தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
லைகா தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
நாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர்.
படத்தின் சூட்டிங் முடிவடைந்து பாடல்கள் வெளியீட்டு விழா துபாயில் நடந்து முடிந்து போதிலும் இன்னும் படம் வெளியாகவிலை.
கிட்டதட்ட ஒரு ஆண்டுகளாக இதன் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.
ஏற்கெனவே கிராபிக்ஸ் காட்சிகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை விட ரூ. 100 கோடியை ஏற்றியிருந்தார் ஷங்கர்.
தற்போது மீண்டும் ஒரு முறை 100 கோடியை இந்த பட்ஜெட்டில் சேர்த்துவிட்டாராம்.
தற்போத்து வரை இதன் பட்ஜெட் ரூ. 550 கோடியை தொட்டுள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
இப்படத்தின் சூட்டிங்கின் போதே படத்தை முழுக்க முழுக்க 3டியில் படமாக்கியிருக்கிறார் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 2019 ஆண்டு இப்படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
