நிதின்சத்யா தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 28’ மற்றும் இதன் இரண்டாம் பாகத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

அதில் நடித்த நிதின் சத்யா தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் தயாரிக்கும் முதல் படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெபா மோனிகாஜான் நடிக்கிறார். இவர் இதற்கு முன் ‘ஜேக்கப்பிண்டே ஸ்வர்கராஜ்யம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரோபோ சங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கும் ‘கலகலப்பு 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jai signed to play the hero in Actor Nitinsathyaas maiden production

பிக்பாஸ் 2… விஜய் டிவி வைத்த வலையில் சிக்குவாரா சூர்யா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது 100 நாட்கள் நடைபெற்ற நிலையில் இதன் வெற்றியாளராக நடிகர் ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை நடிகர் சூர்யா தொகுத்து வழங்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

ஆனால் இதை சூர்யா தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது.

சினிமா நலனை பார்க்காமல் ரஜினி-கமல் அரசியல் பேசுகின்றனர் – திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறப்பு விழா கடந்த அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற்றது.

இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட கலந்துக் கொண்டனர். அவர்களின் பேசிய பேச்சில் அரசியல் இருந்தது என பலரும் கருத்து தெரிவித்தனர்.

இதனிடையில் தமிழ் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி வருகிற 6 ந்தேதி முதல் புதிய படங்களை திரையிடப்போவதில்லை என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

மேலும் சென்னை ஐநாக்ஸ், பிவிஆர் திரையரங்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இது குறித்து திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளதாவது….

சிவாஜி மணி மண்ட திறப்புவிழாவில் பங்கேற்ற கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தமிழ் திரை உலக நலன் கருதி, 10 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்வதற்கு துணை முதல்வரிடம் கோரிக்கை வைக்காமல் அரசியல் பேசியுள்ளனர்.

தமிழக அரசு இதுவரை வசூலித்து வந்த 30 சதவீத கேளிக்கை வரியை 10 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ள போதிலும் திரையரங்கு கட்டணம் குறையாது என்று அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே ரசிகர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 30 சதவீத கேளிக்கை வரியை தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் சமமாக பகிர்ந்து வந்த நிலையில், அதில் 10 சதவீதத்தை 28 சதவீத ஜி.எஸ்.டியுடன் சேர்ந்து அரசுக்கு வழங்கினால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்றும் இரட்டை வரிவிதிப்பு முறையை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

டூப்ளிகேட் டாக்குமெண்ட் கொடுத்தார் தனுஷ்; திடீர் தந்தை கதிரேசன் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரை மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மீனாட்சி.

இவர்களுக்கு கலைச்செல்வன் என்ற ஒரு மகன் இருந்ததாக கூறியிருந்தனர்.

அவர்தான் இப்போது நடிகர் தனுஷ் ஆக இருக்கிறார் என மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர் .

அதன் பின்னர் நடந்த விசாரணையில் மதுரை கோர்ட்டில் நடிகர் தனுஷ் சார்பாக பிறப்பு, அடையாள ஆவணங்கள் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அந்த வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டு, மேலூரில் தனுஷ்மீது தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது .

இந்நிலையில், கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நடிகர் தனுஷ் பிறப்புச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் ஆகியவை போலியாக தயார் செய்து தாக்கல் செய்துள்ளார்.

எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை புதூர் காவல் நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்துள்ளார்.

மேலும், மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் மீண்டும் இந்த புகார் விஸ்வரூபம் எடுக்கும் எனத் தெரிகிறது.

Kathiresan filed case against actor Dhanush regarding his son issue

வரலட்சுமியின் சக்திக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்-துல்கர்-ராணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் பிரியதர்ஷினி.

இவர் இயக்கவுள்ள புதிய படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

சக்தி என்று பெயரிடப்பட்ட இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ளதால், தமிழ் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

மலையாள பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை துல்கர் சல்மான் வெளியிட, தெலுங்கு போஸ்ட்ரை ராணா தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இது இணையங்களில் வைரலாகி வருகிறது.

சாம்.சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் சூட்டிங் வருகிற 15ம் தேதி தொடங்கவுள்ளதாம்.

Sivakarthikeyan Dulquer Rana released First look of Varalaxmis Sakthi

இங்கிலிஷ் படம் இயக்குனரிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இங்கிலிஷ் படம்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ என்பவர் பெயர் அறிவிக்கப்படாத திரைப்படம் இயக்குவதாகவும் அதில் நான் ( நெடுஞ்சாலை ஆரி) நடிக்க இருப்பதாகவும் அதற்கு துணை புதுமுக நடிகர்கள் தேவை தொடர்புக்கு 9688522162 என்று தனது தொலைபேசி எண்ணையும் ‘ஜெகதீஷ் இயக்குனர்’ (முகப்புத்தக பெயர்) என்பவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு இருந்தார்.

