சிவகார்த்திகேயனுக்கு சிக்கலை ஏற்படுத்திய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படத்தின் விநியோகமும் ஜெட் வேகத்தில் பறந்து வருகிறது.

இந்நிலையில் இதே நாளில் ஜீவாவின் கவலை வேண்டாம், விஜய் சேதுபதியின் றெக்க உள்ளிட்ட படங்களும் ரிலீஸ் ஆகிறது.

அண்மையில் வெளியான தர்மதுரை, நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதால் றெக்க படத்திற்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் றெக்க படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் சிவபாலன் பிக்ஸர்ஸ், இப்படத்தை தமிழகத்தில் மட்டும் 550க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம்.

இதனால், பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகிய சிவகார்த்திகேயன் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும் எனத் தெரிகிறது.

உலகளவில் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷுக்கு கிடைத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா படங்களை இயக்கி வருகிறார்.

தற்போது இவருக்கு சர்வதேச அளவில் பெருமைமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஐ.நா அமைப்பின் பெண்கள் நல்லெண்ண தூதராக தென்னிந்தியாவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இது அறிவிக்கப்பட்ட முதல் இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எம்மா வாட்சன், Anne Hathaway, Nicole Kidman போன்ற பிரபல நடிகைகளும் இதுபோன்ற பதவிகளை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஃபுல் மப்புல கார் ஓட்டி போலீஸ் வண்டியில் இடித்த அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல படங்களிலும் ஹீரோவாகவும், அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாகவும் நடித்தவர் அருண் விஜய்.

இவர் இன்று அதிகாலை 2,30 மணியளவில் நடிகை ராதிகா மகள் வரவேற்பு பார்ட்டியை முடித்துக் கொண்டு வீடு திரும்பியிருக்கிறார்.

அப்போது நன்றாக குடி போதையில் இருந்திருக்கிறார்.

இதனால், சென்னை நுங்கம்பாக்கம் அருகே நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் மோதியுள்ளார்.

எனவே, அருண் விஜய்யின் காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை விஜயகுமாரிடம் இது தொடர்பாக போலீசார் விசாரித்துள்ளனர்.

விஜய்யின் ராசி படியே தலைப்பை உறுதி செய்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் தன் 60வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு கடந்த சில தினங்களாகவே நம்ம வீட்டுப்பிள்ளை, உங்க வீட்டுப்பிள்ளை மற்றும் நம்ம வீட்டு பிள்ளை என்று பெயர்களில் ஒன்று வைக்கப்படலாம் என செய்திகள் வந்தன.

இதனிடையில் எம்ஜிஆர் ரசிகர்கள் இதுபோன்ற தலைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே ரஜினி-மம்மூட்டி நடித்து சூப்பர் ஹிட்டடித்த தளபதி என்ற டைட்டிலையே வைக்க முடிவு செய்து இருக்கிறார்களாம்.

விஜய்யே இந்த டைட்டிலை பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் சமீபகாலமாக வந்த விஜய் படங்களில் தலைப்பு ஒரு வார்த்தையாகவே இருந்தது.

கத்தி, ஜில்லா, துப்பாக்கி, தெறி, உள்ளிட்ட இவை அனைத்தும் வெற்றியை பெற்றுள்ளதால், அந்த ராசி படியே தலைப்பிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் ‘கபாலி’ படத்தில் நெருப்புடா’ பாடலை பாடி உலகம் முழுவதும் பிரபலமானார் அருண்ராஜா காமராஜ்.

எனவே இவரது பாடல்களுக்கு நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

எனவே, நிதானமாக படங்களை கமிட் செய்து வருகிறார் இவர்.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கும் ‘மரகத நாணயம்’ என்ற ஒரு பாடலை ஒரு பாடலை எழுதி பாடவுள்ளார்.

இதில் ஆதி, நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ளனர்.

ஆட்டுக் குட்டியை மையமாக வைத்து இப்பாடல் எழுதப்பட்டுள்ளது.

சின்ன சின்ன ஆசை என்ற பாடலை போல் அனைத்து வரிகளின் முடிவில் ஆடு என்ற வார்த்தை முடியுமாம்.

இப்பாடலும் சூப்பர் ஹிட் ஆகும் என அவரை வாழ்த்துவோம்.

திருட்டு விசிடியை எதிர்த்த ஸ்டண்ட் மாஸ்டருக்கு பதிலடி கொடுத்த பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தியா இயக்கி நடித்துள்ள கன்னா பின்னா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், இயக்குனர்கள் பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது…

“இனி யாராவது திருட்டு சிடி பாத்தீர்கள் என்றாலோ, விற்றீர்களோ என்றாலோ கைகள் உடைக்கப்படும், உங்கள் கடைகள் கொளுத்தப்படும்” என ஆவேசமாக பேசியார்.

அதன் பின்னர் பாக்யராஜ் பேசும்போது…

“திருட்டு விசிடி கடைகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது என சேரன் சொன்னார்.. ஆனால் அவை ஓப்பனாகவே இருக்கும்போது நம்மால் என்ன பண்ண முடியும்.

இதில் மக்களை குறைசொல்ல முடியாது. பஸ்ஸில் ஏறும்போதே ஊர்ப் பெயரோடு சேர்த்து அந்த பஸ்ஸில் என்ன படம் போடுகிறோம் என்பதையும் சொல்லித்தான் ஆட்களை ஏற்றுகிறார்கள்.

அதற்காக கண்ணை மூடிக்கொண்டு பயணம் செய்ய முடியுமா? கேபிள் டிவியிலும் புதுப்படம் போடுகிறார்கள். பார்க்காமல் இருக்க முடியுமா?

மக்கள் ரசிக்கும் விதமாக நல்ல படங்களை கொடுத்தால் மக்கள் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள்.

ரஜினி உட்பட பலரும் ஜோக்கர் படத்தை பாராட்டினார்கள். நல்லா இருக்குன்னு சொல்றாங்களேன்னுதான் நானும் தியேட்டரில் போய் பார்த்தேன்.

நாம் நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடிகாரர்களால் ஒன்றும் பண்ண முடியாது. என்றார்.

மேலும் பேசியதாவது…

படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் தயவு செய்து தயாரிப்பாளரை காப்பாற்றுகிறேன் என யாரும் படம் எடுக்காதீர்கள்.

முதலில் உங்களை காப்பாற்றிக்கொள்ள படம் எடுங்கள். தயாரிப்பாளர் ஒரு படத்தில் காசை விட்டால் கூட, அடுத்து இன்னொரு பெரிய நடிகரை வைத்து படம் எடுத்து சம்பாதித்துக்கொள்வார்.

முதலில் உங்களை காப்பாற்றிக்கொள்ள படங்களை எடுங்கள். அது உங்களையும் காப்பாற்றும்.. அதோடு தயாரிப்பாளரையும் காப்பாற்றிவிடும்.

என்று பேசினார் பாக்யராஜ்.

More Articles
Follows