ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் பிரகாஷ் மற்றும் கேப்டன் எம்.பி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படம் புரடக்ஷன் நம்பர் ஒன்.

இப்படத்தின் துவக்க விழா இன்று காலை 9 மணி அளவில் சென்னை கைகான் குப்பத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் எல் கே சுதீஷ், இயக்குனர்கள் பாக்கியராஜ், விஜய் மில்டன், சரவணன், பார்த்திபன், தயாரிப்பாளர் கே ஆர் பிலிம்ஸ் சரவணன், ஜாகுவார் தங்கம், PRO டைமண்ட் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

சைக்கோ திரில்லராக உருவாகும் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிஷன் ராஜ். ஒளிப்பதிவு சிவ சாரதி, இசைஅமைப்பாளராக விக்கி மற்றும் ஹரி, படத்தொகுப்பு ராம்நாத், கலை பழனி குமார், சண்டைப்பயிற்சி ரக்கர் ராம்.

இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரகாஷ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மியா யுக்தா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கலை இயக்குனர் கிரண், போஸ் வெங்கட், KPY பாலா, அமுதவாணன், வில்லனாக அஜய் கண்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கி சென்னை, கோவை, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற உள்ளது.

தனது மக்கள் தொடர்பாளர் எம்.பி. ஆனந்த் தயாரிக்கும் படத்தை தயாரிப்பாளர் எல்.கே சதீஷ் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, கிளாப் அடித்து துவக்கி வைத்தனர்.

Raw creations and Friday film factory joins for Psyco thriller movie

மக்கள் அழைக்கட்டும்..; தேவைப்படும் போது அரசியல் கட்சி.. விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தான் பாஜகவில் சேரவுள்ளதாக வெளிவந்த தகவல் உண்மையில்லை என எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கமளித்தார் என்ற தகவலை பார்த்தோம்.

இது தொடர்பாக அவரின் அண்மை பேட்டியில்…. “விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும்.

மக்கள் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் போது அவர் வருவார்.

நாங்களாக வருவதைவிட மக்கள் அழைக்கும்போது அரசியலுக்கு வருவது சக்திவாய்ந்ததாக இருக்கும்.

விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தவே தற்போது முழுகவனம் செலுத்தி வருகிறேன்.

பாஜவுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை”

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

Director SAC talks about Vijay’s Political entry

நீட் தேர்வில் நீதி உண்டா?.. கவர்னர் கண் திறப்பாரா..? கமல்ஹாசன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் உள்ளது.

இதனிடையே இன்று பிற்பகல் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், அன்பழகன் உள்ளிட்டோர் நேரில் ஆளுநரை சந்தித்து விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், 7.5% உள்ஒதுக்கீடு தர ஆளுநர் விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையில் நீட் தேர்வு முடிவு வெளியீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக, அத்தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை மீது அரியலூர், சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் புகார் அளித்தனர்.

மேலும் விடைத் தாளில் விடைகள் மாறியுள்ளதாக, விடைகள் மாற்றப்பட்டு பூஜ்ஜியம் என மதிப்பெண்கள் வந்திருப்பதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

விடைத்தாள் அதாவது ஓஎம்ஆர் நகல்கள் பதிவேற்றம் செய்த பின் விடைக்குறிப்பை வைத்து சரிபார்த்ததில் நிறைய மதிப்பெண்கள் கிடைத்ததாகவும், தற்போது அந்த விடைத்தாள் நகல் மாற்றப்பட்டு பதிவெண், கையெழுத்து ஆகியவை ஒரே மாதிரியாக உள்ளதாகவும் மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டரில்…

தேர்விலேயே ஆள் மாறாட்டம்,
முடிவுகளில் முழுக் குழப்பம்.

இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு,
உள் ஒதுக்கீடும் துறப்பு.

கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா?

கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள்.

Kamal Haasan wants justice over NEET exam

தமிழ் உணர்வை விட, மனித நேயம் மேலானது..; விஜய்சேதுபதி மகளுக்கு ஆதரவாக ராஜ்கிரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ என்ற படத்தில் முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் இப்பபடம் அறிவிப்பு வெளியானதிலிருந்தே கடும் எதிர்ப்புகள் உருவானது.

தமிழினத்துக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிக்கக் கூடாது என பல தரப்பினரும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தமிழக அமைச்சர்களும் விஜய்சேதுபதி எதிர்கால நன்மை கருதி் நல்ல முடிவை எடுக்க வலியுறுத்தினர்.

எனவே விஜய் சேதுபதியை இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு அறிக்கை வெளியிட்டார் முத்தையா முரளிதரன்.

அவரது அறிக்கையை ரீட்வீட் செய்து “நன்றி.. வணக்கம்” என்று கூறி ‘800’படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி.

