விஷால் புகார் எதிரொலி; ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலர் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து இவர் தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி அவர்களை சந்தித்து பேசினார்.

இது பல்வேறு சர்ச்சைகளை தமிழக அரசியலில் கிளப்பியது.

இதனையடுத்து தேர்தல் அலுவலர் வேலுச்சாமி மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதனால் அவர் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக புதிதாக பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை வரவேற்றுள்ள விஷால் கூறியுள்ளதாவது…

ஆர்கே நகர் இடைதேர்தலில் எனது மனு பரிசீலனையின் போது எழுந்த சர்ச்சைகளை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே கருதுகிறேன். நான் தேர்தலில் நிற்கிறேனோ இல்லையோ, இதன் மூலம் இனியாவது ஆர்கே நகரில் நேர்மையான தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் நானும், ஆர்கே நகர் மக்களும் தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

RK Nagar Election Official Replaced After Row Over Vishals Disqualification

2018ல் தன் காதலரை மணக்கிறார் கமல் மகள் ஸ்ருதிஹாசன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை சென்று கலக்கியவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

இவர் அண்மையில் சுந்தர் சி.யின் பிரம்மாண்ட படமான சங்கமித்ரா படத்தில் இருந்து விலகினார்.

தற்போது தன் தந்தை கமல்ஹாசன் இயக்கி தயாரிக்கும் நடிக்கும் சபாஷ் நாயுடு படம் மட்டுமே இவரது கைவசம் உள்ளது.

இந்நிலையில், தனது லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கார்சோல் என்பவருடன் சென்னையில் நடந்த ஆதவ் கண்ணதாசன் திருமண விழாவில் கலந்துக் கொண்டார்.

அப்போது தனது தந்தை கமலுக்கு தன் காதலரை அறிமுகம் செய்து வைத்துள்ளாராம்.

இதற்கு முன்பே தன் அம்மா சரிகாவுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டாராம்.

தற்போது ஸ்ருதிஹாசனுக்கு 31 வயது ஆகிறது.

எனவே அடுத்த வருடம் இவரது திருமணம் நடக்கும் என கூறப்படுகிறது.

Shrutihaasan will marry his London based Boy friend Michael Corsale

தமிழ் ராக்கர்ஸில் வெளியாகும் தேதியை வெளியிட்ட தமிழ்ப்படம் 2.0

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து படங்களையும் கிண்டல் செய்து வெளியான படம் தமிழ்ப்படம்.

சி.எஸ்.அமுதன் இயக்கிய இப்படத்தில் சிவா நாயனாக நடித்திருந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது.

இப்படத்தின் தலைப்பிலேயே ரஜினியின் 2.ஓ படத்தை கிண்டல் செய்யும் வகையில் அமைத்துள்ளனர்.

அதாவது தமிழ்ப்படம் 2.0 என்று பெயரிட்டு அதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

வருகிற டிசம்பர் 11ஆம் தேதி இப்படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் படத்தை அடுத்த வருடம் 2018 ஏப்ரல் 25ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படம் ரிலீஸ் ஆன அடுத்த நாள் 2018 ஏப்ரல் 26ஆம் தேதி தமிழ் ராக்கர்ஸிஸ் இணையத்தளத்தில் இப்படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

அதில் பைரசி பார்ட்னர் தமிழ் ராக்கர்ஸ் எனவும் டிசைன் செய்துள்ளனர்.

இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த 10 படங்களுக்கும் கிடைத்த ஒரே சர்ட்டிபிகேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் 2012ல் தான் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த 5 வருடங்களில் 10 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஒரு படத்தில் சிறிய வேடம்.

மோகன்ராஜா இயக்கத்தில் இவர் நடித்துள்ள வேலைக்காரன் படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது இப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

இவர் இதுவரை நடித்துள்ள அனைத்து படங்களுமே யு சான்றிதழ் பெற்றுள்ளது என்பதால் இவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கொடிவீரன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிகர்கள் : சசிகுமார், பசுபதி, விதார்த், மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, பாலசரவணன், விக்ரம் சுகுமாரன், இந்திரகுமார் மற்றும் பலர்.
இயக்கம் : முத்தையா
இசை : என்.ஆர். ரகுநந்தன்
ஒளிப்பதிவு: எஸ்ஆர் கதிர்
எடிட்டிங்: வெங்கடராஜன்
பி.ஆர்.ஓ. : நிகில்
தயாரிப்பு: சசிகுமார்

கதைக்களம்…

சசிகுமார் தன் சிறு வயதிலேயே தாயை இழக்கிறார். அன்றுமுதல் தன் தங்கை சனுஷாவை தன் பாதுகாப்பில் வளர்க்கிறார்.

தன் தங்கைக்காக எதையும் செய்ய துணிந்தவர் இவர்.

