யுவன் தயாரிப்பில் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி-சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தால் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தவர்கள் இயக்குனர் சீனுராமசாமி மற்றும் நடிகர் விஜய்சேதுபதி.

இதனையடுத்து இந்த கூட்டணி அடிக்கடி இணைய ஆரம்பித்து நல்ல தரமான படங்கள் கொடுத்து வருகின்றனர்.

தர்மதுரை மற்றும் இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் இணைந்தனர்.

இதில் இடம் பொருள் ஏவல் படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் மாமனிதன் என்ற புதிய படத்திற்காக இணைகின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பது மட்டுமல்லாது படத்தை தயாரிக்கவும் செய்கிறார் யுவன் சங்கர் ராஜா.

இதன் சூட்டிங்கை 2018 ஜனவரியில் தொடங்கவிருக்கிறார்களாம்.

Seenu Ramasamy and Vijay Sethupathi teams up for Maamanithan Produced by Yuvan

மந்த்ராலயத்தில் ரஜினி தரிசனம்; விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில மாதங்களுக்கு முன், ரசிகர்களை சந்திக்கும்போது போர் வரும்போது சந்திப்போம் என தன் அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இதனையடுத்து அவரது அரசியல் பிரவேசம் எப்போது? என மீடியாக்கள் ஆராய்ந்து அலச தொடங்கின.

இதனிடையில் வருகிற டிசம்பர் 12ஆம் தன் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என கணிப்புகள் வரத் தொடங்கின.

இந்நிலையில் இன்று ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்ராலயத்தில் தனது ஆஸ்தான தெய்வமான ராகவேந்திரரை தரிசிக்க சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

அவரது இந்த பயணம் ஆன்மிகம் மட்டுமல்லாமல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

காரணம் தனது இஷ்ட தெய்வமான ராகவேந்திரரிடம் ஆசி வாங்கவே அவர் அங்கு சென்றதாகவும், விரைவில் அரசியல் அறிவிப்பு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Rajini visited Mantralayam today So he may announce his political entry soon

ஆர்யாவ கட்டிக்க ஆசைப்படும் பெண்ணா நீங்கள்.? இந்த நம்பர்ல பேசுங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஆர்யாவுக்கு சினிமாவுலகில் ஜிம்பாய் மற்றும் ப்ளேபாய் என்ற செல்லப் பெயர்கள் உண்டு.

ஆனால் இவர் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் பேச்சுலராக வாழ்ந்து வருகிறார்.

அண்மையில் ஒரு வீடியோவில் லவ் எதுவும் செட் ஆகல. நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன். என தன் நண்பருடன் ஜிம்மில் பேசியிருந்தார்.

அந்த வீடியோ லீக்காகி இணையத்தில் வைரலானது.

தற்போது அதற்கு விளக்கம் அளித்து மற்றொரு வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது…

ஜிம்மில் பேசிய அந்த வீடியோ லீக்கானது. ஆனாலும் அதில் நான் பேசியது அனைத்தும் உண்மைதான்.

என் திருமணத்திற்கு பெண் தேடுகிறேன். எந்த நிபந்தனையும் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் 73301-73301 என்ற எண்ணுக்கு போன் செய்யலாம் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நாங்க போன் பண்ணி பார்த்தவரை கிடைத்த தகவல் இதோ கீழே…

அந்த நம்பருக்கு போன் செய்தபோது ஆர்யாவின் குரல் கேட்டது. ஆனால் அவர் பேசல. அவரின் ரெக்கார்டு வாய்ஸ் அது.

என்னை தொடர்பு கொண்டதற்கு நன்றி. உங்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வந்திருக்கும்.

அதில் உள்ள இணைப்பை க்ளிக் செய்து உங்களின் விபரங்களை பூர்த்தி செய்து அனுப்புங்கள். நாம் விரைவில் மீட் செய்வோம் என்று ஆர்யாவின் குரல் ஒலித்தது.

எஸ்.எம்.எஸ்.ஸில் வந்த லிங்கை க்ளிக் செய்தால் அதில் நம் பெயர், வயது, முகவரி, பாஸ்போர்ட் எண், பாஸ்போர்ட் முடியும் தேதி, தாய் மொழி உள்ளிட்ட தகவல்களை கேட்கிறார்கள்.

இவையில்லாமல் உங்களை பற்றிய அறிய 1 நிமிட வீடியோவையும் அப்லோடு செய்ய கேட்கிறார்கள்.

எவ்வளவோ பண்ணிட்டோம். ஆர்யாவுக்காக இதை செய்ய மாட்டோமா? என்கிறீர்களா? அப்போ போன போடுங்க. என்ஜாய்.

If you wish to marry Actor Arya then call this number

தென்னிந்தியாவில் முதன்முறையாக யுனிசெப்பின் நல்லெண்ண தூதரானார் த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யுனிசெஃப் அமைப்பு இந்தாண்டிற்கான உலக குழந்தைகள் தின (நவ.20) தலைப்பாக “குழந்தைகள் கையகப்படுத்துதல்” (Children Take Over) என்பதை தேர்வு செய்தது.

