எந்திரன்-கோச்சடையான் படங்களுக்கு பிறகு டிவி.யில் ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 40 ஆண்டுகளாக வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் இவரை டிவி பேட்டிகளில் பார்ப்பது மிக அரிதான ஒன்று.

தன் படம் விளம்பரம் சம்பந்தமாக டிவி நிகழ்ச்சிகளில் கூட கலந்துக் கொள்வதில்லை.

இருந்தபோதிலும் எந்திரன், கோச்சடையான் படங்களின் ரிலீசின் போது டிவி சேனல்களுக்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்திருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு 2.0 பட புரோமோசன் சம்பந்தமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.

நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தன்று மதியம் 3 மணிக்கு ஜீ தமிழ் டிவியில் தன் படம் குறித்த அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

‘2.0’ படத்தை சுமார் 110 கோடிக்கு சாட்டிலைட் உரிமையை ஜீ குழுமம் வாங்கியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கிட்டதட்ட 500 கோடியில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் வருகிற நவம்பர் 29ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.

Rajinikanth interview will telecast in Zee TV on Diwali

36 நாட்களில் சூர்யா பட சூட்டிங்கை முடித்த *உறியடி2* டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016-ம் ஆண்டு விஜய்குமார் என்பவர் இயக்கி நாயகனாக நடித்த உறியடி படம் வெளியானது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தை நடிகர் சூர்யா தன் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து வருகிறார்.

இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் விஜய்குமாரே இயக்கி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா நடித்திருக்கிறார்.

அண்மையில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட `96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாடல் உரிமையை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.

இதன் சூட்டிங் குற்றாலம், தென்காசி போன்ற பகுதிகளில் நடந்துவந்த நிலையில் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இப்பட சூட்டிங்கை வெறும் 36 நாட்களிலேயே விஜய்குமார் இயக்கி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijaykumar completed his Uriyadi2 Shooting in 36 days

பாடல்களை பயன்படுத்த தடை.; மீண்டும் எச்சரிக்கும் இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எக்கோ ரெக்கார்டிங் நிறுவனத்துக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா, அளித்த புகாரில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இதுதொடர்பாக இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு :

2014-ம் ஆண்டு எனது பாடல்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கின்படி இன்றளவும் எனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும்.

அந்த தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு கூடிய விரைவில் வெளிவரும்.

2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் போலீசில் புகார் அளித்தேன்.

சட்டத்துக்கு புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சிடிக்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

நேற்று வெளியான தீர்ப்பில் நீதிபதி எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை.

இந்த வழக்குக்கும், எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சில செய்தி நிறுவனங்கள், “இளையராஜா பாடல்கள் வழக்கு ரத்து”, “இளையராஜா காப்புரிமை வழக்கு தள்ளுபடி” என தவறான செய்தி வெளியிடுகின்றனர்.

தவறான செய்தி வெளியிடுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் நஷ்டஈடு கோரி வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் இளையராஜா.

Songs copyright issue Again Ilayaraaja warning statement

விஜய் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள்.; மெர்சலை முடியடித்த சர்கார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

தமிழகத்தைப் போலவே விஜய்க்கு கேரளாவிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் கேரளாவில் வெளியாகிறது.

கடந்த வருடம் தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியானது. அப்போது கேரளாவில் மட்டும் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகள் 187 வரை திரையிடப்பட்டதாம்.

தற்போது அந்த சிறப்பு காட்சிகளின் எண்ணிக்கையை முறியடித்துள்ளது சர்கார்.

தற்போது வரை 194 சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தீபாவளிக்கு இன்னும் 5 நாட்கள் இருப்பதால் இந்த சிறப்பு காட்சிகளின் எண்ணிக்கை கூடும் என தெரிகிறது.

Vijays Sarkar fans special shows beat Mersal record

ஆம்னியின் மருமகள் ஹிரித்திகாவின் *விடியாத இரவொன்று வேண்டும்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன். சுட்டிக்குழந்தை, கோபாலா கோபாலா, பொற்காலம், பூந்தோட்டம்,வாஞ்சி நாதன் உட்பட ஏராளமான படங்களை தயாரித்தவர்.