இதனிடையில் விஜய் சேதுபதி மகளுக்கு Rithik (Handle: @ItsRithikRajh) என்ற ட்விட்டர் ஐடியில் இருந்து வக்கிரமான வார்த்தைகளுடன் ரேப் மிரட்டல் விடுக்கப்பட்டது.

அந்த மர்ம நபரின் செயலுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

இதுகுறித்து இயக்குனரும் நடிகருமான ராஜ்கிரண் கூறியதாவது…

தம்பி விஜய்சேதுபதி,
ஒரு அற்புதமான மனிதர்.
இரக்க மனமும்,
ஈகை குணமும் கொண்டவர்.

தமிழ் உணர்வாளர், நல்ல பண்பாளர்.

அவரை நான் பார்த்ததோ,
அவருடன் பேசியதோ
இல்லையென்றாலும்,
அவரைப்பற்றி என் காதுக்கு வந்த
நல்ல செய்திகள் ஏராளம்…

அவருக்கு என்ன அழுத்தங்களோ,
800 படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு…
இப்பொழுது அதிலிருந்து விலகிவிட்டார்.

இந்த ஒரு சம்பவத்தை வைத்து,
அவரின் மகள் மீது வன்மம் காட்டுவது,
எந்த வகையிலும் ஏற்புடையதல்ல…
இது தமிழனின் பண்பும் அல்ல.

தமிழ் உணர்வு என்று,
வசனம் பேசினால் மட்டும் போதாது,
தமிழ்ப்பண்போடு வாழ்ந்து காட்ட வேண்டும்.

தமிழ் உணர்வு என்பது அவசியம் தான்.
அதற்காக தரம் தாழ்ந்து,
அவரையோ, அவர் குடும்பத்தினரையோ
விமர்சிப்பதென்பது ஈனத்தனமானது…

தமிழ் உணர்வை விட,
மனித நேயம் மேலானது.

மறைந்த தேசிய தலைவர் பிரபாகரனின்
வாழ்க்கையை முழுமையாக
படித்தவர்களுக்கு இது புரியும்…

– Actor Rajkiran

Actor Rajkiran’s press note on Vijay Sethupathis daughter issue

பாஜக-வில் இணைகிறார்களா எஸ்ஏசி & வடிவேலு..? விஜய் டெல்லி செல்கிறாரா..? அவர்களுக்கே தெரியாதாமே.!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த வருடம் இயக்கி வெளியான படம் ‘கேப்மாரி’.

தற்போது சமுத்திரகனி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஏ.சி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் பரவியது.

ஆனால் அதை அவர் மறுத்திருந்தார்.

இதனையடுத்து ‘நானும் விஜய்யும் டெல்லி போகிறோம்’ என எஸ்.ஏ.சந்திரசேகர் பெயரில் உள்ள டிவிட்டர் பக்கத்தில் ஒரு தகவல் பதிவானது.

இதுகுறித்து.. பணத்துக்காக 1 சதவீதம் கூட உண்மையில்லாத செய்திகள் வருகிறது. எல்லாமே பொய்..

இந்த மாதிரியான பொய் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது புகார் அளிக்க போகிறேன்” என தெரிவித்துள்ளார் எஸ்ஏசி.

அதுபோல்.. நடிகர் வடிவேலுவும் பாஜகவில் இணையவுள்ளதாக வதந்திகள் பரவியது.

Actor Vadivelu and Director SAC joining the BJP ?

விஜய்சேதுபதி மகளுக்கு வக்கிரமான பாலியல் மிரட்டல்..; மர்ம நபர் மீது வழக்குப் பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ என்ற படத்தில் முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் இப்பபடம் அறிவிப்பு வெளியானதிலிருந்தே கடும் எதிர்ப்புகள் உருவானது.

தமிழினத்துக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிக்கக் கூடாது என பல தரப்பினரும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தமிழக அமைச்சர்களும் விஜய்சேதுபதி எதிர்கால நன்மை கருதி் நல்ல முடிவை எடுக்க வலியுறுத்தினர்.

எனவே விஜய் சேதுபதியை இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு அறிக்கை வெளியிட்டார் முத்தையா முரளிதரன்.

அவரது அறிக்கையை ரீட்வீட் செய்து “நன்றி.. வணக்கம்” என்று கூறி ‘800’படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி.

இதனிடையில் விஜய் சேதுபதி மகளுக்கு Rithik (Handle: @ItsRithikRajh) என்ற ட்விட்டர் ஐடியில் இருந்து வக்கிரமான வார்த்தைகளுடன் ரேப் மிரட்டல் விடுக்கப்பட்டது.

அந்த மர்ம நபரின் செயலுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

தற்போது, அந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நபர் மீது 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Actor Vijay Sethupathi’s Daughter Gets Rape Threat Over Muttiah Muralitharan Biopic “800 the movie”

More Articles
Follows