தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
முதல் நாளிலேயே இப்படத்திற்கு ரூ. 38 கோடி வரை வசூல் கிடைதுள்ளதாக கூறப்படுகிறது.
அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள இப்படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இப்படம் ரிலீஸ் ஆன ஒரு சினிமா தியேட்டரில் ஒரு காட்சியின் அனைத்து டிக்கெட்டுகளையும் (120 டிக்கெட்) சங்கர் முசாபீர் என்பவர் புக் செய்து இருந்தார்.
ஆனால் அந்த காட்சியை அவர் தனது மனைவி கீதாஞ்சலியுடன் மட்டுமே கண்டு களித்திருக்கிறார்.
இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றதாம்.
தன் மனைவி சல்மான்கானின் தீவிர ரசிகை என்பதால் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இந்த சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்திருந்தாராம் கணவர் சங்கர் முசாபீர்.