தமிழில் பல படங்களில் நடித்ததுடன் தெலுங்கில் ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்தவர் ஆம்னி.

காஜாமைதீன் ஆம்னி திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஆம்னி மீண்டும் தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது ஆம்னியின் தம்பி சீனிவாஸ் மகள் ஹ்ரித்திகா நடிகையாக அறிமுகமாகிறார். கருப்பையா முருகன் இயக்கத்தில் அசோக் நடிக்கும் “விடியாத இரவொன்று வேண்டும்” என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.

அவரிடம் பேசிய போது…

எனது அத்தை ஆம்னிக்கு தெலுங்கில் மிகப் பெரிய செல்வாக்கு… அவர் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார்.

அவரை பார்த்து வளர்ந்த நான் அவரைப் போலவே நடித்து பேர் வாங்க வேண்டும் என்று சின்ன வயதிலிருந்தே ஆசை.

அதே மாதிரி மாமா காஜாமைதீனும் ஏராளமான படங்களை எடுத்து பேர் பெற்றவர்..

இருவரும் பள்ளிப் படிப்பை முடி அதற்குப் பிறகு நடிக்கலாம் என்று ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினர்.

நடிப்பது என்று முடிவான பிறகு முறைப்படி பரத நாட்டியம் மற்றும் சினிமாவுக்குண்டான டான்ஸ் எல்லாம் கத்துக்கிட்டேன்.

பூர்வீகம் ஆந்திரா வளர்ந்தது தமிழ் நாடு இப்போ காலேஜ் படிச்சிட்டு இருப்பது பெங்களூரில். அசோக் நடிக்கும் படத்தில் வாய்ப்பு வந்ததும் ஒத்துக்கிட்டேன். படம் முடிவடைந்து விட்டது.

இனி நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். என் அத்தையை விட நிறைய படங்களில் நடிக்கணும்.

அவரை விட அதிகமான விருதுகளை பெற்று அவர்களிடம் அதை காணிக்கையாக்க வேண்டும். அது தான் என் ஆசை என்கிறார் ஹிரித்திகா.

அரசுப் பள்ளியை புதுப்பித்த லாரன்ஸ்; ஓவியா திறந்து வைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் ஒன்று இருந்தது.

இதை புதுப்பித்து தரும்படி அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை மன்ற செயலாளர் சங்கர் மற்றும் பொதுமக்கள், நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்சிடம் கோரிக்கை வைத்தனர்.

இதன் பேரில் ரூ.5 லட்சம் செலவில் அந்த கட்டிடத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் புதுப்பித்து கொடுக்க ஒப்புக்கொண்டார். அதன்படி அந்த கட்டிட வேலைகள் நடந்து முடிந்தது.

அதன் திறப்பு விழாவில் நடிகர் லாரன்ஸ் கலந்துக் கொள்ளவில்லை.

அவரின் தாயார் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பதால் கலந்துக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளர்.

அவருக்கு பதிலாக நடிகை ஓவியா விழாவில் கலந்து கொள்வார் என தெரிவித்தார்.

இது பற்றி ராகவா லாரன்ஸ் கூறும்போது, “இரண்டு பள்ளிகளோடு நின்று விடப்போவதில்லை… என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பள்ளிகளை சீரமைக்க முடிவு செய்திருக்கிறேன்.

என்னால் தான் படிக்க முடியவில்லை. படிக்கிற குழந்தைகளாவது நிம்மதியாக படிக்கட்டும் என்றார்.

புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் ஓவியா பேசியதாவது,

உங்களை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நானும் ஒரு அரசு பள்ளியில் படித்தவள் தான்.

அரசு பள்ளிகளில் படிக்க அனைவரும் முன்வரவேண்டும். பெரிய பள்ளியில் படித்தால் தான் பெரிய ஆளாக வரமுடியும் என்பது கிடையாது.

விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பெரிய ஆளாக வரலாம். அரசு பள்ளியை நடிகர் – நடிகைகள் தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவ முன்வர வேண்டும்.

இந்த பள்ளி கட்டிடத்தை திறந்து வைக்க எனக்கு வாய்ப்பு அளித்த மாஸ்டர் ராகவா லாரன்சுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நேற்று நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாள். அன்று இந்த திறப்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடித்து வருகிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows