது. அவர் தங்கியதை நினைவு கூறும் வகையில் அந்த இல்லத்தின் பெயரையே ரஜினிகாந்த் வில்லா #3 என்று மாற்றி இருக்கிறார் விடுதியின் அதிபர்.

இது குறித்து விடுதியின் இயக்குனர் மேகுல் பரேக் கூறும்போது…

‘சூப்பர் ஸ்டார் எங்கள் விடுதியில் தங்கியது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்.

அவரது நினைவாக ஒரு மரம் நட்டு, அதற்கு புதிதாக வண்ணம் பூச உள்ளோம்.

இனி அவர் தங்கிய அந்த விடுதி இல்லம் ரஜினிகாந்த் பெயரிலேயே அழைக்கப்படும்’ என்று கூறி இருக்கிறார்.

ரஜினி தங்கி இருந்த நாட்களில் பருகிய தேநீருக்கு தலைவா ஸ்பெ‌ஷல் என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

அந்த தேநீர், விடுதியின் வரவேற்பறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு டிரேயில் வைக்கப்பட்டுள்ளது.

More Articles
Follows