தான் தயாரிக்கும் பண்டிகை படத்தில் பாட்டு எழுதிய விஜயலெட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலக்ஷ்மி சென்னை 600028 மற்றும் அஞ்சாதே படங்களில் நடிகையாக முத்திரை பதித்தவர்.

தற்பொழுது அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது மட்டும் இன்றி பாடலாசிரியராகவும் ஆகி உள்ளார்.

கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் ‘பண்டிகை ‘ படத்தின் தயாரிப்பாளரான இவர் இப்படத்தின் பாடல் ஒன்று எழுதியுள்ளார்.

இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார். இப்படத்தை விஜயலட்சுமியின் ‘டீ டைம் டாக் ‘ தயாரித்து ‘ஆரா சினிமாஸ் ‘ விநியோகம் செய்யவுள்ளது.

RH விக்ரம் இசையமைத்துள்ளார்.

”கவிதைகள் எழுதும் வழக்கம் கொண்டவர் விஜயலக்ஷ்மி.

அவரது பல கவிதைகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.’பண்டிகை ‘ படத்தின் ஒரு பாடலுக்காக நாங்கள் சில பாடலாசிரியர்களை அணுகினோம்.

அவர்கள் தந்த வரிகளில் எனக்கு திருப்தி அளிக்காத நிலையில், விஜயலக்ஷ்மி தான் எழுதலாமா என கேட்டார். நானும் தடுக்கவில்லை.

ஒரு சில நாட்களில் கழித்து அவர் எழுதியிருந்த வரிகளை படித்து மலைத்து போனேன். இசைக்கும் கதை நிலவரத்திற்கும் மிக சரியாக பொருந்தும் வரிகள்.

‘அடியே’ என தொடங்கும் இப்பாடல் வரிகளை நானும் இசையமைப்பாளர் RH விக்ரமும் மிகவும் ரசித்தோம். இப்பாடலின் மூலம் இப்படம் மேலும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

பெருகி வரும் இப்படத்தின் எதிர்பார்ப்பு எனக்கு மேலும் பொறுப்புணர்வு தந்துள்ளது. ஜூலை 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள ‘பண்டிகை’ க்கு நல்ல சினிமாவை எப்பொழுதும் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்பளிப்பார்கள் என நம்புகிறேன் என்றார் இயக்குனர்.

Producer cum Actress Vijayalakshmi becames lyricist in Pandigai movie

புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு படம்; எம்ஜிஆர் கேரக்டரில் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் படமாக எடுத்தது ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம்.

தற்போது எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறையும் திரைப்படமாக எடுக்க முன்வந்துள்ளது.

தென்னிந்திய மக்களை, குறிப்பாக தமிழக மக்களையும், ஏழை எளியோரையும் அதிகம் கவர்ந்தவர் எம்ஜிஆர்.

சினிமாவிலும், அரசியலிலும் பல சாதனைகளையும், சோதனைகளையும் கடந்து, மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருப்பவர் அவர்.

இந்நிலையில் அவரின் வாழ்க்கையும் மற்றும் அவருடன் பழகியவர்களின் உருவ ஒற்றுமையுள்ள நடிகர்களை வைத்து இந்த படத்தை எடுக்கவிருக்கிறார்களாம்.

இந்த படத்தில் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த தகவல்களை பத்திரிகை செய்தியாக ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தற்போது தமிழக அரசால் எம்ஜிஆர் 100 ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu ex Chief Minister MGR biopic movie news updates

கமலுடன் இணையும் 14 நட்சத்திரங்கள்.; லட்சுமிராய் மட்டும் மறுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றை கமல் தொகுத்து வழங்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்புக்கு தயாராகிவிட்டது. நாளை ஜீன் 25 இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும்.

இதில்கலந்துக் கொள்ளும் 14 பிரபலங்கள், 100 நாட்கள் வெளியுலகத்தை பார்க்காமல் ஒரே வீட்டிற்குள் அனைத்து வசதிகளுடன் இருக்கலாம்.

ஆனால் டிவி, செல்போன், நியூஸ் பேப்பர், ரேடியா உள்ளிட்ட எந்தவிதமான வெளியுலக தொடர்பும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பது தான் இந்த விதி.