எனது பெயரை பயன்படுத்தி, ஆண்களிடத்தில் பணம் பறித்தும், பெண்களிடத்தில் தவறாக பேசி கொண்டு இருக்கிறார் என எனக்கு நண்பர்கள் மூலம் தகவல் வந்தது.

எனவே நான் எனது பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்கவும். சினிமா மீது ஆர்வம் கொண்டவர்கள் யாரும் இந்த பதிவை பார்த்து ஏமாறாமல் இருக்கவும் கமிஷனர் அலுவகத்தில் ‘ஜெகதீஷ் இயக்குனர் ‘ என்பவர் அவர் முகப்புத்தகத்தில் வெளியிட்ட, அந்த முகப்புத்தக நகலுடன் சென்று காவல் ஆணையாளர் அவரிடம் புகார் அளித்தேன்.

அது தொடர்பாக காவல் உதவி ஆணையாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டதின் பெயரில் ஜெகதீஷ் அவர்கள் செய்த தவறினை ஒப்புக்கொண்டு இனி இவ்வாறான நடவடிக்கைகளை ஈடுபட மாட்டேன் என்று வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கூறினார்.

இது சம்பந்தமான ஆவணங்கள் காவல் நிலையத்தில் உள்ளது

‘ஜெகதீஷ் இயக்குனர்’ என்பவர் முகப்புத்தகத்தில் போட்டு இருந்த பதிவை மட்டுமே நான் நகல் எடுத்து ஊடக நண்பர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் தகவல் அளித்தேன்..

ஜெகதீஷ் என்பவர் ‘இங்கிலிஷ் படம்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் போஸ்ட்டரை பயன்படுத்தி பதிவு போட்டு இருந்ததால் தான் ‘இங்கிலிஷ் படம்’ போஸ்டரை ஆதாரத்திற்காக மட்டுமே காண்பித்தேன் தவறான நோக்கத்தில் காட்டவில்லை.

ஊடக நண்பர்கள் வெளியிட்ட செய்தியினை இங்கிலீஷ் படத்தின் இயக்குனர் தவறாக புரிந்து கொண்டு ” இங்கிலிஷ் படம்” என்கிற தமிழ் திரைப்படத்தில் நான் நடிப்பதாகவும் அந்த இயக்குனர் குறித்து நான் புகார் அளித்ததாகவும் தவறாக செய்தியை அறிந்ததாக கேள்விப்பட்டேன்.

அது சம்பந்தமாக விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்..

மற்றபடி ‘இங்கிலிஷ் படம்’ படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உட்பட யாருக்கும், எவ்வகையிலும் இந்த புகாரில் தொடர்பில்லை.

இது குறித்து என் பெயரையும், ‘இங்கிலிஷ் படம்’ படத்தின் பெயரையும் தவறாக பயன்படுத்தி பொய்யான விளம்பரம் செய்த ‘ஜெகதீஷ்’ என்பவர் மீதே இந்த புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரில் ‘இங்கிலிஷ் படம்’ படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது நான் புகார் அளிக்கப்பட்டதாக தவறான தகவல் பரவி வருவதாக அறிகிறேன்.

நான் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் நடுத்தர குடும்பத்தில் இருந்து பத்து வருடத்திற்கும் மேலாக உழைத்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். அதனால் ஒரு சினிமா கலைஞன் வலியும் ஒரு தயாரிப்பாளர் வலியும் நன்கு அறிவேன்.

‘இங்கிலிஷ் படம்’ இயக்குனரும் என்னைப் போன்று சினிமா பின்னணி இல்லாமல் உழைத்து ஒரு படத்தை இயக்கி இருப்பதாக அறிகிறேன். அவருடைய படத்திற்க்கோ அந்த தயாரிப்பாளருக்கோ எவ்வகையிலும் களங்கம் விளைவிக்கும் செயலை நான் செய்ய நினைக்கவில்லை,

மேற்கண்ட சில ஊடகங்கள் தவறாக வெளியிட்ட செய்திகளால் ‘இங்கிலிஷ் படம்’ தொடர்புடைய நபர்களை காயப்படுத்தி இருந்தால் நான் மனதார வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

இத்துடன் நான் புகார் அளித்த நகலையும் ஆதாரமாக அளித்துள்ளேன்.

Actor Aari statement about English Padam issue

 

More Articles
Follows