அதை பிரபலப்படுத்தும் விதத்திலும், அந்த அமைப்பின் நல்லெண்ண தூதராக த்ரிஷாவை நியமிக்கவும் யுனிசெஃப் அமைப்பு சென்னையில் குழந்தைகளுடன் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியை யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலைவர் ஜோப் சகாரியா, யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராக பொறுப்பேற்ற நடிகை த்ரிஷா, தமிழ்நாடு குழந்தை உரிமை அமைப்பின் தலைவர் நிர்மலா மற்றும் யுனிசெஃப் அதிகாரி சுகதா ராய் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினர்.

யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலைவர் ஜோப் சகாரியா அளித்த பேட்டியில், “இப்போதுள்ள குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதை விட, அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன.

அதனால்தான், இந்தாண்டு தலைப்பை “குழந்தைகள் கையகப்படுத்துதல்” என்று வைத்துள்ளோம். இன்று (நவ.20) டெல்லியில் உள்ள யுனிசெஃப் மையத்தை குழந்தைகள் நடத்தப் போகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில், நடிகை த்ரிஷாவை யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராக அறிவிக்கவுள்ளோம். தென் இந்தியாவில் இதுவரை யுனிசெஃப் யாரையும் நியமித்தது கிடையாது. இதுவே முதல் முறை.” என்று அவர் கூறினார்.

குழந்தைகளின் கைதட்டலுக்கு இடையில் நடிகை த்ரிஷா பேசியதாவது…

“உரிமை என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டியது. நாம் அனைவரும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அனைத்து கொடுமைகளுக்கும் குரல் கொடுக்கவேண்டும்.

நான் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த விரும்புகிறேன். திறந்த இடத்தில் மலம் கழித்தல், ஊட்டச்சத்து குறைபாடு இவை அனைத்தும் இல்லாத நாட்டை நாம் உருவாக்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு படிப்பு மிக அவசியம், அவர்கள் படிப்பதனால் நாடு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்” என்று பேசினார்.

பின் த்ரிஷா குழந்தைகளிடம் உரையாடினார். யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலைவர் ஜோப் சகாரியா, த்ரிஷாவிற்கு நினைவுப் பரிசு அளித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் குழந்தைகளுடன் த்ரிஷா புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Trisha to be UNICEF celebrity advocate for child rights

பத்மாவதி பட சர்ச்சை; தீபிகா படுகோனுக்கு கமல்ஹாசன் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் உருவாகியுள்ள பத்மாவதி திரைப்படத்தை டிசம்பர் 1-ந் தேதி ரிலீஸ் செய்யவிருந்தனர்.

இப்படம் வெளியாவதற்கு முன்பே ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்று பா.ஜனதா, ராஜபுத்ர சேனா, கர்னி சேனா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும், அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்து வருகின்றனர்.

இதனால் இந்தி திரையுலகமே பரபரப்பாக காணப்படுகிறது.

இதனையடுத்து தீபிகா படுகோனேவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘பத்மாவதி’ படத்திற்கு கமல் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

“எனக்கு தீபிகாவின் தலை வேண்டும் என்கிறார்கள். அவரது உடலைவிட தலைக்கு அதிக மதிப்பளியுங்கள். அதைவிடவும் அதிகமாக அவரது சுதந்திரத்தை மதியுங்கள். தீபிகாவின் சுதந்திரத்தை அவருக்கு மறுக்காதீர்கள்.

எனது திரைப்படங்களை பல சமுதாயத்தினர் எதிர்த்துள்ளனர். எந்த ஒரு விவாதத்திலும் தீவிரவாதம் ஏற்புடையதல்ல.

புத்தியுள்ள இந்திய தேசமே.. விழித்தெழு. இது சிந்தனைக்கான தருணம். நாம் பலமுறை சொல்லிவிட்டோம். கேளாய்.. இந்திய தாயே” இவ்வாறு கமல் பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற மிரட்டல் பிரச்சினைகளால் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தின் ரிலீசை மறுதேதி அறிவிக்காமல் தள்ளி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Want Deepika Padukones Head Saved Says Kamalhaasan

I wantMs.Deepika’s head.. saved. Respect it more than her body.Even more her freedom. Do not deny her that.Many communities have apposed my films.Extremism in any debate is deplorable. Wake up cerebral India.Time to think. We’ve said enough. Listen Ma Bharat
— Kamal Haasan (@ikamalhaasan)

வேலைக்காரன் படத்தை வாங்கிய மெர்சல் புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வருகிற டிசம்பர் 22ஆம் தேதி இப்படத்தை வெளியிடவுள்ளதால் தற்போது பட விநியோகத்தை மும்முரமாக தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இதன் செங்கல்பட்டு ஏரியா உரிமையை மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மற்ற ஏரியாக்களை வாங்கிய நிறுவனங்கள்…

#Velaikkaran TN Our Distributors…
1. Chennai city – 24am studios through SPI cinemas
2. Chengalpet – sri thenandal films
3. Cbe – Kanthaswamy arts centre
4. 23MR – Sushma cine arts
5. TT – Boss films international
6. Salem – Five star picture
7. North n South – S picture
8. TK – Zion films

ஆடியோ மற்றும் டிவி உரிமை

9. Audio – Sony music
10. Satellite – Vijay TV

Mersal producer Sri Thenandal films bought Chengalpet rights of Velaikkaran

More Articles
Follows