சூர்யாவின் சிங்கம் 3 பற்றிய புதிய தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாபெரும் வெற்றி பெற்ற சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ராதாரவி, நாசர் விவேக், சூரி, ரோபோ சங்கர், சாம்ஸ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க, இவருக்கு அம்மாவாக ராதிகா நடிக்கிறாராம்.

ஹரி இயக்கத்தில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

போஸ்ட் புரோடக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்ததும், அக்டோபர் மாதத்தில் படம் தயாராகிவிடுமாம்.

எனவே இனி சிங்கத்தின் விநியோகம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

சேரனின் ‘கன்னா பின்னா’ பேச்சுக்கு சீமான் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் தியா இயக்கி நடித்திருக்கும் கன்னா பின்னா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சேரன் பேசும்போது, இணையங்களில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதற்கு இலங்கை தமிழர்களும் ஒரு காரணம் என பேசியிருந்தார்.

இதனால் பல்வேறு தரப்பினரும் அவருக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் கூறியதாவது…

சேரன் அப்படிப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டில் நடிகர் சங்கம்..? விஷால் ரியாக்ஷன் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் தனது பிறந்தநாளை முன்னிட்ட நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்டார்.

அங்கே அவர் பேசியதாவது…

“அனைவரும் தங்களுடைய குழந்தைகளை இங்கே அழைத்து வந்து பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறேன்.

நடிகர் சங்கத்தை பற்றி குறைக் கூறுபவர்கள் ஆதாரம் இருந்தால் நிரூபிக்கட்டும்.

இதற்கு முன் சங்கத்தில் நடைபெற்ற பழைய முறைகேடுகள் பற்றிய எல்லா தகவல்களையும் இன்னும் 10 நாட்களில் நாங்கள் வெளியிடுவோம்.

வாராஹியிடம் ஏதாவது ஆதாரம் இருப்பின் அவர் என்னை வந்து நேரடியாக சந்திக்கட்டும்.

நாங்கள் இன்னும் நடிகர் சங்கக் கட்டிடத்துக்கான டெண்டரை விடவில்லை. எங்களுக்கு இன்னும் சி.எம்.டி.ஏ அப்ரூவல் வரவில்லை.

மேலும், தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைவேற்றிருக்கும் தீர்மானம் குறித்து எனக்கு எந்தவொரு கடிதமும் வரவில்லை. நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை” என்று பேசினார் விஷால்.

முன்னதாக நடிகர் சங்க உறுப்பினர் வாராஹி, விஷால், நாசர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் இதுவரை 3 கோடி அளவில் ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராதிகா மகள் ரேயான்-மிதுன் திருமணம்; வாழ்த்திய பிரபலங்கள் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ராதிகாவின் மகள் ரயானுக்கும், கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் இன்று திருமணம் நடைபெற்றது.

மகாபலிபுரத்தில் இவர்களின் திருமணம் திரையுலக பிரபலங்கள் சூழ விமரிசையாக நடைபெற்றது.

நடிகர் சரத்குமார் பட்டு வேட்டி சட்டை அணிந்து தாடியுடன் காணப்பட்டார்.

முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் அவரது நெருங்கிய தோழி சசிகலா வந்திருந்து வாழ்த்தினார்.

மேலும் மணமக்களை வாழ்த்தியவர்கள் யார்? யார்? என்பதை பார்ப்போம்.

இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சிரஞ்சீவி, பிரபு, மணிரத்னம் மற்றும் மனைவி சுஹாசினி, பாக்யராஜ் மற்றும் மனைவி பூர்ணிமா, சிவகார்த்திகேயன், காயத்ரி ரகுராம், வித்யூலேகா ஆகியோரும் நேரில் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக நடைபெற்ற வரவேற்பு விழாவில் விஜய், விக்ரம், சூர்யா, ஜோதிகா, சுந்தர் சி, குஷ்பூ, பிரசன்னா, ஸ்னேகா, ரம்யா கிருஷ்ணன், ப்ரிதா ஹரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

ஸ்டைல் மன்னன் ரஜினிக்காக காத்திருக்கும் ஸ்டைலிஷ் டைரக்டர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் கிங் ஆப் ஸ்டைல் என்றால் அது ரஜினியைத்தான் குறிக்கும்.

இதுநாள் வரை முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடித்து வந்தார் ரஜினி.

அண்மையில் வெளியான கபாலி படத்தில் வளரும் இயக்குனரான ரஞ்சித் இயக்கத்தில் நடித்தார்.

இப்படம் ரஜினியை வேறு ஒரு பரிமாணத்தில் காட்டியது.

எனவே ரஜினிக்காக கதையுடன் பல புதுமுக இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தை முடித்துவிட்டு கௌதம் மேனன் இயக்கத்தில் ரஜினி நடிக்கக்கூடும் என செய்திகள் கோலிவுட்டில் வலம் வருகிறது.

என்னால நடிக்க முடியாது; சூட்டிங்கை நிறுத்திய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்கு தளபதி என்ற பெயர் வைக்கலாம் என முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன் சூட்டிங் பொள்ளாச்சியில் உள்ள போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சாலையில் நடைபெற இருந்தது.

விஜய் பட சூட்டிங் நடப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் அங்கே ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர்.

அப்போது கேரவனை விட்டு வெளியே வந்த விஜய், கூட்டத்தை பார்த்து ஷாக்காகி விட்டாராம்.

நிச்சயமாக இவ்வளவு கூட்டத்திற்கு நடுவே என்னால் நடிக்க முடியாது.

சென்னையில் இதுபோன்று செட் போட்டு சூட்டிங் வைத்துக் கொள்ளலாம் என்று கூறி சூட்டிங்கை நிறுத்தி விட்டாராம்.

எனவே செப்டம்பர் 2-ந்தேதி இதன் தொடர்ச்சி காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட உள்ளது.

More Articles
Follows