யுவன் இசையில் தனுஷுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி மோகன் இயக்கும் மாரி 2 படத்தை தயாரித்து நடித்து வருகிறார் தனுஷ்.

யுவன் இசையமைக்கும் இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி, கிருஷ்ணா, டோவினோ தாமஸ், வித்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைக்கவுள்ளார்.

ஏற்கெனவே நடனத்தில் அசாத்திய திறமை உள்ளவர் தனுஷ்.

எனவே இப்பாடல் செம தர லோக்கலா இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

லெஸ்பியனாக ஐஸ்வர்யா.; அவளா நீ ?என ட்ரோல் செய்யும் *பிக்பாஸ்* ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் கமல் நடத்தும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இதில் நடிகை ஐஸ்வர்யா தத்தாவை சர்வாதிகார ராணி என்று பலரும் கூறுகின்றனர்.

தாடீ பாலாஜி மீது குப்பையை கொட்டினார். நடிகை ரித்விகாவின் துணிகளை நீ்ச்சல் குளத்தில் போட்டார்.

இதனால் கோபமான பிக்பாஸ் ரசிகர்கள் ஐஸ்வர்யாவை திட்டி வருகின்றனர்.

அவரை பழிவாங்க, திட்டி தீர்க்க இணையத்தை அலசியுள்ளனர்.

அப்போது ஒரு வீடியோ சிக்கியுள்ளது.

அந்த படத்தில் ஐஸ்வர்யா லெஸ்பியனாக நடித்துள்ளார்.

எனவே அதை பகிர்ந்து அவளா நீ..?? என ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இரும்புத்திரை.

தமிழ் & தெலுங்கு இரண்டிலும் செம ஹிட்டானது.

தற்போது லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2′ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற அக்டோபர் 18-ல் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், `ரோமியோ ஜூலியட்’, `போகன்’ படங்களை இயக்கிய லஷ்மண் இயக்கத்தில் விஷால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

டிரைலர் வெளியீட்டு விழாவில் ரிலீஸ் தேதியை அறிவித்த *நரகாசூரன்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

`துருவங்கள் பதினாறு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `நரகாசூரன்’.

பல காரணங்களால் இதன் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போனது.

இந்நிலையில் இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.

இதில், இயக்குநர் கார்த்திக் நரேன், நடிகர் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் ஆத்மிகா கலந்து கொண்டனர்.

மற்றொரு நாயகியான ஸ்ரேயா லண்டனில் இருப்பதால் வரவில்லையாம்.

நிகழ்ச்சியில் படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது.

இன்று மாலை 5 மணிக்கு இணையத்தில் வெளியாகிறது.

வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரண், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரோன் ஈதன் யோகன் இசையமைக்கும் இந்த படத்தில் பாடல்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டி கழிச்சுப்பாரு கணக்கு சரியா வரும்; சர்கார் படத்தில் ரஜினி பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ரஜினிகாந்த் நடித்து வெளியான அண்ணாமலை திரைப்படம் 25 ஆண்டுகளை கடந்துவிட்டது.

ஆனாலும் அதில் இடம் பெற்ற கூட்டிக்கழிச்சிப்பாரு கணக்கு சரியா வரும் என்ற டயலாக்கை யாரும் எளிதில் மறக்க முடியாது.

படத்தின் வில்லன் ராதாரவி இந்த டயலாக்கை பல முறை சொல்லிக் கொண்டே இருப்பார்.

ஒருகட்டத்தில் அதே டயலாக்கை ராதாரவியிடம் ரஜினி திருப்பி சொல்வார். அப்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளியது எல்லாம் பெரும் கதை.

சரி. இப்போது விஷயத்துக்கு வருவோம்.

இதுபோன்ற ஒரு டயலாக் விஜய்யின் சர்கார் படத்திலும் இடம் பெற்றுள்ளதாம்.

அரசியல்வாதியாக நடித்துள்ள ராதாரவி இது போன்ற ஒரு டயலாக்கை பல காட்சிகளில் சொல்வாராம்.

அதே டயலாக்கை வேறு ஒரு சமயத்தில் விஜய் சொல்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.

அந்த காட்சி மாஸாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

In Sarkar movie Vijay and Radharavi used Annamalai style punch dialogue

பாலியல் கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க பெண்ணியல் ஆர்வலர்கள் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்து துன்புறுத்தப்பட்டுள்ள நிகழ்வை கண்டித்து சென்னையில் பெண்ணியல் ஆர்வலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய பெண்ணியல் ஆர்வலரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான அப்சரா அவர்கள், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

பெண் குழந்தைகளுக்கு உடன் பழகுவோர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை சிறுவயதிலிருந்தே கற்றுத் தருவது அவசியமான ஒன்று என்று கூறினார்.

அதிலும் பிறரிடம் பழகும் போது தொட்டுபேசுவது பேசுவது குறித்த முழுமையான புரிதலை பெண் குழந்தைகளுக்கு இன்றைய காலக்கட்டத்தில் அவசியமாகியுள்ளது என்றார்.

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும்.

இதன் மூலம் சமூகத்தில் இதுபோன்ற குற்றச்செயல்களை செய்ய நினைப்போருக்கு ஒருவித அச்ச உணர்வை இது போன்ற தண்டனைகள் நினைவுப்படுத்தும் என்றார்.

தொடர்ந்து பேசிய டாக்டர் கமலா செல்வராஜ், பெண் குழந்தைகளை தவறான எண்ணத்தில் தொட நினைத்தால் மரண தண்டனை நிச்சயம் என்பது நினைவுக்கு வரவேண்டும் என்றார்.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து சிறையில் அடைப்பதென்பது தேவையற்ற நிர்வாக செலவுகள் என்றும் டாக்டர் கமலா செல்வராஜ் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மன நல ஆலோசகர் வசந்தி பாபு, நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராமன், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Minor Girl Molestation Case solidarity Protest by Students and Celebrities

More Articles
Follows