நிறைய கேமராக்கள் இவர்களை கவனித்துக் கொண்டே இருக்கும்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்துக் கொள்ள போகிறார்கள் என்ற பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.

அவர்கள்…

அமலாபால்: திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகை.

சடகோபன் ரமேஷ்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர்

ராய் லட்சுமி: கோலிவுட்டின் கவர்ச்சி நடிகை

ராதாரவி: பழம்பெரும் வில்லன் மற்றும் குணசித்திர நடிகர்

சஞ்சனா ஷெட்டி: ‘ரேணிகுண்டா’ நாயகியான இவர் ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்

அமித் ராகவ்: தொலைக்காட்சி சீரியல் நடிகர்

சிம்ரன்: கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிசி நடிகையாக இருந்தவர்.

உமா ரியாஸ்: குணசித்திர நடிகை

ராகவ்: ரஜினியின் ‘எந்திரன்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர், தொலைக்காட்சி டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர்.

பாலாஜி: சினிமா மற்றும் டிவி காமெடி நடிகர்

சஞ்சிதா ஷெட்டி: சூது கவ்வும், ரம் ஆகிய படங்களின் நாயகி

எச்.ராஜா: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்.

ஹேமங் பதானி: இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர்

நாஞ்சில் சம்பத்: அதிமுக தினகரன் அணியின் ஆதரவாளர், சிறந்த பேச்சாளர்.

இதை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிட்டார்களா? எனத் தெரியவில்லை.

காரணம் இதில் உள்ள ராய்லட்சுமி, நான் அதில் கலந்து கொள்ளவில்லை. யாரோ? தவறாக என் படத்தை சேர்த்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

மிக பிஸியாக இருக்கும் இவர்கள் 100 நாட்கள் எந்தவிதமான வெளியுலக தொடர்பும் இல்லாமல் இருந்துவிடுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அட அதானே போட்டியின் விதிமுறை என்கிறது இன்னொரு வட்டாரம்.

Name list of 14 celebrities going to participate with Kamal in Big Boss Show

ஸ்ரீதேவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய ஏஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகை ஸ்ரீதேவி, கதையின் நாயகியாக நடித்துள்ள படம் “மாம்”.

ரவி உதயவார் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரே இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடவுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை இப்படக்குழுவினர் சந்தித்தனர். அப்போது ஸ்ரீதேவி பேசுகையில்…

எனக்கு வாழ்வளித்த தமிழ் சினிமாவை என்றும் மறக்க மாட்டேன். இந்த 50 வருடங்களில் கிட்டதட்ட 300 படங்களில் நடித்துவிட்டேன்.

ஆனால் ஏஆர். ரஹ்மான் இசையில் நான் நடிக்கவில்லை. என்னுடைய இந்த நீண்ட நாள் ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

இசையமைக்க ஒப்புக் கொண்ட ஏஆர். ரஹ்மானுக்கு நன்றி” என பேசினார்.

AR Rahman fullfilled SriDevis desire by composing music for Mom movie

‘இமானுக்கு சம்பளமே கொடுக்க கூடாது…’ – இயக்குநர் ஆர்.கே. செல்வமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அம்மா கிரியேஷன்ஸ் T.சிவாவின் வெள்ளி விழா வருட திரைப்படம் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்.

இதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் அதர்வா முரளி, சூரி, ரெஜினா கசன்றா, அதீதி போஹன்கர், இசையமைப்பாளர் டி.இமான், இயக்குநர் ஓடம் இளவரசு, பிக்பிரிண்ட் கார்த்தி, 2எம்.பி ரகு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் FEFSI தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசியது…

இப்படத்துக்கு ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற மிகச்சிறப்பான தலைப்பு தமிழில் உள்ளது அதை GGSR என்று ஆங்கிலத்தில் அழைப்பது தவறாகும்.

வரிவிதிப்புக்காக தமிழில் பெயர் வைக்கக்கூடாது. தமிழ் மேல் பற்றோடு நாம் தமிழில் தலைப்பு வைக்க வேண்டும்.தமிழ் நிலைத்து இருக்கவேண்டும் என்றால் எல்லோரும் தமிழில் பெயர் வைக்க வேண்டும்.

தயாரிப்பாளர் சிவா இசையமைப்பாளர் இமானுக்கு சம்பளமே கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்திருந்தால் திருப்பி வாங்கி விடுங்கள். இப்படி நான்கு கதாநாயகிகளோடு சேர்ந்து அவர் இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக உள்ளது.

எனக்கு முதல் படம் கிடைக்க காரணமாக இருந்தவர் அம்மா க்ரியேஷன் சிவா தான். அவர் தான் தயாரிப்பாளர் ராவூதரிடம் பேசி எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தார்.

அந்த படத்தை இடையில் வேறொரு இயக்குநரிடம் போனது. அந்த சமயத்திலும் தயாரிப்பாளர் ராவூத்தரிடம் பேசி மீண்டும் எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தவர் சிவா அவருக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்றார் ஆர்.கே.செல்வமணி.

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் இசை வெளியீட்டு விழாவுக்கு இடையே இயக்குநர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிட்டு விழா நடந்தது.

இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, படத்துக்கு இசையமைக்கும் சத்யா ராஜ், ரம்யா கிருஷ்ணன், சிவா, கயல் சந்திரன், ரெஜினா சசன்றா, நிவேதா பெத்துராஜ்,சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

GGSR Producer should not give salary to Imman says RK Selvamani

அந்தரங்கம் லீக்கானால் பகிரங்கம்தான்; எக்ஸ் வீடியோஸ் இயக்குனர் சஜோசுந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் இதை ஆபாசப் படம் என்றே நினைக்க வேண்டும் அதற்காகவே “எக்ஸ் வீடியோஸ்” என  பெயர் வைத்தோம். ஏனெனில் படம் அதை பற்றித்தான் பேசுகிறது. என்கிறார் படத்தின் இயக்குனர் சஜோ சுந்தர்.

“பாலியல் கல்வி இல்லாத நம் நாட்டில் பாலியல் சார்ந்த படம் எடுப்பதில் தவறில்லை,” என்கிறார் இயக்குநர்.

“இந்த படத்தின் மூலம் நாங்கள் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை.

அதை எவ்வளவு தான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளி உலகத்துக்கு வந்தே தீரும் இதுவே படம் தரும் எச்சரிக்கை.’’

இது சைபர் யுகம், கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது.

அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம் தான்.

அப்படி ஒரு வலையுலக ஆபத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் எக்ஸ் வீடியோஸ்.”

இவர் இயக்குநர் ஹரியின் உதவி இயக்குநர். நடிகர் பிரகாஷ் ராஜ், பொம்மரில்லு பாஸ்கர் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார் சஜோ சுந்தர்.

இப்படத்தை கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எஸ்.பிரகாஷ் தயாரித்துள்ளார்.

“ஆபாச இணைய தளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் உண்டாகும் சமூகச் சிக்கலையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான் இப்படம் உருவாகியிருக்கிறது.’’

என்கிற இயக்குநரிடம் அதற்காக இப்படியா ஆபாசமாகத் தலைப்பு வைப்பது?? என்றபோது,

“இது இளைஞர்களுக்கான படம் அவர்களின் பாலியல் தொடர்பான உளவியல் சிக்கல், எதிர்காலம் பற்றிப் பேசும் படம். குறிப்பாக இளம் பெண்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே படத்தின் நோக்கம்”.

“படத்தின் தலைப்பைக் கண்டு தவறாக கணிப்பவர்கள் படம் பார்த்த பின் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். ஏனெனில் இது இந்த உலகில் ரகசியம் என்று எதுவுமில்லை என எச்சரிக்கும் படமே…”

“கதையின் இயல்பு தன்மைக்காக முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது”.

சென்னை,பெங்களூர்,மும்பை போன்ற இடங்களில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது.

தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு வின்சென்ட் அமல்ராஜ், இசை மெட்ரோ புகழ் ஜோஹன், படத்தொகுப்பு ஆனந்தலிங்க குமார், கலை இயக்கம் கே.கதிர்.

ஜூலையில் இந்த எக்ஸ் வீடியோவை பெரிய திரையில் காணலாம்.

Director Sajo Sundar titled his tamil movie X Vidoes

More Articles
Follows