இவர் மஹிமாவை காதலிக்கிறார். இந்நிலையில் மஹிமாவின் அண்ணன் விதார்த்துக்கும் சசிகுமாரின் தங்கை சனுஷாவுக்கும் திருமணம் நடக்கிறது.

வருவாய்துறை அதிகாரியான வித்தார்த்தை வில்லன் பசுபதியும் இவரது தங்கை பூர்ணாவின் கணவன் இந்திரகுமாரும் எதிர்க்கின்றனர்.

விதார்த்தை போட்டுத் தள்ள அவர்கள் திட்டம்போட, தன் தங்கை கணவனை எப்படி சசிகுமார் காப்பாற்றினார்? என்பதே கொடிவீரன்.

கேரக்டர்கள்…

வழக்கமான கிராமத்து நாயகன் சசிகுமார். என்னடா வழக்கமான? என்கிறீர்களா?

பாய்ந்து பாய்ந்து ஆக்சனில் கலக்குவார். நாயகியை காதலிப்பார் ஆனால் காதலிக்கும் பெண் கட்டிபிடிக்க வந்தால் வேண்டாம் என்பார்.

இடுப்பில் அல்லது வாயில் கத்தி வைத்து முறுக்கு மீசை பார்வை பார்ப்பார் தானே… இதே வழக்கம் இதிலும் தொடர்கிறது.

கருப்பன் பட கெட்டப்பிலேயே இதிலும் வில்லனாக வருகிறார் பசுபதி. இதில் மிரட்டல் கொஞ்சம் அதிகமாகவே வருகிறது.

இவரின் உறவினராக குற்றம் 23 படத்தயாரிப்பாளர் இந்திரகுமார் நடித்துள்ளார். அதிகாரம் கேரக்டரில் அசத்தல். அதிக காட்சிகள் கொடுத்திருந்தால் இன்னும் கலக்கியிருப்பார்.

பாலசரவணன் இருந்தும் படத்தில் துளியும் காமெடியில்லை.

மலர் கொடியாக மஹீமா நம்பியார், வேல்விழியாக பூர்ணா, பார்வதியாக சனுஷா ஆகிய மூன்று நடிகைகள்.

இவர்கள் மூவரும் பாசமலர் தங்கைகளாக வருகிறார்கள்.

இதில் பூர்ணா அதிகம் ஸ்கோர் செய்கிறார். படத்தில் மொட்டை அடித்து மிரட்டியிருக்கிறார்.

விதார்த் இருக்கிறார். அவ்வளவுதான்.

 

தொழில்நுட்ப கலைஞர்கள்…

எஸ்.கதிரின் ஒளிப்பதிவில் கிராமம் பளிச். அந்த மீன் பிடி காட்சியும் பைட் சீனும் நன்றாக ரசிக்க வைக்கிறது.

என்ஆர் ரகுநந்தன் இசையில் தாலாட்டு பாடலும் டூயட் பாடல் மட்டுமே ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை நன்றாக இருந்தாலும் சில நேரங்களில் அதுவே ரொம்ப இறைச்சலாக இருக்கிறது.

 

இயக்கம் பற்றிய அலசல்…

கிராமத்து மண்வாசனை படம் கொடுப்பதில் முத்தையா கெத்துதான். ஆனால் அதே பார்முலாவை கொஞ்சம் மாற்றுவது நல்லது.

சசிகுமாரின் தங்கை சனுஷாவை தாய்மாமன் பெண் கேட்க, நீ என்ன வேலை செய்ற? பெண் கொடுக்க என்கிறார்கள்? அதுசரி. படத்தில் சசிகுமார் என்ன வேலை பார்க்கிறார்? என்றே தெரியவில்லை.

அவரிடம் ஏது பணம்? அவருக்கு மட்டும் டீச்சராக வேலை பார்க்கும் மஹிமாவுடன் காதல், கல்யாணம் எல்லாம் ஓவர்.

கொடிவீரன்… கிராமத்தில் கொடி பறக்கும்

விமலின் மன்னர் வகையறா-வை வாங்கிய சினிமா சிட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சதுரங்க வேட்டை-2’ படத்தை தொடர்ந்து ‘மன்னர் வகையறா’வை வெளியிடும் சினிமா சிட்டி ..!

நல்ல விலைக்கு கைமாறிய விமலின் ‘மன்னர் வகையறா’..!

விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை நல்ல விலை கொடுத்து சினிமா சிட்டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அரவிந்த்சாமி – த்ரிஷா நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘சதுரங்க வேட்டை-2’ படத்தையும் இந்த நிறுவனம் தான், தமிழகம் முழுக்க வெளியிட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

பி.ஜி.முத்தையா மற்றும் சூரஜ் நல்லுசாமி ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

வரும் 2018 ஜனவரியில் பொங்கல் திருநாளன்று இப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

More Articles
Follows