எவரும் தொட முடியாத சாதனையில் ரஜினியின் 2.0 பட வசூல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த நவம்பர் 29ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் வெளியானது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டது.

550 கோடியில் உருவான இப்படம் உலகம் முழுவதும் 15000 தியேட்டர்களில் வெளியானது.

ரிலீஸாகி இதுவரை 20 நாட்களை நெருங்கும் வேளையில் சென்னையில் மட்டும் 24 கோடியை நெருங்கியுள்ளதாம்.

இதற்கு முன்பு ரஜினி நடித்த கபாலி 3-வது வாரத்தில் சென்னையில் ரூ18 கோடியை மட்டுமே வசூல் செய்தது.

இதுவரை எந்தவொரு தமிழ் படமும் பண்டிகை இல்லாத நாட்களில் வெளியாகி இப்படியொரு சாதனை படைத்தது இல்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் சென்னையில் 82 ஸ்கிரீன்களில் இப்படம் ஓடிக் கொண்டிருப்பது கோலிவுட்டையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அதுபோல் மதுரையில் எந்த படமும் 7 தியேட்டருக்கு மேல் வெளியானதே இல்லையாம்.

ஆனால் 2.0 மட்டும் 23 தியேட்டர்களுக்கு மேல் வெளியானது.

தற்போதும் 15 திரையரங்குகளில் ஓடிக்கொண்டே ரூ 18 கோடியை வசூல் செய்துள்ளது.

அதுபோல் கர்நாடகாவில் ரூ 19 கோடியை அள்ளியுள்ளது.

இதன் மூலம் ஆல் டைம் நம்பர் 1 தமிழ் படம் என்ற சிறப்பையும் கேரளாவில் ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

தமிழகம் முழுவதும் இதுவரை ரூ 200 கோடியை தாண்டியுள்ளது.

உலகளவில் தமிழ் பதிப்பில் 455 கோடியையும் தெலுங்கு, ஹிந்தி பதிப்புகளில் 265 கோடியையும் வசூலித்துள்ளதாம்.

ஆக மொத்தம் இதுவரை உலகளவில் ரூ 720 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

Rajinis 2pointO movie breaking many records in Box office collection

*கடைசி எச்சரிக்கை* படக்குழுவுக்கு கைகொடுத்த கலைப்புலி தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி எச்சரிக்கை படத்தின் முதல் டீசரை இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு வாழ்த்தினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

முன்னதாக கடைசி எச்சரிக்கை படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு வடிவமைப்பை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டார். இந்தப் படத்தின் தலைப்பும் டிசைன்களும் மீடியா உலகில் பெரும் ஆர்வத்தைக் கிளப்பியிருந்தன.

இந்த நிலையில் படத்தின் டீசரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் கலைப்புலி தாணு.

டீசரைப் பார்த்த பிறகு அவர் பேசுகையில், “இன்று உலகம் மிக ஆபத்தான சூழலில் உள்ளது. இன்றைய சூழலுக்கு ஏற்ற படமாக உருவாகியுள்ளது கடைசி எச்சரிக்கை. அனைவரும் பார்க்க வேண்டிய படம். இயக்குநர் சுகுமார் கணேசனுக்கு வாழ்த்துகள்,” என்றார்.

படத்துக்கு வி சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். AIS. நோபல் ராஜா இசையமைத்துள்ளார். கலை: ஏ மாரியப்பன், வி சீனிவாசன் தயாரித்துள்ளார். மக்கள் தொடர்பு எஸ் ஷங்கர். கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் சுகுமார் கணேசன்.

Kalaipuli S Thanu launched Kadaisi Echarikkai movie teaser

ரஜினியின் *பேட்ட* உலக உரிமையை வாங்கினார் டத்தோ மாலிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’.

இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது.

இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு பிடிச்சவன்’, ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ’விஐபி 2’, ’துப்பாக்கிமுனை’ உள்ளிட்ட படங்களையும் இந்நிறுவனம் உலக நாடுகளில் வெளியிட்டது.

மேலும், விரைவில் திரைக்கு வரவுள்ள ’அடங்கமறு’ படத்தினையும் இந்நிறுவனமே வெளியிடவுள்ளது.

வெளிநாடு வெளியீடு உரிமையை பெற்ற மலேசிய மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் வரும் 2019 ஜனவரி பொங்கல் திருநாளில் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்தின் உரிமையை (இந்தியா தவிர்த்து) பெற்றுள்ளதாக அந்நிறுவன உரிமையாளர் ’டத்தோ’மாலிக் தெரிவித்துள்ளார்.

