ஆர்.கே.சுரேஷ் சூட்டிங்கில் விபத்து; கொதிக்கும் வெந்நீரில் விழுந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ க்குப் பின் வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார்.

இதுவரை ஒரு வில்லனாக அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இப்போது தனி நாயகனாக ‘தனி முகம் ‘ ‘பில்லா பாண்டி” வேட்டை நாய்” போன்ற படங்களிலும் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.

‘வேட்டை நாய் ‘ கதை சொல்லி ஆர்.கே. சுரேஷைக் கவர்ந்தவர் தான் எஸ்.ஜெய்சங்கர்.

இவர் ஏற்கெனவே அப்புக்குட்டியை நாயகனாக்கி ‘மன்னாரு’ இயக்கியவர்.

‘வேட்டை நாய் ‘இவரது இரண்டாவது படம்.

நாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க, நாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார்.

ராம்கி, வாணி விஸ்வநாத் , தம்பி ராமையா, சரவண சக்தி , ‘என் உயிர்த் தோழன் ‘ ரமா ஆகியோரும் நடிக்கிறார்கள் . இப்படத்தை தாய் மூவீஸ் தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு மதுரை பெரியகுளம் பகுதியில் நடைபெற்றது.

ஆர்.கே.சுரேஷ் மற்றும் அறிமுக வில்லன் நடிகர் விஜய் கார்த்திக் இருவரும் மோதிக் கொள்வது போல சண்டைக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது.

நாக் அவுட் நந்தா சண்டைக் காட்சிகளை இயக்கிக் கொண்டிருந்தார். ஒளிப்பதிவாளர் முனீஸ்வரன் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்.

அடுப்பில் பானைகளை வைத்து தீ எரிவது போன்ற இடத்தில் படமானது.

அடுப்பில் வெந்நீர் பானைகள் கொதித்துக் கொண்டிருந்தன.

சண்டைக் காட்சி படமான போது அடுப்பில் சரிந்து விழுந்த ஆர்.கே.சுரேஷ் மீது வெந்நீர் பானை விழுந்து வெந்நீர் கொட்டித் தீக்காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனைக்கு மதுரை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

RK Suresh admitted in Hospital due to fire accident in Vettai Naai shooting spot

முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கிவரும் 2.0 படத்தை முடித்துவிட்டு ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இப்படத்தை தன் வுண்டர்பார் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார் தனுஷ்.

ரஜினி மற்றும் தனுஷ் இடையே மாமனார்-மருமகன் உறவு இருந்தாலும், இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறையாகும்.

இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து அவர் கூறியதாவது… கடவுள் நினைத்தால் நிச்சயம் இணைந்து நடிப்போம்” என தெரிவித்துள்ளார்.

மே 10ஆம் தேதிக்காக காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என திரையுலகில் பன்முகம் கொண்ட தனுஷ் அண்மையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

மேலும் கோலிவுட், பாலிவுட் வரை சென்ற இவர் வருகிற மே 14ஆம் தேதி முதல் ஹாலிவுட் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

நடிப்பு உலகில் இவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களை கடந்துவிட்டார்.

இந்நிலையில் இவர் சினிமா உலகில் கால் பதித்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதாம்.

எனவே, வருகிற மே 10ஆம் தேதி இதனை கொண்டாட தனுஷ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
துள்ளுவதோ இளமை என்ற படத்தில் தன் தந்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா மூலம் அறிமுகமானார் தனுஷ்.

இப்படத்தின் திரைக்கதை வசனத்தை செல்வராகவன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘படையப்பாவுக்கு பிறகு பாகுபலிதான்..’ விநியோகஸ்தர் சக்திவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 28ஆம் தேதி பாகுபலி2 வெளியாகி இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தவாரம் மே 5ஆம் தேதி வெளியாகவிருந்த எய்தவன் படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்துள்ளார் இதன் விநியோகஸ்தர் சக்திவேலன்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…
“15 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் இருக்கிறேன். இப்படியொரு ரசிகர்கள் கூட்டம் எந்தவொரு படத்துக்கும் வரவில்லை.

ஷங்கர் இயக்கி ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்துக்குக் கூட இவ்வளவு கூட்டம் தியேட்டருக்கு வரவில்லை.

குடும்பம் குடும்பமாக மக்கள் பாகுபலியை பார்க்க வருகிறார்கள்.

சினிமாவுக்கே செல்லாதவர்களையும் இப்படம் இழுத்து வந்திருக்கிறது.

‘படையப்பா’ படத்துக்குப் பிறகு, மக்கள் இவ்வளவு கூட்டம் கூட்டமாக வருவது ‘பாகுபலி 2’ படத்துக்குத்தான்.

தமிழக விநியோகத்தில் கண்டிப்பாக இப்படம் முந்தைய சாதனைகளையும் முறியடிக்கும்” என்றார்.

இந்தியளவில் அதிக வசூல் செய்த ‘தங்கல்’ படத்தின் சாதனையை ‘பாகுபலி 2’ முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் பட இயக்குனர் விஷ்ணுவர்தனின் தாடி ரகசியம் இதுதானாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளன் இயக்கத்தில் கிருஷ்ணா, சந்திரன், நந்தினி, கருணாஸ், கருணாகரன், உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கிரகணம்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பட நாயகன் கிருஷ்ணா பேசும்போது, தன் அண்ணன் வைத்துள்ள தாடி பற்றிய ரகசியத்தை கூறினார்.

அதில்…

‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் கதையை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தேடி அலைந்தபோது விஷ்ணுவர்தனுக்கு வயது 22 தான்.

அதனால் சின்னப்பையனாக இருக்கிறானே என அவரை நம்பி யாரும் வாய்ப்பு தரவில்லை.

அதனால் தான் எங்கள் தந்தை பட்டியல் சேகரே தயாரிப்பாளராக மாறினார். அதன்பின் பெரிய ஆளாக தெரிவதற்காக தாடி வைத்துக்கொண்ட விஷ்ணுவர்தன் இன்றுவரை தாடியை எடுக்காமல் அப்படியே மெயின்டெய்ன் பண்ணி வருகிறார்.

அஜித்தின் பில்லா (2007), ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்-கௌதம்மேனன் படத்தில் இணைந்த சுனைனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கிவரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ் நடித்தி வருகிறார்.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் கௌதம்மேனன் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

இதில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளரை பெயரை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல், படத்தின் பாடல்களை வெளியிட்டு வருகிறார் கௌதம் மேனன்.

இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு நாயகியாக சுனைனா இணைந்திருக்கிறார்.

More Articles
Follows