தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி கௌரவித்துள்ளது.
இதனை அடுத்து இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் :
“இந்தியத் திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான 2019 ‘தாதா சாகேப் பால்கே’ விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது..”
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்…
“முதன் முதலில் தன் நடிப்பு திறமையை கண்டு பிடித்த பஸ் டிரைவர் நண்பன் ராஜ்பகதூர், தன் அண்ணன் சத்தியநாராயணன், குரு கே பாலசந்தர், தன்னை வாழ வைத்த தெய்வங்களாகிய ரசிகர்கள் முதல் எவரையும் மறக்காமல் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் வாழ்த்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், நண்பர் கமல்ஹாசன் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
இதோ அந்த அறிக்கை….
Rajinikanth’s heart felt tweet on #DadasahebPhalkeAward