ஆக்ஷன் ரூட்டுக்கு மாறும் காமெடி ஹீரோ சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் “ஓடி ஓடி உழைக்கனும்“.

இதில் சந்தானம் நாயகனாக நடிக்க, நாயகியாக அமோரா தஸ்தர் நடிக்கிறார்.

இவர்களுடன் யோகி பாபு நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி மதுசூதனராவ், மன்சூரலிகான், மயில்சாமி ஆகியோரும் நடிக்கின்றனர்.

கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையைமக்கிறார்.

எடிட்டிங்கை ராமாராவ் கவனித்துக் கொள்ள, ஞானகிரி இயக்குகிறார்.

இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் சந்தானம் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுடன் மோதினாராம்.

ஹீரோவானாலும் இதுநாள் வரை காமெடி ரூட்டில் பயணித்த சந்தானம், தற்போது ஆக்ஷனுக்கு மாறியுள்ளார்.

முறையாக பயிற்சி பெற்று, கராத்தேவில் சந்தானம் பிரவுன் பெல்ட் வாங்கியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

தல-தளபதி பட இயக்குனருக்கு ஓகே சொல்வாரா இளையராஜா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனியின் உதவியாளரும் நண்பருமான பாணி இயக்கியுள்ள படம் ராணி. இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் இரண்டு குழந்தைகள் நடித்துள்ளனர்.

அவர்களுக்கு இணையான பாத்திரத்தில் தன்ஷிகா நடித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு பேசும்போது…

“புது இயக்குனர்கள் எல்லாம் எப்படி? இளையராஜாவை புக் செய்கிறார்கள் என தெரியவில்லை.

நானும் இளையராஜாவின் இசையில் என் படங்கள் உருவாக வேண்டும் என நினைப்பேன்.

ஆனால் அதற்கான கதையை நான் அமைக்க வேண்டும்.

கதை இவ்வளவுதானா? இதற்கு நான் இசையமைக்க வேண்டுமா? என இளையராஜா என்னை பார்த்து கேட்டு விடக் கூடாது.

ஒரு நல்ல கதையை உருவாக்கி அவரிடம் கால்ஷீட் கேட்க வேண்டும்” என தன் ஆதங்கதை கூறினார் பேரரசு.

விஜய் நடித்த திருப்பாச்சி, அஜித் நடித்த திருப்பதி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் பேரரசு என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விஷாலை தொடர்ந்து விஜய்யுடன் மோதும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பரதன், அடுத்த வருடம் 2017 பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதே நாளில் சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள கத்தி சண்டை படமும் வெளியாகவுள்ளது.

இந்த இரண்டு படங்களும் மோதவுள்ள நிலையில், தற்போது, இத்துடன் 3வது ஒரு படமும் இணையக்கூடும் என சொல்லப்படுகிறது.

அது கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள கவண் படமாகும்.

இதில் டி.ராஜேந்தர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் காதலியின் கணவரை இளையராஜாவுடன் ஒப்பிட்ட பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படப்புகழ் தன்ஷிகா நடிப்பில் பாணி இயக்கியுள்ள படம் ராணி.

இளையராஜா இசையமைத்துள்ள இதன் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பேசியதாவது…

“நான் என் வாழ்க்கையில ரெண்டே பேர பாத்துதான் பொறாமைப்படுறேன்.

என்னையும் ஒரு பெண் காதலித்தாள். ஆனால் எங்க மேரேஜ் நடக்கல.

இப்போ அவளோட புருசன பாத்து நான் பொறாமைப்படுறேன்.

அதுப்போல் இப்போது இளையராஜாவையும் பார்த்து பொறாமைப்படுறேன்.

இளையராஜாவின் இசையை கேட்டால் எவ்வளவு நீண்ட பயணம் வேண்டாலும், போரடிக்காமல் பயணிக்கலாம்.

ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் இசைஞானி இளையராஜாவை மிஞ்ச முடியாது” என்று பேசினார் பேரரசு.

த்ரிஷா இருந்தும் பூர்ணாவுடன் இணையும் அர்விந்த்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அர்விந்த் சாமி, த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் சதுரங்க வேட்டை 2 படத்தை இயக்கி வருகிறார் நிர்மல் குமார்.

இவர் விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மனோபாலா இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை இதன் முதல் பாக இயக்குனர் வினோத் அமைத்துள்ளார்.

இந்நிலையில் இதில் மற்றொரு நாயகியாக இணைந்துள்ளார் பூர்ணா.

இவர் அரவிந்த்சாமியின் மனைவியாக நடிக்கிறாராம்.

பெண்களுக்கு மருத்துவ முகாம் நடத்திய அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் படங்கள் பற்றிய தகவல்கள் வராவிட்டாலும் அவரது ரசிகர்கள் ஏதாவது ஒன்றை செய்து, அஜித்தை பேச வைத்து விடுகின்றனர்.

திருச்சி, பொன்மலையை சேர்ந்த மிரட்டல் ஸ்டார் அஜித் நற்பணி மன்றத்தினர் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து, பெண்களுக்கான மருத்துவ உடல் நல விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்தி உள்ளனர்.

இதில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு பயனைடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

 

More Articles
Follows