தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென், பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2010ல் ரிலீசான திரைப்படம் ’ஆயிரத்தில் ஒருவன்’.
இந்த திரைப்படத்தின் மேக்கிங் பாராட்டப்பட்டாலும் படம் வசூலில் மோசம்தான்.
ஆனாலும் ரசிகர்கள் இப்படத்தின் 2ஆம் பாகம் குறித்து அடிக்கடி கேட்பதுண்டு.
இதனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டார் செல்வராகவன். ஆனால் இதில் கார்த்திக்கு பதிலாக தனுஷ் நடிக்கிறார் என அறிவித்தார்.
2024 ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் ரிலீஸ் எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் முன்னணி நாளிதழ் ஒன்றில் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த செய்திக்கு இயக்குனர் செல்வராகவன் தன் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில்…
“எப்போது அந்த மர்மமான ஆரம்பகட்ட பணிகள் நடந்தது ? அந்த மர்மமான தயாரிப்பாளர் யார் என கூற முடியுமா? உங்களது தரப்பிலிருந்து இந்த படம் குறித்து சரியாக விசாரியுங்கள் என பதிலடியாக தெரிவித்துள்ளார்.
Selva Raghavan’s reply to Aayirathil Oruvan 2 drop news