Malik Streams Corporation bagged World theatrical rights of Petta

30 நண்பர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் *காசுரன்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டமால் டுமீல்’ படத்தை இயக்கிய ஸ்ரீ, எஸ்.ஆர்.ஜே. இருவரும் இணைந்து காசுரன் படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ஸ்ரீ நாயகனாகவும், அங்கனா ஆர்யா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

உமரா நிவாசன், லாரன்ஸாக அவினாஷ், மாயாவாக கவிதா ராதேஷியாம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காசுக்கு ஆசைப்படும் காசுரர்களைப் பற்றிய கதை இது. பணம் ஒருவனை எந்த நிலைக்கும் கொண்டு செல்லும் என்பதுதான் இந்தக் ‘காசுரன்’ படத்தின் கதைக் கரு.

கதையின் நாயகன் சிவா ஜெஸ்ஸியை உயிருக்கு உயிராக காதலிக்கிறான். ஜெஸ்ஸியின் தந்தை லாரன்ஸிற்கு சிவாவை பிடிக்காமல் போக, அவனைத் தன் செல்வாக்கை வைத்து பொய் வழக்கில் சிக்க வைத்து சிறையில் அடைக்கிறார்.

சிவா மனமுடைகிறான். ஜெஸ்ஸியும் தன் அப்பாவை வெறுக்கத் துவங்குகிறாள். பல வருடங்கள் கழித்து சிறையிலிருந்து வெளியே வந்த சிவா உமர் என்கிற ரவுடியின் துணையில் லாரன்ஸிடம் இருந்து பணம் பறிக்க நினைக்கிறான்.

இதில் சிவா செய்த திட்டம்தான் என்ன.. உமர் சிவாவிடமிருந்து அந்தப் பணத்தைத் திருட என்ன செய்தான்.. ஜெஸ்ஸி இந்தத் திட்டத்தில் எப்படி மாட்டிக் கொண்டாள்.

சிவாவின் இத்திட்டம் அந்தக் குடும்பத்தில் எத்தனை பேரை பாதித்தது.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இத்திரைப்படம் 30 நண்பர்கள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி அவர்களால் தயாரிக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தமிழில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்கம் – ஜித்தா மோகன், ஒளிப்பதிவு – இ.பராந்தகன், இசை – பிரணவ் கிரிதரன், படத் தொகுப்பு – புவனேஷ் மணிவண்ணன், பாடல்கள் – ஜெ மற்றும் மனோஜ் பிரபாகர், சண்டை இயக்கம் – ஜி, நடனம் – லலிதா ஷோபி, கலை இயக்கம் – எஸ்.எஸ்.சுசீ தேவராஜ், மக்கள் தொடர்பு – நிகில்.

30 Friends united and produced Kaasuran Movie

மஜீத் இயக்கத்தில் விமல்-டயானா சாம்பிகா இணையும் *தி புரோக்கர்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தமிழன்’, ‘பைசா’, ‘டார்ச் லைட்’ படங்களை இயக்கிய இயக்குநர் மஜீத் அடுத்து இயக்கும் படம் ‘தி புரோக்கர்’.

கான்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் நாயகனாக விமல் நடிக்கிறார். நாயகியாக டயானா சாம்பிகா நடிக்கிறார்.

மேலும், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, வினோத், தம்பி ராமையா, மயில்சாமி, மற்றும் காமெடி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கிறார்கள்.

இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் மஜீத், “இது திருமணத்துக்குப் பெண் பார்க்கும் தரகர் சம்பந்தப்பட்ட கதை.

திருமணம் சார்ந்த பின்னணியில் படம் உருவாவதால் கலகலப்புக்கும் விறுவிறுப்புக்கும் படத்தில் பஞ்சமில்லை.

நட்சத்திர பட்டாளங்கள் படம் முழுக்க காமெடி திருவிழாவாக இருக்கும். நம்பி வாங்க; சந்தோஷமா போங்க..” என்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது.

Vimal and Diana Champika starring The Broker

Breaking அஜித்-இமான் கூட்டணியின் விஸ்வாசம் பாடல்கள் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

100 படங்களுக்கு இசையமைத்துள்ள இமான் தன் 101வது படமான விஸ்வாசம் படத்தில்தான் அஜித்துடன் இணைந்துள்ளார்.

அஜித்தின் பேவரைட் டைரக்டர் சிவா இப்படத்தை இயக்கியுள்ளார்.

சத்யஜோதி தயாரித்து வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

அடுத்த வருடம் 2019ல் பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளதால் படத்தின் 2 பாடல்களை அண்மையில் வெளியிட்டனர்.

அடிச்சு தூக்கு என்ற பாடலை அடுத்து வேட்டி கட்டு என்ற பாடலை நேற்று டிசம்பர் 15ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிட்டனர்.

இதனையடுத்து இன்று டிசம்பர் 16ஆம் தேதி அனைத்து பாடல்களை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Ajith Viswasam songs will be released on 16th December 2018

More Articles
Follows